search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boris Johnson"

    • இங்கிலாந்தின் நிதித்துறை மந்திரி ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    • இதேபோல், இங்கிலாந்தின் சுகாதாரத்துறை மந்திரியான சஜித் ஜாவிதும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார்.

    இதற்கிடையே, கிறிஸ் கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    ஆனாலும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாளவில்லை எனக்கூறி அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இச்சம்பவம் இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியால் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டது
    • போரிஸ் ஜான்சன் பதவி விலகும்படி சொந்த கட்சியினரே வலியுறுத்தி வந்தனர்

    லண்டன்:

    இங்கிலாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.

    கடந்த 2020 ஆண்டு கொரோனா முதல் அலையினால் இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி லண்டனின் பிரதமரின் அலுவலக இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் விருந்து வழங்கினார். இதற்கு கண்டனம் எழுந்ததால், தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.

    இதேபோல் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

    இந்த இரு விவகாரங்களை முன் வைத்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று, சொந்த கட்சியினரே போர் கொடி தூக்கினர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பெரும்பான்மை எம்.பி.க்கள் கன்சர்வேடிவ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது.

    நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 211 எம்பிக்கள் ஆதரவாகவும், 148 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 59 சதவீத பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜான்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசிய போரிஸ் ஜான்சன், தனது கருத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் சக உறுப்பினர்களால் தவறாக சித்தரிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். #BorisJohnson #TheresaMay #ConservativeParty
    லண்டன்:

    பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சமீபத்தில் வெளியுறவு மந்திரி பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். இதற்கிடையே, டென்மார்க்கில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசினார்.

    மேலும், மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும் போது ஒருவர் மட்டும் முகத்தை மறைத்துக்கொண்டு மற்றொறுவருடன் பேசுவது தவறு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள பெண்கள் புர்கா அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு இருப்பதால் அவர்கள் வங்கிக்கொள்ளையர்கள் போல இருப்பதாகவும், புர்கா அடக்குமுறை சார்ந்தது எனவும் போரிஸ் ஜான்சன் கருத்து கூறியிருந்தார்.

    அவரது கூற்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால், பிரதமர் தெரேசா மே இதனை கண்டித்தார். பின்னர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி போரிஸ் ஜான்சன் மீது விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைத்தது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜான்சன் மீது கடுமையான நடவடிக்கையை தெரேசா மே எடுக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மீண்டும் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த போரிஸ் ஜான்சன், புர்கா குறித்த தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவது இல்லை என தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ’ புர்கா தொடர்பான எனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் தெரிவித்த கருத்துகளில் உறுதியாக உள்ளேன். என் சக நண்பகர்கள் எனது கருத்தில் உள்ள அர்த்தத்தை மிகவும் கவனத்துடன் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது, அவ்வாறு வெளியேறினால் அது நமக்கே  பாதகமாக முடியும் என்ற எனது வலுவான கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அதற்கு எதிர்வினையாக புர்கா விவகாரத்தில் நான் தெரிவித்த கருத்துக்களை தவறாக சித்தரித்து மக்களிடையே கோபத்தை அதிகப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்’ என அவர் தெரிவித்தார்.  #BorisJohnson #TheresaMay #ConservativeParty
    முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரிட்டன் முன்னாள் மந்திரி போரிஸ் ஜான்சன் மீது அவர் சார்ந்த கன்சர்வேடிவ் கட்சி விசாரணையை தொடங்கியுள்ளது. #BorisJohnson #TheresaMay #ConservativeParty
    லண்டன்:

    பிரிட்டன் வெளியுறவு மந்திரியாக பணியாற்றி சமீபத்தில் ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன், நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில அளித்த பேட்டியில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசினார். மேலும், வங்கிக்கொள்ளையர்கள் போலவும், புர்கா அடக்குமுறை சார்ந்தது எனவும் அவர் கூறியிருந்தார்.

    அவரது கூற்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் தெரேசா மே இதனை கண்டித்திருந்தார். இந்நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி போரிஸ் ஜான்சன் மீது விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜான்சன் மீது கடுமையான நடவடிக்கையை தெரேசா மே எடுக்கலாம் என தெரிகிறது.

    பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரேசா மேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    பிரிட்டன் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #BorisJohnson #Conservative
    லண்டன் :

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பல்வேறு முக்கிய நடைமுறைகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக விலகி விடும் என்பதால் வர்த்தகம், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய யூனியனுடன் நடத்தப்பட்டு வருகிறது.

    பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரசா மே கையாளும் முறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. 

    பிரிட்டனில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் அக்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கமான ஒன்று, அவ்வாறு கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். 

    ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாதந்தோறும் அக்கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டியில் இருப்பவர்கள் யார் என்பது பற்றி சர்வே நடத்தப்படுவது வழக்கம், அதில் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்று ஆன்லைன் மூலம் தாங்கள் விரும்பும் தலைவர்களுக்கு வாக்களிப்பார்கள். 

    இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட சர்வே முடிவில் 8 சதவிகிதம் வாக்குகளுடன் 5-ம் இடத்தில் இருந்த முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன், கடந்த மாதம் நடத்தப்பட்ட சர்வே முடிவில் 29 சதவிகிதக வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் அவரது செல்வாக்கு அபரிமிதமாக அதிகரித்துள்ளது. 

    இவரைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி சஜித் ஜாவித் 19 சதவிகித வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், ஜகோப் ரீஸ்-மோக் 13 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

    பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் தெரசா மே முடிவிற்கு மறுப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்ததாலேயே கட்சியினரிடம் போரிஸ் ஜான்சன் செல்வாக்கு குறுகிய காலத்தில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×