search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "by-elections"

    டிசம்பர் மாதத்திற்குள் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். #Thirumavalavan #ElectionCommission
    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்திருப்பதால் அந்தத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

    அவற்றுடன் ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இந்த 18 தொகுதிகளும் கடந்த ஓராண்டாக பிரதிநிதி இல்லாமல், மக்கள் பணி எதுவும் செய்யப்படாமல் மோசமான நிலையில் உள்ளன. இந்நிலையில் அங்கு தேர்தலை நடத்த தாமதித்தால் அது அந்த தொகுதி மக்களை எல்லாம் வஞ்சிப்பதாகவே இருக்கும். அதுமட்டுமின்றி தேர்தல் ஜனநாயகத்தையும் சிதைப்பதாகிவிடும்.

    தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்ற மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது அதன் பொறுப்பாகும். ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ப தேர்தல் தேதியை அறிவிப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிடும்.



    எனவே, டிசம்பர் மாதத்திற்குள் இந்த 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan #ElectionCommission
    தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #TNGovernment #DMK #ADMK #ElectionCommission
    சென்னை:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    5 மாநில தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

    இது தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதே போன்ற பருவமழை காலங்களில் ஏற்கனவே பல தேர்தல்கள் நடந்து இருப்பதாகவும், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு உண்மையான காரணம் அது இல்லை என்றும் கூறுகிறார்கள்.



    இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்ற நிலைதான் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை இருந்தது.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அது முறியடிக்கப்பட்டது. இதை மனதில் கொண்டே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு சொல்லப்பட்ட காரணங்கள் எதுவும் பொருத்தமானதாக இல்லை.

    ஏற்கனவே, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் முடமாகியுள்ளன. இதுபோன்று ஜனநாயக வழிமுறைகளை கைவிடுகிற போக்கு மக்களுடைய பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ள உதவிடாது.

    தமிழக இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு வராதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNGovernment #DMK #ADMK #ElectionCommission
    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை சந்திக்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தயாராக உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். #TTVDhinakaran
    காரைக்குடி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் காரைக்குடியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். ஏழை எளிய சாதாரண மக்கள் வாழ வேண்டுமானால் பெட்ரோல் டீசல் விலை குறைய வேண்டும்.

    உலகத்தமிழர்கள் அனைவரும் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர். தமிழக கவர்னர் அதை நிறைவேற்ற வேண்டும்.

    தமிழ்நாட்டில் நடப்பது, மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சி நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. பா.ஜ.க.வுடன், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி தொடர்பு வைத்துள்ளார்கள் என்பது தேவையற்ற அரசியல்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran
    ×