search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "broiler"

    நாமக்கல்லில் கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவுக்கு 50ரூபாய் வரை உயர்ந்துள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    நாமக்கல்:

    தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் 25ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த கறிக்கோழிகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவுக்கு 50ரூபாய் வரை உயர்ந்துள்ளது அசைவ பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வாரம் உயிருடன் ஒரு கிலோ கோழி 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் 130 ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதேபோல 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட உரித்த கோழி 220 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து கறிக்கோழி சில்லறை விற்பனையாளர்களிடம் கேட்டபோது, கேரளாவில் கனமழையால் கோழிப் பண்ணைகள் அழிந்ததால் கேரளாவிற்கு அதிகளவில் கறிக்கோழிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் புரட்டாசி விரதம் முடிந்ததாலும், தசரா பண்டிகைக்கு வெளி மாநிலத்திற்கு அதிக அளவில் கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாலும் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×