என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "brain death"
- மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் மற்றும் குடும்பத்தினர் முன் வந்தனர்.
- உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
கோவை:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மோடமங்கலம் அருகே மேல்பாறை காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஜெயமணி (வயது 52).
இவர்களுக்கு மல்லிகா என்ற மகளும், பூபதி என்ற மகனும் உள்ளனர். மல்லிகா கோவை நீலாம்பூரில் வசித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி மல்லிகா வீட்டுக்கு வருவதற்காக தாயார் ஜெயமணியும், சகோதரர் பூபதியும் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
சின்னியம்பாளையம் அருகே வந்தபோது 4 சக்கர வாகனம் அவர்களின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயமணியும், பூபதியும் தூக்கி வீசப்பட்டனர். 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஜெயமணி கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 9-ந் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜெயமணியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் பெருமாள் மற்றும் குடும்பத்தினர் முன் வந்தனர்.
அதன்படி ஜெயமணியின் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
மும்பை உல்லஸ் நகரைச் சேர்ந்த 53 வயதான சுகாதார உதவியாளர் ஒருவர் கடந்த 13-ந்தேதி தும்பிவிலியில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
தானேவில் உள்ள ஜுபிட்டர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி முன் வந்தார்.
இதையடுத்து சுகாதார உதவியாளர் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டன. இதில் கல்லீரல் பரேலில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கப்பட்டது.
அந்த ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளி ஒருவருக்கு உடனடியாக கல்லீரல் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் சாலையில் சென்றால் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
இதையடுத்து உள்ளூர் மின்சார ரெயிலில் கல்லீரலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு ஆஸ்பத்திரி சார்பில் தகவல் தெரிவித்தனர். அவர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
உடனே கல்லீரலை ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்து ஆம்புலன்சில் தானே ரெயில் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து மின்சார ரெயிலில் 4 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கல்லீரலை கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறும்போது, “கல்லீரலை எவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்று சேர்க்க முடியுமோ அவ்வளவு நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இதற்காக உள்ளூர் மின்சார ரெயில் சேவையை தேர்வு செய்தோம். தானே ஆஸ்பத்திரியில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் செல்ல தனிப்பாதை ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர் ரெயிலில் கல்லீரல் 38 நிமிடத்தில் கொண்டு வரப்பட்டது” என்றனர். #Donorliver #Liver
வேலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் என்ஜினீயர் இவரது மனைவி கோகிலா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு உடல்நிலை காரணமாக 7-வது மாதத்தில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 7 நாட்களுக்கு முன்பு பிரசவமானது. அப்போது கோகிலாவுக்கு அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டது. நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து கோகிலாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதயம் சென்னை மலர் ஆஸ்பத்திரிக்கும் கிட்னி, கண்கள், ஆகியவை சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கினர்.
ஈரோடு மாவட்டம், பெத்தாம் பாளையத்தில் வசித்து வருபவர் முத்துசாமி. இவரது மனைவி இந்திராணி (வயது 50) இவர் கடந்த15-ந் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தார். உடனடியாக கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திராணி உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் முத்துச்சாமி முன் வந்தார். இந்திராணி சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல், ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது.
இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர். நல்லா ஜி பழனிசாமி கூறுகையில் மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய இந்திராணி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பனைவிளையைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி மாணிக்கவல்லி. இவர்களுடைய மகள்கள் ஞான ஜெயனி, ரீட்டா, மகன்கள் கிருஷ்ண பெருமான், கோபிகிருஷ்ணன் (வயது 16). இதில் கோபிகிருஷ்ணன் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவர், கடந்த 26-ந்தேதி திசையன்விளையில் இருந்து உவரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோபி கிருஷ்ணன் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளை குலவணிகர்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோபி கிருஷ்ணன் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து கோபி கிருஷ்ணனின் பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. கல்லீரல் பாதுகாப்பாக பெட்டியில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுநீரகம் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்கள் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டன.
அங்கு உடல் உறுப்பு பொருத்தப்பட வேண்டிய நோயாளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். கோவை தனியார் ஆஸ்பத்திரியில் 16 வயது இளம்பெண்ணுக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது. அதுபோல மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு ஆண் நோயாளிக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பலியான கோபிகிருஷ்ணனின் உடல் திசையன்விளை அருகே உள்ள பனைவிளைக்கு எடுத்துவரப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
திருபுவனை பாலாஜி நகரை சேர்ந்தவர் ரகு (வயது55). இவர் திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குமுதசெல்வி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ரகு மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்று கொண்டு இருந்தார்.
திருபுவனை ஏரிக்கரை அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ரகு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரகு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ரகு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை ரகு இறந்து போனதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்