என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cake"
- 'கிரேப்' என்பது பல மெல்லிய பான் கேக்குகளை ஒன்றாக அடுக்கி செய்யப்படும் கேக் வகையாகும்.
- இனிப்பு சுவைக் கொண்ட 'வாழைப்பழ கிரேப் கேக்' எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 4
முட்டை - 2
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - ¼ தேக்கரண்டி
மைதா மாவு - 250 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
கோகோ பவுடர் - 5 கிராம்
கெட்டியாக காய்ச்சிய பால் - 250 மில்லி
பிரெஷ் கிரீம் - 250 மில்லி
சர்க்கரை - 25 கிராம்
சாக்லேட் துண்டுகள் - தேவையான அளவு
செய்முறை
* நன்றாகப் பழுத்த 2 வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். மீதம் இருக்கும் வாழைப்பழத்தை சிறு சிறு வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டை, எண்ணெய், அரைத்த வாழைப்பழம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கோகோ பவுடர், மைதா மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் கொட்டி சலித்துக்கொள்ளவும்.
* முட்டைக் கலவையில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். பின்பு அந்தக் கலவையில் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்துக்கு வரும் வரை நன்றாகக் கலக்கவும்.
* அதனை மூடி, குளிர்சாதனப் பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.
* பிறகு நான்-ஸ்டிக் தவாவில், சிறு சிறு அடைகளாக மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், சர்க்கரை சேர்த்து, எக் பீட்டர் கொண்டு கிரீம் பதத்திற்கு வரும் வரை 'பீட்' செய்யவும்.
* வாழைப்பழ அடையின் மேல், தயார் செய்த பிரெஷ் கிரீமைத் தடவி அதன் மேல் வெட்டப்பட்ட வாழைப்பழத்தை வைக்கவும்.
* பின்னர் மீண்டும் அதன் மேல் பிரெஷ் கிரீமைத் தடவவும்.
* இதே போன்று, ஒன்றன் மீது ஒன்றாக வாழைப்பழ அடைகளை அடுக்கவும்.
* பின்பு அந்த அடுக்கின் மீது உருக்கிய சாக்லேட் ஊற்றி அலங்கரிக்கவும்.
* இப்பொழுது சுவையான 'பனானா கிரேப் கேக்' தயார்.
மைதா - இரண்டரை கப்,
வெண்ணெய் - ஒன்றேகால் கப்,
பால் - ஒன்றரை கப்,
கண்டன்ஸ்டு பால் - 1 டின் (400 மிலி),
பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) - அரை கப்,
ஆப்ப சோடா - 1 டீஸ்பூன் (தலைதட்டி),
பேக்கிங்சோடா - 2 டீஸ்பூன் (தலை தட்டி),
வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
செய்முறை :
2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.
பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.
பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வையுங்கள்.
சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள்.
பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.
அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.
பேப்பர் கப் - தேவைக்கேற்ப (5 To 6),
உப்பு - 1/4 டீஸ்பூன்,
கோதுமை மாவு - 150 கிராம்,
நாட்டு சர்க்கரை - 100 கிராம்(Brown Sugar),
வாழைப்பழம் - 2 (பெரியது பழுத்தது),
வெண்ணெய் - 75 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)
வாழைப்பழம் எசென்ஸ் (அல்லது) 1 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - தேவைக்கேற்ப (1 or 1 1/2),
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.
பின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.
பிறகு அதில் முட்டை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
பின் முட்டை பீட்டர் (egg beater) கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிறகு அந்த கலவையை சிலிக்கான் கப் அல்லது மஃபின் டிரேயில் பேப்பர் கப் வைத்து 200 C யில் 10 நிமிடங்கள் ஃப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.
சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (24). மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 25-ந்தேதி இவரது பிறந்த நாளையொட்டி இரவு நண்பர்கள் கேக் வாங்கி வீட்டுக்கு வந்தனர்.
வீட்டுக்கு வெளியே நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது சதீஷிடம் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்ட கூறினர். அவரும் கத்தியால் கேக்கை வெட்டி நண்பர்களுக்கு கொடுத்தார். முகத்தில் கேக்கை பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ காட்சியை பார்த்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வாலிபர் சதீசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பட்டாக்கத்தியால் நடுரோட்டில் கேக் வெட்டி பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “வீடியோவில் சதீசின் நடவடிக்கை பயமுறுத்தும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் இருந்தது.
அவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மற்ற இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தேவையில்லாத பிரச்சனை உருவாகலாம் என்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே ரவுடி பினு தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடினார். இதையறிந்த போலீசார் அங்கு சென்று ரவுடிகளை மடக்கி பிடித்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வக்கார் யூனிஸ் கேக் வெட்டி கொண்டாடினார்.
‘வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். மன்னியுங்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வக்கார் யூனிஸ். #waqaryounis #Apologisetofans
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்