search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus stop"

    • நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், முருகன் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
    • போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்ததன் காரணமாகவே அந்த பழைய நிழற்குடை இடிக்கப்பட்டு வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், முருகன் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    அதனை சரி செய்வதற்கான தீர்வாக வண்ணார்பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டது.

    தொடர்ந்து வண்ணார் பேட்டையில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் முன்பு அமைக்கப்பட்டு இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் சமீபத்தில் பாளை சட்டமன்ற உறுப்பினரின் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றது. அதற்கான பணிகள் தொடங்கியதில் இருந்தே பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்ததன் காரணமாகவே அந்த பழைய நிழற்குடை இடிக்கப்பட்டு வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் அதே இடத்தில் பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது என்று மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் புகார்கள் தெரிவித்து வந்த நிலையில் இன்று அந்த நிழற்குடையை திடீரென இடித்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த பஸ் நிலையத்திற்கு மாநகராட்சி சார்பில் எந்த விதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் தற்போது எதற்காக அந்த கட்டிடம் இடிக்கப்படுகிறது என்பதும் மாநகராட்சி நிர்வாகத்தில் யாருக்கும் தெரியாது என்று கை விரித்து விட்டனர்.

    அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்த அந்த நிழற்குடை திறப்பு விழா காண்பதற்கு முன்பாகவே அகற்றப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • பஸ் நிறுத்தம், கடை வீதிகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள்யால் மாணவர்கள்-பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • ராமேசுவரம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட்டு சென்று விடுகின்றனர்.

    அபிராமம்

    அபிராமம் பகுதியில் பஸ் நிறுத்தம், கடை வீதிகளில் மனநோயாளிகள் சுற்றி திரிகின்றனர். மேலும் அவர்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் நடந்து கொள்கின்றனர்.

    பஸ் நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் மனநோயாளிகள் நடந்து கொள்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், முதியோர் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.

    இதற்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வீடுகளில் சுற்றி திரிந்த மனநோயாளிகளை காப்பகத்தில் சேர்த்தனர். அந்த திட்டம் தொடர்ந்து பின்பற்றபடவில்லை. இதனால் தற்போது மனநோயாளிகள் மீண்டும் வீதிகளில் சுற்றி திரிகின்றனர்.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட்டு சென்று விடுகின்றனர். அவர்கள் தங்க இடமின்றி தெருவீதிகளில் சுற்றி திரியும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையில் மனநோயாளிகள் தெரு வீதிகளில் சுற்றி திரியாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மனநலத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • கழிவறையில் கதவு இல்லாமலும், கதவுகள் இருந்தால் தாழ்பாழ் இல்லாமலும் உள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் இங்கு தினமும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் பயன்பாட்டிற்கு கட்டண கழிப்பறை ஒன்றும், கட்டணமில்லா கழிப்பறை ஒன்றும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கட்டண கழிப்பறை மூடப்பட்டு விட்டது.

    இதனால் பயணிகள் இலவச கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். அந்த கழிவறையில் கதவு இல்லாமலும், கதவுகள் இருந்தால் தாழ்பாழ் இல்லாமலும் உள்ளது. மேலும் சிறுநீர் கழிக்குமிடத்தில் உள்ள கோப்பைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது.இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். பேரூராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • கேரள மாநிலத்தில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
    • கேரள மாநிலத்துக்கு பஸ்கள் செல்லாததால் உக்கடம் பஸ்நிலையத்தில் கேரள மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

    கோவை

    கேரள மாநிலத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

    இதன் காரணமான கேரள மாநிலத்தில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து கடைகளும் அடைக்க ப்பட்டன.

    கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்த கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், கொடுங்கையூர், குருவாயூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி 10 பஸ்கள் இயக்கப்படுகிறது. போராட்டம் காரணமாக இந்த பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்த கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 9 பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களின் சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த 9 பஸ்களும் பொள்ளாச்சிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.

    கேரள மாநிலத்துக்கு பஸ்கள் செல்லாததால் உக்கடம் பஸ்நிலையத்தில் கேரள மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதனால் கேரள மாநிலத்துக்கு செல்வதற்காக வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பஸ்கள் இயங்காததால் பயணிகள் ரெயில் மூலமாக கேரள மாநிலத்துக்கு சென்றனர்.

    • செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
    • திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர், மிகுந்த கவனமாக இருக்கிறார் என்று அமைச்சர் கூறினார்.

    உடன்குடி, செப்.19-

    உடன்குடி -செட்டியாபத்து சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் பிரிவில் தனியார்குழுமம் சார்பில் கட்டப்பட்ட நவீன பஸ் நிறுத்த திறப்பு விழா நடைபெற்றது.

    செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், தொழிலதிபர்கள் ஞானராஜ் கோயில்பிள்ளை, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய நவீன பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்படும் ஏராளமான திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர், மிகுந்த கவனமாக இருக்கிறார். பொது மக்கள் கிராமமக்கள் கொடுக்கும் அடிப்படை கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. வீடு தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம், வீடு தேடி மின்சார குறை தீர்ப்பு மையம், இப்படி பல திட்டங்கள் மக்களை தேடிச் சென்று நிறைவேற்றப்படுகிறது.

    இதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி முதலிடம் ஆக இருப்பதற்கு முன் உதாரணமாகும். நிகழ்ச்சியில்தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணிதுணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஓன்றிய செயலர் இளங்கோ, மாவட்ட சார்பு ஆணி நிர்வாகிகள் ராமஜெயம், மகாவிஷ்ணு, சிராஜூதீன், ரவிராஜா, உடன்குடி பேரூராட்சி நிலைக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், இளைஞர் அணியை சேர்ந்த பாய்ஸ், அஜய், செட்டியாபத்து ஜாம்புராஜ், பேரூராட்சி முன்னாள் உ றுப்பினர் முகமது சலீம், தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
    • பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் அகற்றப்படாமல் இருந்த நுழைவுவாயில் ஆர்ச் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நெல்லை -தென்காசி இடையே இடைப்பட்ட பகுதியில் முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வரும் ஆலங்குளம், பாவூர்சத்திரம் பேருந்து நிலையங்களின் முகப்பு பகுதியில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

    ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்த இரு முகப்பு ஆர்ச்களும் இடித்து அகற்றப்பட்ட நிலையில் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் அகற்றப்படாமல் இருந்த நுழைவுவாயில் ஆர்ச் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இருப்பதற்காக இரவில் ஆர்ச் இடித்து அகற்றப்பட்ட தாக சாலை ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • ஏர்வாடி செல்லும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
    • மழைநீர் சேகரிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில், துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் நடந்தது. ஆணையாளர் ராஜேந்திரன் வரவேற்றார். கூட்ட தீர்மானங்களை அலுவலர் சரவணன் வாசித்தார்.

    யூனியனுக்குட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சுற்றுப்புற சுவர் அமைக்கவும், பெரிய பட்டினம் ஊராட்சியில் தக்குவா நகர், ஜலாலியா நகரில் உள்ள அல்ஜலாலியா மழலையர் தொடக்கப்பள்ளி சாலை உள்பட பல்வேறு ஊராட்சிகளில் பேவர் பிளாக் சாலை, படித்துறை தடுப்புச் சுவர், அங்கன்வாடி மராமத்து, உறை கிணறு நடைமேடை அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத்தலைவர் சிவலி ங்கம்:- கீழக்கரையில் இருந்து மாயாகுளம் வழியாக ஏர்வாடி செல்லும் அரசு டவுன் பஸ் (எண்.10), பள்ளி, கல்லூரி நேரமான காலை, மாலைகளில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி சென்று திரும்பும்போது அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிறுத்தப்பட்ட வழித்த டத்தை தொடங்க அதிகா ரிகளை வலியுறுத்த வேண்டும்.

    நாகநாதன் (அ.தி.மு.க.) :- ரகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். இரவு நேரங்களில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும். அம்மா பூங்கா திறக்காமல் உள்ளதால் விளையாட்டு உபகரண பொருட்கள், தளவாடப் பொருட்கள் துருபிடித்து பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது.

    பைரோஸ்கான் (எஸ்.டி.பி.ஐ.):- சுதந்திர தினம், அரசு சார்ந்த விழாக்களில் பள்ளிகளில் யூனியன் கவுன்சிலர்களை ஆசிரியர்கள் அழைப்ப தில்லை. பெரியபட்டினம் முரைவாய்க்கால் கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மழைநீர் சேகரிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகி வருகிறது. கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கமிஷனர் ராஜேந்திரன்:- பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் யூனியன் கவுன்சிலர்களை அழைக்க கல்வித் துறை அதிகாரிகளை வலியுறுத்தப்படும்.

    புல்லாணி (தலைவர்):- கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவே ற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பி.டி.ஓ. (கி.ஊராட்சி) கணேஷ் பாபு நன்றி கூறினார். துணை பி.டி.ஓ.க்கள், விஜயகுமார், மன்சூர், சத்தியகிரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு உயிர்பலி வாங்கும் இடமாக மாறியது. இதனால்அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க அங்கு சாலையின் நடுவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்தனர். இதனை தொடர்ந்து அங்கு சாலை நடுவே சிமெண்ட் கான்கிரீட் மூலம் பெரிய அளவில் வேகத்தடை அமைக்கப்பட்டது. உயிர் பலி தடுக்கஅமைக்கப்பட்டு இருந்தஇந்தவேகத்தடைஉயிர்பலிவாங்கும் வேக தடையாகமாறியது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், கோரி வந்தனர். இந்த வேகத்தடையை உடனடியாக அகற்றபடவில்லை என்றால் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைதுறை அதிகாரி அதிரடியாக இந்த வேகத்தடையை முழுமையாக அகற்றினர் இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது .
    • புதர்களை அகற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாண்டியன் கரடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட மழைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் அவதிப்பட்டு வரும் நிலையே உள்ளது. இந்த பகுதிகளுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அருகில் உள்ள தேவனூர், புதூர், பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இங்கு உள்ள மயிலாடும்பாறை கருப்பராயன் கோவில் பேருந்து நிறுத்தம் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது .இங்குள்ள பஸ் நிறுத்தத்தை சுற்றிலும் முள் புதர்கள் மற்றும் களைச் செடிகள் அதிக அளவில் முளைத்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தவே மக்கள் தயங்கும் நிலை உள்ளது. அத்துடன் பஸ் நிறுத்தத்தின் ஜன்னல்கள் உள்ளிட்டவை சேதமடைந்து கிடப்பதால் இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் தெருவிளக்கு வெளிச்சம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே பஸ் நிறுத்தத்தை சீரமைக்கவும் புதர்களை அகற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் பயணிகள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, குமுளி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சபரிமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கு வத்தலக்குண்டு பஸ் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது.

    தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் வசதிக்காக பஸ்நிலையத்தில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது அந்த சின்டெக்ஸ்தொட்டி தண்ணீர் இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பயணிகள் தண்ணீர் கிடைக்காமல் பஸ்நிலையத்தில் தவித்து வருகின்றனர். அம்மா குடிநீர் பாட்டிலும் குறைந்த அளவே வருவதால் வேகமாக விற்று தீர்ந்து விடுகிறது. இதனை பயன்படுத்தி கடைக்காரர்கள் குடிநீர் பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் தடையின்றி மதுபானங்கள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் குடிநீருக்காக அலைந்து திரிவது தொடர் கதையாகி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பஸ்சில் பயணம் செய்யும் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவர்கள் மயக்கமடையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லாதது சுற்றுலா பயணிகளை தவிப்புக்குள்ளாகி வருகிறது.

    மேலும் இலவச கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். எனவே பஸ்நிலையத்தில் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    பேராவூரணியில் பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மருத்துவமனை, அரசு வங்கி, தனியார் வங்கி அருகில் உள்ள பயணியர் நிழற்குடை மூலம் கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு, துர்க்கையம்மன் கோயில், புனல்வாசல், துறவிக்காடு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் 1000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வந்தனர். மேலும் அரசு மருத்துவமனை,அரசு வங்கி,தனியார் வங்கி மற்றும் கடை வீதிக்கு சென்று தங்கள் ஊருக்கு திரும்ப மழை மற்றும் வெயில் காலங்களில் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிழற்குடை கடந்த 2011-12-ஆம் ஆண்டு முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது ஆகும். இதனை முறையாக பராமரிக்காததால் தரையில் ஒட்டப்பட்ட டைல்ஸ் பெயர்ந்தும், பயணிகள் அமரும் இருக்கைகளை சேதமடைந்த நிலையில் உள்ளது. சில இருக்கைகள் காணவில்லை. இரவு நேரங்களில் மின்வசதி துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் சமூக விரோதிகள் மது அருந்துவது,எச்சில் துப்புவது,புகை பிடித்துக் கொண்டிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    எனவே தூய்மை இந்தியா திட்டத்தில் பயணியர் நிழற்குடையை சீரமைத்து மின்வசதி செய்துதர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கயத்தாறில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய நிழற்குடை கட்டப்பட்டது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்.
    கயத்தாறு:

    கயத்தாறு தாலுகா குப்பனாபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த சொக்கலிங்கபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்து பேசியதாவது:-

    கயத்தாறு தாலுகா பகுதியில் 162 கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விரைவில் கூட்டு குடிநீர்திட்டம் அமைக்கப்பட உள்ளது. கடம்பூரில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பெரிய ராட்சத நீர்த்தேக்க தொட்டியும் அமையும். இதன் மூலம் இப்பகுதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும். 

    இவ்வாறு அமைச்சர் பேசினார். 

     நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், நெல்லை ஆவின் தலைவர் சின்னத்துரை, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பழனிவேல்ராஜன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, நகர செயலாளர் வாசமுத்து, ஊராட்சி செயலர் சண்முகராஜ், கோவில்பட்டி ஆர்.டி.ஒ. விஜயா, முன்னாள் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் செல்லத்துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×