search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bollywood"

    • கிங் கான் என அழைக்கப்படும் ஷாருக்கிற்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்
    • டிசம்பர் 22, 2011 அன்று டான்-2 பட விளம்பரத்திற்காக பாட்னா வந்திருந்தார்

    இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாருக் கான்.

    ஷாருக் கதாநாயகனாக நடித்து, தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கி இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் இந்தி திரைப்படம், ஜவான். இப்படத்தை இந்தியாவிலும் உலகெங்கிலும் இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழி திரைப்பட ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சம்பந்தமான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பெருமளவில் மக்கள் திரளாக கூடி பாலிவுட் திரையுலகில் "கிங் கான்" என அழைக்கப்படும் ஷாருக்கை காண உற்சாகமாக கூடியிருக்கிறார்கள்.

    ஆனால், ஆய்வில் இது தவறு என தெரிகிறது.

    உண்மை என்னவென்றால், ஷாருக் கான் நடித்த டான்-2 எனும் திரைப்படம் டிசம்பர் 23, 2011 அன்று திரையரங்குகளில் வெளியானது.

    அதற்கு முந்தைய நாள், டிசம்பர் 22, 2011 அன்று, அத்திரைப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிக்காக பீகார் தலைநகர் பாட்னாவிற்கு ஷாருக் வந்திருந்தார். அப்போது அவர் பாட்னாவின் முக்கிய குறியீட்டு இடங்களில் ஒன்றான பிஸ்கோமான் பவன் (Biscomaun Bhawan) அருகே உள்ள மவுர்யா ஓட்டலில் தங்கியிருந்தார்.

    அவரை காண பெருமளவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். தனது ரசிகர்களை ஓட்டல் பால்கனியிலிருந்து கண்ட ஷாருக் அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

    இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ காட்சியில் மக்கள் வெள்ளத்திற்கு பின்னால் பிஸ்கோமான் பவன் தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இப்போது தவறுதலாக ஜவான் பட நிகழ்ச்சி எனும் பெயரில் வைரலாகி உள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கும், ஜவான் பட இசை வெளியீட்டு விழாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே திருப்பதி சென்றுள்ளார்.
    • இவரின் புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் அதிகம் லைக் செய்யப்படுகின்றன.

    பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இவர் பாலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார். அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனே கிராமிய பாடகர் மேமே கான் பாடலுக்கு நடனமாடினார்.

    தீபிகா படுகோனே
    தீபிகா படுகோனே

    இந்நிலையில், தீபிகா படுகோனே திருப்பதி சென்றுள்ளார். இன்று அதிகாலை விஜபி தரிசனம் செய்ததை அடுத்து தேவஸ்தானம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், தரிசனம் முடிந்து வெளியே வந்த தீபிகா படுகோனேவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    தமிழில் ஆடுகளம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை டாப்சி, தற்போது இந்தி படத்தில் இருந்து விலகி இருக்கிறார். #Taapsee #Bollywood
    டாப்சி இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். அனுராக் பாசு இயக்கும் புதிய படத்தில் இணைந்து இருந்த அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார்.

    டாப்சி பன்னு, ராஜ்குமார் ராவ், பாத்திமா சனா சாகித், ஆதித்யா ராய் கபூர், அபிஷேக் பச்சன் எனப் பெரிய நட்சத்திர கூட்டணியை உருவாக்கி அனுராக் பாசு புதிய படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

    இப்படத்தில் நடிக்க டாப்சி எந்தத் தேதிகளில் தனது கால்ஷீட் வேண்டும் எனப் படக்குழுவிடம் கேட்டதற்கு முறையான தகவல்கள் கிடைக்காததால் படத்திலிருந்து விலகியுள்ளார். டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மன்மஸ்ரியான், முல்க் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாகின.



    இந்த ஆண்டு இவர் நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளன. அவர் நடித்துள்ள தாட்கா, பாடியா ஆகிய இந்திப்படங்களின் படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கில் நடித்த கேம் ஓவர் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்தது.

    இது தவிர துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் புதிய படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக டாப்சி நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
    எனது மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் என்று நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். #ManishaKoirala
    மனிஷா கொய்ராலா 1990களில் தமிழ், இந்தித் திரையுலகை கலக்கியவர். மணிரத்னத்தின் `பம்பாய்’, ‌ஷங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

    அதன்பின், முழு நம்பிக்கையுடன் புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ளார். தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததை ‘ஹீல்டு’ என்ற சுயசரிதைப் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், ‘கேன்சர் என் வாழ்வில் நிறைய தைரியங்களை கொடுத்துள்ளது. என்னுடைய மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன்.

    நான் பல இருட்டான நாள்களையும், தனியான இரவுகளையும் கடந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. என் காலடியில்தான் உலகமே இருப்பதாகக் கருதினேன். இடைவிடாத தொடர் படப்பிடிப்புகளால் 1999ஆம் ஆண்டு உடல் அளவிலும் மனதளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டேன்.



    அதிலிருந்து மீள்வதற்கு மது மட்டுமே எனக்கு சிறந்த வழியாக இருந்தது. என் நண்பர்கள் நிறைய அறிவுரை கூறியும் நான் அதைக் கேட்கவில்லை. கேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன். என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியது. முன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன்” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். #ManishaKoirala
    இந்தி சினிமாவில் கதாநாயகியாக நடித்து வரும் ஜனீன் கான், பாலியல் தொல்லை கொடுத்தவர்களை தாக்கிவிட்டு சென்றிருக்கிறார். #ZarineKhan
    சல்மான் கான் நடித்த வீர் படம் மூலம் அறிமுகமானவர் ஜரீன் கான், தொடர்ந்து இந்தி சினிமாவில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் தமிழில் நகுல் நடித்த ‘நான் ராஜாவாக போகிறேன்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

    ஜரீன் கான் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்காக மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்துக்கு சென்றார். அவர் வருவதை முன்பே அறிவித்து இருந்ததால் கடை முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

    கடையை திறந்து வைத்த ஜரீன்கான் கடையின் முன்புறம் வந்து சில நிமிடங்கள் ரசிகர்களை பார்த்து கைகாட்டிவிட்டு காரில் ஏற முயன்றுள்ளார். அப்போது ரசிகர்கள் அவர்மீது பாய்ந்ததோடு தொட்டு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜரீன் கான் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர்களை பிடித்து தள்ளியதுடன், சிலரை அடித்துவிட்டார். நடிகை இந்த அளவுக்கு வேகத்துடன் தாக்கியதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர்கள் மிரண்டுவிட்டனர். பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர்களை அடித்துவிட்டு ஒரு வழியாக தனது காரில் ஏறி சென்றார் ஜரீன்கான்.



    இந்த சம்பவம் குறித்து அவர் டுவிட்டரிலும் தெரிவித்துள்ளார். ‘சில தவறான நபர்கள் என்னிடம் சில்மி‌ஷம் செய்ய முயன்றனர். நான் என்னுடைய பாணியில் தாக்கி பதிலடி கொடுத்து தப்பித்தேன்’ என்று கூறி உள்ளார். ஜரீன் கான் ரசிகர்களிடம் சிக்கி தாக்கிவிட்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜரீன் கான் துணிச்சலாக நடந்து கொண்டதை ரசிகர்கள் பாராட்டினர்.
    இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் நடிகை கங்கனா ரணாவத் முதலிடம் பெற்றுள்ளார். #KanganaRanaut #Bollywood
    இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமன்றி மற்ற பகுதிகளிலும் வசூல் குவிக்கின்றன. இதனால் அந்த படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பெரிய அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்.

    கடந்த வருடம் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று முதல் இடத்தில் இருந்தார். இவர் நடித்து வெளிவந்த பத்மாவத் படம் ரூ.215 கோடி செலவில் தயாராகி ரூ.580 கோடி வசூல் பார்த்தது. கங்கனா ரணாவத் ரூ.12 கோடி பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார்.

    இந்த வருடம் கங்கனா ரணாவத் முதல் இடத்தை பிடித்துள்ளார். ராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் மணிகர்னிகா படத்தில் லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் ரூ.14 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நடிகைகள் எவரும் இதுவரை இவ்வளவு சம்பளம் பெற்றது இல்லை.



    கங்கனா ரணாவத் நடித்த குயீன் படம் வசூல் சாதனைகள் நிகழ்த்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு படத்துக்கு படம் சம்பளத்தை கூட்டி வந்த அவர் இப்போது ரூ.14 கோடி பெற்று இருக்கிறார். கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ளார்.
    இந்தி திரையுலகில் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரிஷி கபூர், சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். #RishiKapoor #Bollywood
    இந்தி திரையுலகில் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரிஷிகபூருக்கு 66 வயது ஆகிறது. இவர் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். ரிஷி கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹெல் ஹெல் மெயின், ஹபி ஹபி, கர்ஷ், அமர் அக்பர் அந்தோனி, ரபூ சக்கர், பனா, லவ் ஆஸ்கல், உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தின.

    நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்டார். ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். ரிஷி கபூருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மும்பையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அவர் புறப்பட்டு செல்கிறார்.

    இதுகுறித்து ரிஷிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பணியில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். தேவையில்லாத வதந்திகளையும் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகை ஒருவர், தமிழில் உச்ச நட்சத்திரம் நடித்த படத்தில் அவருக்கு காதலியாக நடித்தாராம்.
    பிரபல பாலிவுட் நடிகை ஒருவர், தமிழில் உச்ச நட்சத்திரம் நடித்த படத்தில் அவருக்கு காதலியாக நடித்தாராம். இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றாலும், பாலிவுட்டில் நடிகைக்கு வாய்ப்பு குறைந்து வருகிறதாம். இதனால் போட்டோ ஷூட் எடுத்து அனைவருக்க அனுப்ப முடிவு செய்திருக்கிறாராம்.

    ஆனால், இந்த போட்டோ ஷூட் வழக்கமாக இல்லாமல், அரை நிர்வாணமாக போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறாராம். இந்தப் போட்டோ வெளியில் லீக் ஆகியிருக்கிறதாம். பட வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வார்கள் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் அமலாபால் தற்போது முதல்முறையாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Amalapaul
    அமலாபால் நடிப்பில் இறுதியாக ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்ப்பார்த்தளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. இப்படத்தை அடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘ராட்ச்சசன்’ படத்தில் நடித்து வருகிறார். முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    அதுபோல், கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அமலாபால்.



    அர்ஜுன் ராம்பால் நடிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் அமலாபால். இப்படத்தை நரேஷ் மல்ஹோத்ரா இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக இந்தி படத்தில் அறிமுகமாக இருக்கிறார் அமலாபால்.
    பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த விழா தொடர்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். #AkashAmbaniEngagement #ShahrukhKhan #AliaBhat
    மும்பை:

    இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி மற்றும் இஷாவும் இரட்டையர்கள். மூன்றாவது ஆனந்த் அம்பானி.

    ஆகாஷ் அம்பானிக்கு தனது பள்ளித் தோழியான ஷ்லோகா மேத்தாவுடன் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதற்கிடையே, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த விழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அம்பானி குடும்பம் பிரமாண்டமாக செய்து வருகிறது.

    இவர்களது திருமண அழைப்பிதழ் பெரிய பரிசு பெட்டி போன்ற வடிவத்தில் தயார் செய்யப்பட்டது . பெட்டியின் உள்ளே விநாயகர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டது. ஒரு அழைப்பிதழ் தயாரிக்க மட்டும் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், இன்று நடந்த ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர்.

    மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  #AkashAmbaniEngagement #ShahrukhKhan #AliaBhat
    மூத்த நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் பற்றி பேச வேண்டும் என்று காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஹூமா குரேஷி கூறியுள்ளார். #HumaQureshi
    தமிழில் வெளியான காலா திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ஹூமா குரேஷி. இந்தி திரையுலகில் பிரபல நடிகையான இவரிடம் செய்தியாளர்கள், ஹாலிவுட்டில் புகழ் பெற்ற #மீடு பிரசாரம் (#MeToo) பாலிவுட்டிற்கு இன்னும் வரவில்லை என நீங்கள் மனவருத்தம் அடைந்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த குரேஷி, அது நடக்க போவதில்லை (இந்தி திரையுலகம்). ஹாலிவுட்டில் மூத்த மற்றும் மதிப்பிற்குரிய பல நடிகைகள் இதுபற்றி பேசியுள்ளனர்.

    அதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தியாவிலும் இதுபோல் நடைபெற வேண்டும் என உண்மையில் நான் நம்புகிறேன். அதற்காக இறைவனை வேண்டி கொள்கிறேன்.

    ஆனால் இது திரை துறையில் நடைபெற வேண்டும் என்று மட்டும் நான் உணரவில்லை. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இது நடைபெற வேண்டும் என கூறியுள்ளார்.



    பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ள நிலையில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் பற்றி அவர்கள் பேச முற்படுவதில்லை. திரைப்படங்களில் நடிப்பவர்களை நாம் எப்படி காண்கிறோம்? என்றும் யோசிக்க வேண்டும். இது வீட்டில் இருந்தே தொடங்குகிறது.

    ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் பற்றி கூற முன்வருகிறார் எனில் அவரது நடத்தையில் குறை காணும் முயற்சியை நாம் தொடங்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, தான் சினிமா துறைக்கு வந்த புதிதில் பணத்திற்காக மோசமான படங்களில் நடித்ததாக கூறியிருக்கிறார். #RadikaApte
    ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பில் தனது காலை அந்த நடிகர் உரசி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவரது ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:-

    “சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. உறவினர்கள் இல்லாதவர்கள் கஷ்டப்பட வேண்டி உள்ளது. பட வாய்ப்புக்கு அவர்கள் போராடும் நிலை இருக்கிறது. பின்புலம் உள்ளவர்கள் உறவினர்கள் உதவியால் வாய்ப்புகள் பெற்றாலும் திறமை இருந்தால்தான் அவர்களால் நிலைக்க முடியும். நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.



    என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.”

    இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். 
    ×