search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "calf"

    • விநோதமாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
    • பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன்கள் உதயகுமார் (வயது 25), சூரியா (20) விவசாயி. இவர்கள் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இதில் ஜூனியர் வேலூர் பைபாஸ் என்னும் அழைக்கப்படும் ஒரு வயதான கன்றுக்குட்டியை வளர்த்து வருகின்றனர். இந்தகுட்டிக்கு நேற்று பிறந்தநாள்.

    இதனை வெகுவிமரிசையாக கொண்டாட உதயகுமார், சூர்யா இருவரும் முடிவு செய்தனர்.

    இதற்காக உறவினர்கள், தெரிந்தவர்களை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தனர். வீட்டில் பிரமாண்டமாக அலங்காரம் செய்தனர். மேலும் கன்று குட்டியை குளிப்பாட்டி அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.

    உறவினர்கள் ஊர் பொதுமக்கள் எல்லோரும் நேற்று இவர்கள் வீட்டுக்கு வர இந்த மாட்டின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி விருந்து வைத்து கொண்டாடினர். விநோதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கலந்து கொண்டு, கன்றுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறினர். கிராமங்களில் பொதுவாக பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுவதோடு சரி. ஆனால், அதே கிராமத்தில் ஒரு கன்றுகுட்டிக்கு இப்படி பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா எடுத்ததை ஊரே நெகிழ்ச்சியுடன் பார்த்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மனதார வாழ்த்தி சென்றனர். 

    • மாடு விருத்தி அடைந்ததால் இம்மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர்.
    • சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், உள்நாட்டு இன கால்நடைகளை பாதுகாத்தல், இனவிருத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளப் புல் என்ற ஒரு வகை புல் பிரசித்தி பெற்றது.

    இப்புற்களில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். இந்த புல் வகையை மேய்ந்து உம்பளச்சேரி மாடு விருத்தி அடைந்ததால் இம் மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர் வந்தது.

    இம்மாட்டினங்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது.

    உம்பளச்சேரி எருதுகள் சேர் நிறைந்த சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.

    கடுமையான மழை, வெயிலை தாங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாடு இனமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உம்பளச்சேரி மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக மாடு, கன்றுகளை பராமரித்து வரும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர்சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குனர் மருத்துவர் ஹசன் இப்ராஹிம், மருத்துவர் விஜயகுமார், தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வழக்கம் போல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன.
    • கூட்டத்தில் இருந்த கன்று குட்டி ஒன்று சாலையை கடக்க முடியாமல் வெகுநேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது.

    குனியமுத்தூர்,

    கோவையின் பிரதான சாலைகள் அனைத்திலும் கால்நடைகளும், ஆடுகளும், குதிரைகளும் ஆங்காங்கே சுற்றி வருவதை நாம் அன்றாடம் காண முடிகிறது.

    இன்று காலை கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வழக்கம் போல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன.

    அந்த சமயம் சுந்தராபுரம் பகுதியில் நடுரோட்டில் கால்நடைகள் கூட்டமாக வந்தன. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த கன்று குட்டி ஒன்று சாலையை கடக்க முடியாமல் வெகுநேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது. வாகன போக்குவரத்து காரணமாக கன்று குட்டி எங்கு செல்வது என்று தெரியமால் தவித்தது.

    சாலையின் வலது புறத்தில் கன்று குட்டியுடன் வந்த கால்நடைகள் கூட்டம் கன்றுகுட்டி வந்து விடும் என காத்திருந்தன. ரோட்டில் வேக வேகமாக சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இதனை கண்டு கொள்ளவில்லை. 1 மணி நேரத்திற்கும் மேலாக கன்று குட்டி சாலையை கடக்க முடியாமல் அங்கேயே நின்றது.

    இதனை அந்த வழியாக வந்த சில சமூக ஆர்வலர்கள் பார்த்தனர். உடனடியாக போக்குவரத்தை 1 நிமிடம் நிறுத்தி, அந்தக் கன்று குட்டியை மீட்டு சாலையோரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த கன்று குட்டி, தனது தாயுடன் இணைந்து நடந்து சென்றது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வீட்டில் கட்டி வைத்திருந்தால் இரை போட வேண்டும் என்ற காரணத்திற்காக பெரும்பாலும் ஒரு சிலர் மாடுகளை அவிழ்த்து வெளியே விட்டு விடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கக் கூடியதாகும். கோவை மாநகராட்சி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது கோவை மாநகராட்சி இதில் கவனம் கொண்டு செயல்பட்டால், நன்றாக இருக்கும். என்றனர்.

    • மாடுகளை தினமும் அருகே உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
    • கன்றுக்குட்டியும், வளர்ப்பு நாயும் உயிரிழந்து கிடந்தது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடை கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஹரீஷ். இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    இதுதவிர தனது வீட்டில் மாடுகளும் வளர்த்து வருகிறார். மாடுகளை தினமும் அருகே உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

    நேற்றும் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, மாலையில், மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    பின்னர் கொட்டகையில் மாடுகளை கட்டி விட்டு வீட்டிற்குள் சென்றார்.இந்த நிலையில் சிறிது நேரத்தில் கொட்டகையில் இருந்து கன்றுக்குட்டி அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியான அவர் கொட்டகைக்கு வந்து பார்த்தார்.

    அப்போது அங்கு கன்றுக்குட்டி யும், வளர்ப்பு நாயும் உயிரிழந்து கிடந்தது. இதை பார்த்த அவர் சோகமானார். உடனடியாக சம்பவம் குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போ து வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டது, மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டியும், நாயும் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர்.பின்னர் உயிரிழந்த கன்றுக் குட்டி மற்றும் வளர்ப்பு நாய் உடல் மீட்கப்பட்டு அதே பகுதி யில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    • கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனம் கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது.
    • கன்று பிறந்த ஒன்றரை வயதுக்குள் சினை பக்குவத்திற்கு வர வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள 18 முதல் சேத்தி கிராமத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு "கால்நடை கன்றுகள் காப்போம்" இயக்கம் தொடங்கப்பட்டது.

    இந்த விழாவுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். 2981 ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கன்றுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் வழங்கினார்.

    அப்போது அவர் கூறும் போது:- கால்நடைகள், கன்றுகளுக்கு தனி தனியாக தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனம் கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது. ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் கொடுக்க வேண்டும். கன்று பிறந்த ஒன்றரை வயதுக்குள் சினை பக்குவத்திற்கு வர வேண்டும். 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி செயலாளர் ஜி. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.குருசாமி, ராஜ்மோகன், கே.ஆர். மதிவாணன், சேதுராமன், சுந்தர்ராஜ், குப்புசாமி, ஏ. பன்னீர்செல்வம், மாரியம்மாள், என். மாரிமுத்து, வெங்கடேஷ், கே.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு கன்று குட்டியும் பசுவும் தப்பின.
    • வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் என்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    உடுமலை :

    உடுமலை அருகே அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி சடைய கவுண்டன் புதூர். இங்குள்ள தோட்டத்தில் வசிக்கும் ராமசாமி மாடுகள் வளர்த்து வருகிறார்.

    இவரது தோட்டத்தில்இருநாட்களுக்கு முன்பு அதிகாலையில் தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்குகள் இரண்டு கன்று குட்டிகளை கடித்து கொன்று விட்டன. ஒரு கன்று குட்டியும் பசுவும் தப்பின. இது தொடர்பாக அந்தியூர் ஊராட்சியினர் மற்றும் வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து விவசாயி ராமசாமி கூறுகையில், ஏற்கனவே இந்த பகுதியில் மர்ம விலங்கு கடித்து மாடுகள் இறந்துள்ளன. வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் என்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது இரண்டு கன்று குட்டிகள் இறந்துள்ளன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    வேதாரண்யம் அருகே வயலில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள்- கன்றுக்குட்டி உயிரிழந்தன.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட உம்பளச்சேரி கீழ்பகுதியில் வசித்து வருபவர் திலகர்(வயது45). அதே ஊரை சேர்ந்தவர் சாந்தி(40). இவர்கள் 2 பேரும் தங்களது வீடுகளில் பசுமாடுகள் வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திலகருக்கு சொந்தமான ஒரு பசுமாடு மற்றும் கன்று குட்டி ஒன்றும், சாந்திக்கு சொந்தமான பசுமாடும் அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் சம்பவத்தன்று மோய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வயலில் சாய்ந்த கிடந்த மின்கம்பத்தில் சென்ற மின்கம்பியை மாடுகள் மிதித்துள்ளன. இதனால் மாடுகளை மின்சாரம் தாக்கியது. இதில் 2 பசுமாடுகளும், கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் அங்கு வந்து பார்த்தனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 பசுமாடு, ஒரு கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×