search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "budget session"

    • எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது.
    • கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வளர்ச்சியின் பலன்கள் ஏழைகளை அடையத் தொடங்கியுள்ளது. எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது.

    சமூக நீதி அரசியல் கட்சிகளின் கோஷமாக உள்ள நிலையில் சிறந்த நிர்வாகத்தின் மூலம் அதை செயல்படுத்தி வருகிறோம்.

    யாருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மதசார்பின்மையை மக்களுக்கான அரசின் திட்டங்கள் மூலம் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர். மக்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். வீடுகளுக்கு குடிநீர், அனைவருக்கும் வீடு, குறைந்த விலையில் கியாஸ் சிலிண்டர் என பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எங்கள் அரசு யாரையும் ஒதுக்காத அனைவரையும் அரவணைக்கும் அரசாக செயல்படுகிறது.
    • மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் அடைகின்றனர்.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சமூக நீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்.

    ஊழல் ஒழிப்பையும், வாரிசு அரசியலையும் எதிர்த்து பணியாற்றி வருகிறோம். எங்கள் அரசு யாரையும் ஒதுக்காத அனைவரையும் அரவணைக்கும் அரசாக செயல்படுகிறது.

    நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

    மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் அடைகின்றனர். இந்திய கல்விக் கொள்கையில் தேசிய கல்விக்கொள்கை பெருமாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கல்வித்துறையில் சீர்திருத்தங்களை புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறோம். 10 ஆண்டுகளில் 7 ஐ.ஐ.டி.க்கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விவசாயிகள், ஏழைகள் என மக்கள் நலத்திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி மானியம் சென்றடைந்துள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு நாங்கள் மிக உயரிய முன்னுரிமை அளித்து வருகிறோம். சிறந்த நிர்வாகம், திட்டங்கள் மூலம் இந்திய இளைஞர்களிடையே பணித்திறனுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிட்ட கால அவகாசத்தில் உரிய முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது. 4 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    கட்டமைப்பு திட்டங்கள் மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர். சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரூ.34 லட்சம் கோடி நேரடி மானியம் மூலம் ரூ.2.7 லட்சம் கோடி வீணாவது தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிதாக 3000 ஐ.டி.ஐ.க்களை ஏற்படுத்தி உள்ளோம். திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் 54 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயத்துக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.
    • 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விவசாயத்துக்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 11.8 கோடி விவசாயிகள் அரசின் திட்டங்களால் நேரடியாக பலன் அடைந்துள்ளனர். ஏழைகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக கருதி செயல்படுகிறோம்.

    சிறந்த நிர்வாகம் மற்றும் திட்டங்கள் மூலம் இந்திய இளைஞர்களிடம் பணித்திறனுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.
    • இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இந்தநிலையில் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யமுடியும். தேர்தலுக்கு பின்னர் அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

    இருப்பினும் இந்த இடைக்கால பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு துறையினருடன் கருத்துகள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே மத்திய நிதி அமைச்சகம் தொடங்கிவிட்டது.

    பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அன்றைய தினம் மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில், அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து இடைக்கால பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில் இறுதிக்கட்ட தயாரிப்பு நிகழ்ச்சியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி, பகவத் கரத் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.

    இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் மட்டுமே 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

    ஆனால் இது மத்திய அரசின் வரவு மற்றும் செலவு திட்டங்களுக்கான அறிக்கையாகவே இருக்கும். புதிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • ஜனாதிபதி உரையில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விசயங்கள் இடம்பெறவில்லை.
    • பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, மணிப்பூர் விவகாரம் ஆகியவை இடம் பெறவில்லை.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    இந்த பட்ஜெட் தொடரில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், மணிப்பூரில் தொடரும் வன்முறை தொடர்பான பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பாராளுமன்ற இருஅவைகளின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, மற்ற கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடரில் காங்கிரஸ் கட்சிக்கான வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முன்னதாக ஜனாதிபதி உரையாற்றுவார். இந்த உரை எதிர்காலத்தில் அரசு மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளை பற்றியது. ஆனால் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, மணிப்பூர் விவகாரம் ஆகியவை ஜனாதிபதி உரையில் இடம் பெறவில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா கே. சுரேஷ் கூறுகையில் "ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிப்பு மற்றும் பட்ஜெட் விவாத்தின்போது எழுப்பக்கூடிய பல்வேறு விவகாரங்கள் குறித்து முழுமையாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஜனாதிபதி உரையின்போது மக்கள் தொடர்பான பல விசயங்கள் குறிப்பிடப்படவில்லை. அரசு அவர்களுடைய வேலைகளை மட்டுமே செய்ய விரும்புகிறது. மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை. ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்கள் பிரச்சனைகளுக்காக நாங்கள் குரல் கொடுக்க விரும்புகிறோம். என்றார்.

    • ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ம் தேதி தொடங்க வாய்ப்பு.
    • பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் என தகவல்.

    bu2024ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பிப்ரவரி 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து, பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி பிறகு பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
    • பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் நாடு முழுவதும் 84 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி பாராளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார்.

    பாராளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அவர் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கூறியதாவது:-

    புதிய பாராளுமன்றத்தில் இன்றைய உரை எனது முதல் உரையாகும். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடியினரின் கவுரவ தினமாக கொண்டாடப்படுகிறது.

    சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியால் நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறக்கிறது. சுதந்திர அமிர்த பெருவிழாவின் பெருமையை வளர்ச்சியடைந்த பாரதம் உறுதி செய்யும், கொண்டாடும். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை தாண்டியுள்ளது.

    அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோவில் நமது பாரதத்தின் பெருமைமிக்க அடையாளம் ஆகும். சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யாமிஷன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    விரைவில் நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அமல்படுத்தப்படும். சென்ற ஆண்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற மக்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா தற்போது வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது.

    ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்டவை மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழில்முனைவோரை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

    நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நாட்டின் மாதாந்திர ஜி.எஸ்.டி. வருவாய் சராசரியாக ரூ.1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாகவே உள்ளது. நாட்டில் ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வங்கிகளில் வாராக்கடன் 4 சதவீதம் ஆக குறைந்துள்ளது.

    நாட்டின் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது.

    இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியால் மக்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது. செல்போன் மூலம் பரிவர்த்தனைகள் ரூ.1200 கோடி அளவுக்கு நடைபெறுகிறது. ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு தினசரி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது.

    இந்தியாவில் 20 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தரப்படுகிறது. உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட நவீன டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லை. 4 சக்திகளை கொண்டு இந்தியா இயங்கி வருகிறது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 பிரிவினர் இந்தியாவின் தூண்களாக உள்ளனர். பழைய குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய குற்றவியல் சட்டங்கள் இயக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது.

    இந்தியாவின் 20 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தரப்படுகிறது. உலகின் 2-வது மிகப்பெரிய செல்போன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் 80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் எண்ணற்ற குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது.

    கொரோனா பேரிடர் பாதிப்பில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் பணம் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் 3 கோடி ஏழை மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    ஆண்டு வருவாய் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே துறையை முழுக்க முழுக்க மின் மயமாக்கும் பணி விரைவில் நிறைவு பெற உள்ளது.

    உதான் திட்டத்தின் கீழ் ஏழை, எளியோர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் விமான சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. தடையற்ற இணைய வசதிக்காக 2 லட்சம் கிராமங்களில் ஆப்டிக் பைபர் கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டு உள்ளன. ஏழை பெண்களுக்கு ரூ. 7 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கிராமங்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. எம்.எஸ்.பி. உள்பட 18 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு நிதிப்பலன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நலமான பாரதம், வளமான பாரதம் என்ற நோக்குடன் அமலான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 3 கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    உலகளாவிய நெருக்கடிகள் இருந்த போதும் பண வீக்கத்தை அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 90 ஆயிரம் கிலோ மீட்டரில் இருந்து 1.46 லட்சம் கிலோ மீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் எளிதான கடன் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு உழைக்கிறது. உழவர் அட்டை போன்று நல உதவிகள் நிதி பயன்கள் பெற வழங்கப்பட்ட பிரத்யேக அட்டை மூலம் மீனவர்களும் நேரடியாக பயன் பெறுகின்றனர்.

    பழங்குடியினர் கிராமங்களுக்கும் 4ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படுகிறது. 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் எளிதான கடன் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீன் உற்பத்தியும் இரட்டிப்பாகி உள்ளது. கைவினை கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க தனித்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    முப்படைகளில் மகளிர் நிரந்தரமாக பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருநங்கைகளுக்கு சமூகத்தில் கவுரவமான இடத்தை வழங்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    எல்லையோர கிராமங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுக்கு கடல் வழியே ஆப்டிக் பைபர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நக்சல் வன்முறை குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதம் குறைந்து உள்ளது. பயங்கரவாதம் போன்ற செயல்களுக்கு நமது படைகள் பதில் அளிக்கின்றன.

    கைவினை கலைஞர்கள் பயனடையும் வகையிலும் அத்தொழில்களில் புதியவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பிரதமரின் விஸ்வகர்ம திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மேக் இன் இந்தியா என்ற சொல்லாடல் உலகளவில் இந்தியாவை உயர்த்திப் பிடிக்கும் உலக பிராண்டாக மாறியுள்ளது. செமி கண்டக்டர் துறையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும்.

    ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்பான சூழல் நிலவுகிறது. உற்பத்தி துறையில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும் என உலக நாடுகள் நம்புகின்றன. சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகிறது. விண்வெளி திட்டங்களிலும் உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா மாறி வருகிறது.

    சூரிய ஆற்றல் மூலம் நடைபெறும் மின் உற்பத்தியில் உலகளவில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. விரைவில் முதலிடம் பிடிக்கும். பிரதம மந்திரியின் சூர்யோதயம் என்ற திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களில் மின்சாரம் மற்றும் சாலை இணைப்பு செய்யப்பட்டு உள்ளது. பழங்குடியின குடும்பங்கள் குழாய்கள் மூலம் சுத்தமான தண்ணீரை பெற தொடங்கியுள்ளன. பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு 4ஜி இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டியுள்ளன. குழந்தைகளிடம் தாய்மொழி வழிக்கற்றலை புதிய தேசிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு 5 நாளில் 13 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்தியாவிற்கு என பிரத்யேகமாக விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் நாடு முழுவதும் 84 லட்சம் பேர் இணைந்துள்ளனர். மேக் இன் இந்தியாவை நோக்கி உலகமே ஈர்க்கப்படுகிறது. ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக இருக்க பொருளாதார வளர்ச்சியை விட சமுதாய வளர்ச்சியே முக்கியம்.

    விளையாட்டு வீரர்களுக்கு முன் எப்போதும் இல்லாத ஆதரவை அரசு வழங்கி வருகிறது. விளையாட்டு துறைக்கு ஊக்கம் அளிக்க பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்திய விதம் உலகின் பாராட்டை பெற்றது.

    பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்துபவர்களின் சதவீதம் அரசின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. விண்வெளி திட்டங்களிலும் இந்தியா உலக அரங்கில் சக்தி வாய்ந்த நாடாக மாறியுள்ளது.

    இந்திய பெருங்கடல் உள்பட ஆழ்கடல் கனிமவள அகழ்வு ஆராய்ச்சிக்கான திட்டங்களை இந்தியா முன்னெடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    ஏழை நாடுகளின் குரலாக இந்தியா ஒலித்து வருகிறது. இந்திய இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளின் நண்பனாக இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்றத்தில் ஜனாதிபதி 1 மணி 15 நிமிடங்கள் பேசினார்.

    • முதன்முறையாக போர் விமானிகளாக பெண்கள் உள்ளனர்.
    • சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2 கோடிக்கும் அதிகமான பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    * முதன்முறையாக போர் விமானிகளாக பெண்கள் உள்ளனர்.

    * பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் ரூ.2.80 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    * நெல், கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

    * வேளாண் ஏற்றுமதி நான்கு லட்சம் கோடியை கடந்துள்ளது.

    * மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டைக்கான பயன்கள் கிடைத்துள்ளது.

    * சுத்தமான குடிநீர் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

    * மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை நிறைவேற்று வருகிறோம்.

    * மலைவாழ் கிராமங்களுக்கும், முதல்முறையாக மின்சாரம் இன்டர்நெட் வசதி கிடைத்துள்ளது.

    * 200க்கும் அதிகமாக பழங்குடியின கிராமங்களில் முதல்முறையாக குடிநீர், மின்சாரம் கிடைத்துள்ளது.

    * விஸ்வகர்மா திட்டம் மூலம் எளிதாக கடனுதவி வழங்கப்படுகிறது.

    * விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு பயனளிக்கும் வகையில் பி.எம். விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * சாலையோர சிறு வியாபாரிகள் பிரதமர் ஸ்வநிதி திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

    * இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 28 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    * நாட்டில் உள்ள கிராமங்களை மேம்படுத்த துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.

    * அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கான பாதையை அரசு வகுத்துள்ளது.

    * இன்று இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    * சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன.

    * இன்று மேக் இன் இந்தியா பொருட்கள் உலக அளவிலான பிராண்டாக மாறி உள்ளது.

    * சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளோம்.

    * வரும் நாட்களில் மேலும் 9 சோலார் பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    * ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் பதிக்கும் சூர்யோதய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

    * பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.

    * இந்தியாவிற்கென சொந்த விண்வெளி மையம் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    * புதிய தேசியக் கல்விக்கொள்கை வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    * பொறியியல், மருத்துவ படிப்புகளை தேசிய கல்விக்கொள்கையின் கீழ் தாய் மொழியில் வழங்க அறிவுறுத்தல்.

    * அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளது.

    * 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

    * மருத்துவ படிப்புகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

    * இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    • உலகிலேயே செல்போன் தயாரிப்பில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் மாதாந்திர சராசரி ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    * ஜி.எஸ்.டி. வரி மூலம் ஒரே நாடு, ஒரே வரி சட்டம் கிடைத்தது.

    * இன்று நமது அந்நிய செலவாணி கையிருப்பு 600 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

    * உலகிலேயே செல்போன் தயாரிப்பில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது.

    * இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    * உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு காரிடார் பணிகள் நடைபெற்று வருகிறது.

    * விண்வெளி துறையில் புதிய நிறுவனங்கள் கால் பதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * நல்ல நிர்வாகத்தை வழங்குவதே முன்னுரிமையாக உள்ளது.

    * அந்நிய நேரடி முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

    * நல்ல நிர்வாகத்தை வழங்குவதே முன்னுரிமையாக உள்ளது.

    * பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம், சிறுகுறு, நடுத்தர தொழில் துறையில் மிகப்பெரும் பலன்கள் கிடைத்துள்ளது.

    * டிஜிட்டல் மேலாண்மை துறையில் மத்திய அரசு மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொண்டது.

    * காலனி ஆதிக்க குற்ற நடைமுறை சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது.

    * இன்று பிற நாடுகளிலும் இந்திய அரசு யுபிஐ பண பரிவர்த்தனை வசதியை வழங்கிக் கொண்டிருக்கிறது.

    * கடந்த சில ஆண்டுகளில் நாடு, மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளது.

    * 4 லட்சம் கி.மீ.க்கும் அதிகமாக புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    * நாடு முழுவதும் அதிவேகமாக செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    * தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

    * நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

    * 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    * வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

    * உஜ்வாலா திட்டத்தின் மூலம் எண்ணற்ற குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    * எந்த ஒரு பயனாளியும் விடுபடாமல் அரசின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் இலக்கு.

    * 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

    * ரூ.2.5 லட்சத்தில் இருந்த தனிநபர் வருமான வரி விலக்கு, தற்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * பிரதமர் மக்கள் மருந்தகத்தின் மூலம், கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கும் குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

    * ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * உதான் திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்.

    * 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாக தொழில் செய்து வருகின்றனர் என்று கூறினார்.

    • கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு முழுவதுமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளால் நிறைந்திருந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். புதிய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:

    * இந்த அவையில் எனது முதல் உரை இதுவாகும்.

    * சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை வளர்ச்சியடைந்த பாரதம் நிர்ணயம் செய்யும்.

    * எது தேசம் எனது மண் யாத்திரை மூலம் பல்வேறு கிராமங்களில் மண் எடுக்கப்பட்டு அமிர்த பெருவிழா கொண்டாடப்பட்டது.

    * பிர்சா முண்டாவின் பிறந்த தினம் பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    * கடந்த ஆண்டும் நாட்டின் வரலாற்றின் வரலாற்ற சிறப்புமிக்க வருடம்.

    * நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவர்ணக்கொடி பட்டொளி வீசியது.

    * சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா மிஷன் தொடங்கப்பட்டது.

    * ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்று நடத்தியது.

    * பாரா ஒலிம்பிக் போட்டியில் நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை இந்தியா குவித்தது.

    * கடந்தாண்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவை, மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

    * சீர்திருத்தம், செயல்பாடு போன்றவற்றில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

    * கடந்த ஆண்டு முழுவதுமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளால் நிறைந்திருந்தது.

    * அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

    * ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

    * ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

    * டிஜிட்டல் துறையில் இந்தியா அளப்பரிய சாதனைகளை படைத்து வருகிறது.

    * கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    * ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை எட்டி உள்ளோம்.

    * கதர் மற்றும் கிராமப்பொருட்களின் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

    * வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 3 கோடியிலிருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    • நாளை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
    • புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார்.

    முன்னதாக, பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர்.

    ×