search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus collision"

    • பெண்கள், சிறுவர்கள் உள்பட 17 பேர் படுகாயம்
    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    ஆரணி, ஜூலை.18-

    திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அருகே அப்ப தாங்கல் கூட்ரோடு அருகில் ஆரணியி லிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்கள் சென்னை யிலிருந்து போளுர் நோக்கி வந்த அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகு ள்ளானது.

    இதில் பயணம் செய்த பயணிகள் சிவசங்கரி, அம்பிகா, லட்சுமி, விஜயா, உள்ளிட்ட 5 பெண்களும் முரளிதரன், பாரதிராஜா, ராஜா, கோபி கிருஷ்ணன் உள்ளிட்ட 7 ஆண்களுக்கும் மற்றும் 3சிறுவர்கள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் ராஜேந்திரன், பாஸ்கர் கண்டக்டர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர்.

    போலீசார் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து 17பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மத்திய பிரதேசத்தில் பள்ளி வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் டிரைவர், பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டம் பீர்சிங்கபூர் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பேருந்தும், பள்ளி வேனும் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் வேனில் பயணித்த  6 மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுனர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    ×