search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus facility"

    • கனிமொழி எம்.பியிடம் கூட்டாம்புளி பொது மக்கள் சார்பாக தி.மு.க. கிளைச் செயலாளரும் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளருமான பால்ராஜ் மனு கொடுத்தார்.
    • கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் சாயர்புரம் -கூட்டாம்புளி - தூத்துக்குடி-மதுரை இடையே தடம் எண் 153 எக்ஸ் எஸ் 1 என்கிற அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி யிடம் கூட்டாம்புளி பொது மக்கள் சார்பாக தி.மு.க. கிளைச் செயலாளரும் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளருமான பால்ராஜ் மனு கொடுத்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் சாயர்புரம் -கூட்டாம்புளி - தூத்துக்குடி-மதுரை இடையே தடம் எண் 153 எக்ஸ் எஸ் 1 என்கிற அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

    அந்த பேருந்து எங்கள் பகுதிக்கு நள்ளிரவில் வரும்படியாக இருந்தது.அதனால் வியாபாரிகள் மற்றும் வெளியூர் சென்று திரும்புவோருக்கு மிகவும் வசதியாக இருந்தது.

    அந்த பேரூந்தை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்திவிட்டனர். மிகவும் அவசியமான அந்த பேருந்தை இப்போது ஸ்ரீவைகுண்டம் - சாயர்புரம் - கூட்டாம் புளி -தூத்துக்குடி - ராமேஸ்வரம் இடையி லான பேருந்தாக வழித்தட மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

    ஸ்ரீவைகுண்டம் அல்லது சாத்தான்குளம் பணி மனையில் இருந்து காலையில் கிளம்பி சாயர்புரம் - தூத்துக்குடி -ராமநாடு வழியாக ராமேஸ்வரம் சென்று இரவில் திரும்ப வேண்டும்.காலையில் பேருந்தில் பயணிக்கும் எங்கள் பகுதி பக்தர்கள் ராமேஸ்வரம் கோவிலில் பூஜை முடிந்த பிறகு அங்கிருந்து இரவில் கிளம்பி வீடு திரும்பும்படி செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது பழைய மதுரை பேருந்து இல்லாத குறையை இந்த பேருந்து போக்கும் என்று நம்புகிறோம்.

    அதேபோல், திசையன் விளை பணிமனையில் இருந்து உவரி - திசையன்விளை - சாத்தான்குளம் - நாசரேத் - குரும்பூர்-ஏரல் -சாயர்புரம் - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள 145 எஸ்.எஸ்.எஸ் என்கிற பேருந்தை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி,பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ தூரம் நடந்து மாணவர்கள் செல்கின்றனர்.
    • இதனால் நகருக்கு செல்லும் மாணவர்களும், முதியோர்களும், பெண்களும் பயன்பெறுவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செம்பட்டையங்கால் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இவர்கள் பஸ் ஏறுவதற்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வந்து பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது 2 கிலோமீட்டர் தூரம் தினமும் நடந்து வந்து பஸ் ஏற வேண்டிய நிலை இருப்பதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதனை உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு எம். புதுப்பட்டி, கோவிந்தநல்லூர், நத்தம்பட்டி, மூவரைவென்றான், கல்லுப்பட்டி செல்லும் டவுன் பஸ்கள் செம்பட்டையங்கால் ஊருக்குள் வந்து மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும்.

    இதனால் நகருக்கு செல்லும் மாணவர்களும், முதியோர்களும், பெண்களும் பயன்பெறுவார்கள். இதனை அந்த பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை.
    • இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது.

    ஈரோடு:

    ஈரோடு டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திராவிடம், கேர்மாளம், திங்களூர் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் மனு வழங்கினார்கள்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    தாளவாடி யூனியன் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்துகளில் காடட்டி, சுஜ்ஜல்கரை, கேர்மாளம் என்ற ஊரில் 3 அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகிறது.

    கோட்டமாளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியாக கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டது.

    திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். இதற்கு முன் 60 கி.மீ. தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வந்தனர்.

    தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை.

    இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது.

    திங்களூர், கேர்மாளம் பகுதியில் உள்ள கிராமங்களில் 6000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வங்கி, மருத்துவமனை, யூனியன் ஆபீஸ், வேளாண் அலுவலகம் என அனைத்தும், இப்பகுதியினர் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்தை சார்ந்துள்ளனர்.

    திங்களூர், கேர்மாளம், கோட்டமாளத்தை இணைத்து கடந்த 10 ஆண்டுக்கு முன் பஸ் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. தாளவாடி டெப்போவில் இருந்து இயக்கப்பட்ட பஸ்சை, தாளவாடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட செய்து ஆசனூருக்கு 6:45 மணிக்கும், கேர்மாள த்துக்கு, 7:30 மணிக்கும் வந்து, கோட்ட மாளத்துக்கு 8:30 மணிக்கு செல்லும்படி இயக்க வேண்டும்.

    மறு மார்க்கமாக காலை கோட்டமாளத்தில் 8:45 மணிக்கு புறப்பட்டு, தாளவாடிக்கு 11:30 மணிக்கு வந்து சேரும். தாளவாடியில் மதியம் 2 மணிக்கு பஸ் புறப்பட்டால் ஆசனூருக்கு 2:45 மணி, கேர்மாளம் 3:30 மணி, கோட்டமாளம் மாலை 4:30 மணிக்கு வந்து சேரும்.

    பள்ளி விட்டதும், மாலை 4:45 மணிக்கு அந்த பஸ் புறப்பட செய்தால் இரவு, 7:30 மணிக்கு தாளவாடிக்கு சென்றடையும். இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், 6,000 -க்கும் மேற்பட்ட மக்களும் பயன் பெறுவர்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    குன்னம் அருகே நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் ஆகிய 2 கிராமங்களில் சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
    குன்னம்:

    ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியிலும், அரியலூர் மாவட்ட பகுதியின் அருகிலும் அமைந்துள்ளது நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் கிராமங்கள். இந்த 2 கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அரியலூர் மற்றும் பெரம்பலூருக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். விவசாயிகள் அதிகாலையில் அரியலூர் மார்க்கெட்டிற்கு தினசரி டவுன் பஸ்சில் காய்கறி கொண்டு செல்வது வழக்கம். அன்றாடம் 50-க்கும் மேற்பட்டோர் வெளியூருக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மருத்துவமனைக்கும் செல்வதற்கு 2 கிராம மக்களும் அப்பகுதியில் வரும் டவுன் பஸ்சை நம்பியே உள்ளனர். டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ்கள் தினமும் 2 கிராமங்களுக்கு சுமார் 20 நடை வந்து சென்றன.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் உசேன் நகரம் கிராமத்தில் தொடங்கி புஜங்கராயநல்லூர் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் நொச்சிகுளம் கிராமத்தில் தெற்குதெருவில் உள்ள வளைவில் புதிதாக தரை பாலம் அமைக்கப்பட்டது. இதன் பணி முடிவுற்று மூன்று மாதங்கள் ஆகின்றது. மேலும் இந்த புதிய தார்ச்சாலையில் 2 சறுக்கு பாலமும் அமைக்க வேண்டி உள்ளது. சாலையின் இருபுறமும் மண் கொட்டப்பட்ட நிலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் நிலுவையில் உள்ளது

    கடந்த 5 மாதங்களாக நொச்சிக்குளம், புஜங்கராயநல்லூர் கிராமத்தின் ஊருக்குள் டவுன் பஸ்கள் வராமல் அரியலூர், பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் கேட்டில் இருந்து வரும் பஸ்கள் ஜமீன் பேரையூர் கிராமத்திற்கு எரிகரை முன்பாகவே இரண்டு கிராம மக்களையும் இறக்கி விட்டு விட்டு உசேன் நகரம் வழியாக அரியலூருக்கும், கூத்தூர் வழியாக ஆலத்தூர் கேட், பெரம்பலூருக்கும் சென்று விடுகின்றன. இதனால் 2 கிராம மக்களும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து செல்வது அப்பகுதி மக்களுக்கு சிரமமாகவும் உள்ளது. இதில் சிலர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்களிடம் பயத்துடன் ‘லிப்ட்’ கேட்டு வந்து செல்கின்றனர். விவசாய பொருட்களை தலைச்சுமையாக தூக்கி செல்கின்றனர்.

    2 கிராம மக்களின் சிரமத்தை போக்க புதிதாக அமைக்கப்படும் தார்ச்சாலை பணியை விரைந்து முடித்தும், நொச்சிக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட பாலத்தின் விடுபட்ட பணிகளை விரைந்து முடித்தும், அந்த கிராம மக்களின் சிரமத்தை போக்கிடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களின் சிரமத்தையும் கவனத்தில் கொண்டு போக்கிடுமாறும், அவ்வாறு விரைந்து சாலைப் பணியை முடிக்காமல் காலதாமதம் ஏற்படுத்தினால் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் நடத்த உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 
    உடையார்பாளையம் அருகே பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள ஜெ.சுத்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பஸ்சுக்காக நீண்ட நேரம் மாணவ- மாணவிகள் காத்திருந்து வீட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளி விடும் நேரத்திலும், பள்ளிக்கு மாணவர்கள் வரும் நேரத்திலும் பஸ் வசதி கேட்டு ஜெ.சுத்தமல்லியில் மாணவ-மாணவிகள் நேற்று விளாங்குடி- தா.பழூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விளாங்குடி- தா.பழூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    சிவகங்கை அருகே கிராம சாலையை சீரமைத்து பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Ruralroad

    சிவகங்கை:

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் மேலப்பூங்குடி ஊராட்சிக்குட்பட்டது, வலையராதினிப்பட்டி. இந்த கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் என்பது இன்றளவும் நிவர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கீழப்பூங்குடி செல்லும் சாலை சேத மடைந்து காணப்படுகிறது.

    சாலை வசதி ஓரளவு இருந்தும், இந்த கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லை. இதனால் கிராம மக்கள் அன்றாட பணிகளுக்கு வெளியூர் சென்று வர வேண்டும் என்றால் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருமலை கிராமத்திற்குச் சென்று, பின்பு அங்கிருந்து பஸ்சில் வெளியூர் செல்ல வேண்டும்.

    இதுதவிர வலைய ராதினிப்பட்டியில் தொடக்கப்பள்ளி மட்டும் உள்ளது. இங்குள்ள மாணவ-மாணவிகள் மேல் படிப்பிற்கு 4 கி.மீ. தொலைவில் கீழப்பூங்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    வலையராதினிப் பட்டிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், அந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் தினசரி 4 கி.மீ. நடந்து சென்று படித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வலைய ராதினிப்பட்டியை சேர்ந்த அழகர் கூறுகையில், சிவகங்கையில் இருந்து கீழப்பூங்குடி வழியாக எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் முறையிட் டும் எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

    சில மாதங்களுக்கு முன்பு மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

    இதையடுத்து அரசு அலுவலர்கள் கிராமத் திற்கு வந்து இங்குள்ள போக்குவரத்து வழித் தடத்தை பார்வையிட்டு சென்றனர். அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வலையராதினிப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்று வதுடன், பஸ் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். #Ruralroad

    ×