search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boxing day Test"

    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் நியூசிலாந்து 176 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கையும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. #NZvSL
    இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் நியூசிலாந்து திணறியது. 64 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அதிரடியாக விளையாடினார். அவர் 65 பந்தில் 68 ரன் அடித்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.

    இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 178 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்மல் 5 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.



    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியும் திணறியது. பேட்டிங்கில் ஜொலித்த டிம் சவுத்தி பந்து வீச்சிலும் அசத்தினார். குணதிலகா (8), கருணாரத்னே (7), சண்டிமல் (6) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது இலங்கை.



    மெண்டிஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது. இலங்கை முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்துள்ளது. மேத்யூஸ் 27 ரன்னுடனும், சில்வா 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    கடந்த 2014-ம் ஆண்டைவிட தற்போதைய மெல்போர்ன் ‘பிட்ச்’ உயிரோட்டமாக உள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் முடிவுகள் கிடைத்தன. மெல்போர்ன் ஆடுகளம் கடந்த சில வருடங்களாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. மேலும், போட்டிகளில் முடிவு கிடைக்காமல் ‘டிரா’விலேயே முடிந்துள்ளன.

    இந்திய அணி கடந்த 2014-ம் ஆண்டு மெல்போர்னில் விளையாடியபோது, உயிரோட்டமில்லாத ஆடுகளமாக இருந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 192 ரன்களும், ரியாஸ் ஹாரிஸ் 74 ரன்களும், கிறிஸ் ரோஜர்ஸ் 57 ரன்களும், பிராட் ஹட்டின் 55 ரன்களும், ஷேன் வாட்சன் 52 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி (169), ரகானே (147) ஆகியோரின் சதத்தால் 465 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    384 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் என்ற நிலையில் தத்தளித்தபோது விராட் கோலி (54), ரகானே (48) அட்டத்தால் இந்தியா போட்டியை டிரா செய்தது. ஆஷஸ் தொடரில் மெல்போர்ன் டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது. உள்ளூர் தொடரில் அதிக அளவில் சதங்கள் விளாசப்பட்டன.

    இதனால் நாளை தொடங்கும் போட்டியிலும் முடிவு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நேற்று ஆடுகளத்தை பரிசோதித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தற்போதைய ஆடுகளம் உயிரோட்டமாக இருக்கிறது. முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.



    தற்போதைய மெல்போர்ன் ஆடுகளம் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் ஆடுகளத்தை நேற்று பார்த்தபோது, அதன் அடிப்பகுதி உலர்ந்து காணப்பட்டது. ஆனால், மேற்பகுதி புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இது அப்படியே இருக்க வேண்டும். இந்த புற்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பந்து வீச போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கடந்த முறையை (2014) விட தற்போதைய ‘பிட்ச்’ போதுமான அளவு உயிரோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.

    முதல் இரண்டு போட்டிகளில் ஆடுகளம் என்ன செய்ததோ, அதை இந்த ஆடுகளமும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போதும் நாங்கள் வெற்றியை எதிர்நோக்கிதான் செல்வோம்’’ என்றார்.
    டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் போட்டியை ஏன் ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. #AUSvIND #BoxingDayTest
    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தேவாலயம் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்படும். அதில் பரிசு பொருட்கள் மற்றும் நன்கொடை அளிப்பார்கள். அந்த பெட்டியை மறுநாள் பிரித்து ஏழைகளுக்கு வழங்குவார்கள்.

    அந்த நாளை “பாக்சிங் டே” என்று அழைக்கிறார்கள். இதேபோல் கூலி தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்லும்போது அவர்களது முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்குவார்கள்.

    இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது.



    இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி ஆஸ்திரேலியா அணி மெல்போர்ன் மைதானத்தில் ஏதாவது ஒரு அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடும். இம்முறை இந்திய அணி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்டில் விளையாடுகிறது.
    ×