search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Protest"

    • ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் (ஏ) ராஜசிம்மா மகேந்திரா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய திராவி மாடல் அரசை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக அருகே மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் (ஏ) ராஜசிம்மா மகேந்திரா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், மாவட்ட பொருளாளர் மதுசூதனன், நகரத் தலைவர் சதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் அணி பிரிவு தலைவர்கள் மண்டல் தலைவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    சென்னை:

    தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது என்று பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. சில முறைகேடுகள் தொடர்பான பட்டியலையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

    இதையடுத்து தி.மு.க. அரசை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    சென்னையில் கட்சி மாவட்டங்கள் 7 உள்ளன. அதன்படி 7 இடங்களில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஒரு இடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று காலையில் உண்ணாவிரதம் தொடங்கியது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், எம்.என்.ராஜா, கராத்தே தியாகராஜன், சக்கரவர்த்தி, வினோஜ் செல்வம், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய்சத்யன், தனசேகர், லதா சண்முகம் மற்றும் திருப்புகழ், லலிதா மோகன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
    • வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, பல்வேறு துறைகளிலும் நடக்கும் முறைகேடுகள், சட்டம்- ஒழுக்கு சீர்குலைவு ஆகியவற்றை சுட்டிக்காட்டி நாளை (5-ந் தேதி) அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.

    கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

    இதேபோல் வட சென்னை மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென்சென்னை, தென்சென்னை கிழக்கு, ஆகிய 7 மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    பாதுகாப்பு, போக்குவரத்து பிரச்சினைகளால் ஒரு இடத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றனர்.

    இதையடுத்து வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    எனவே நாளை (செவ்வாய்கிழமை) சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மட்டுமே உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அண்ணாமலை பங்கேற்கிறார். மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அந்த அந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆகிய இடங்களில்தான் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும்.
    • பா.ஜனதா எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்துவதால் கொளத்தூர் தொகுதியை கேட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. சார்பில் வருகிற 5-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலைமை தாங்க நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

    மாநில தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுள்ளார்கள். ஆனால் அங்கு உண்ணாவிரதத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.

    சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆகிய இடங்களில்தான் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

    பா.ஜனதா எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்துவதால் கொளத்தூர் தொகுதியை கேட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தை எழுச்சியுடன் நடத்த அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    எனவே கொளத்தூரில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுமா? அல்லது வேறு இடத்தில் போராட்டம் நடத்தப்படுமா என்று தெரியவில்லை. பா.ஜனதா நிர்வாகிகள் கூறும்போது, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றனர்.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிப்படி பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தியும், மழை வெள்ள பாதிப்புக்கு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க கோரியும் பா.ஜனதாவினர்தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் பா.ஜனதாவினர் நின்றபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெட்ரோல்


    “தி.மு.க. அரசே, தமிழக அரசே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று”, “பெட்ரோல்- டீசல் விலையை குறைத்திடு”, “மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கிடு” என்று கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காளிதாஸ், கராத்தே தியாகராஜன், வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா உள்பட பல நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட சென்ற பாஜகவினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Kearala #PinarayiVijayan #BJPProtest
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள அரசு இறங்கியது.

    இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சபரிமலையின் பாரம்பரிய விதிகளை சீர்குலைக்கக் கூடாது என்று அய்யப்ப பக்தர்கள் கூறி வருகின்றனர். கேரளா முழுவதிலும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாஜகவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.



    இந்நிலையில், கேரளா பாஜகவினர் இன்று முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்களை போலீசார் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனாலும் பாஜகவினர் தடுப்பை உடைத்து உள்ளே செல்ல முயற்சி மேற்கொண்டனர்.

    இதையடுத்து, அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாஜகவினரை விரட்டினர். இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Kearala #PinarayiVijayan #BJPProtest
    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை அவமரியாதை செய்த கேரள போலீசாரையும், கேரள அரசையும் கண்டித்து குமரியில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர். #Sabarimala #BJP #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் நேற்று சபரிமலைக்கு இருமுடிகட்டி சென்றார்.

    நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஆதரவாளர்களுடன் காரில் சென்ற அவரை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். பொன். ராதாகிருஷ்ணன் காரை மட்டும் பம்பைக்கு அனுமதிப்பதாகவும், மற்றவர்களின் காரை அனுமதிக்க முடியாது என்றும் போலீசார் கூறினர். இதனால் போலீசாருக்கும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது போல சபரிமலையில் தரிசனம் முடிந்து இன்று அதிகாலை பொன்.ராதாகிருஷ்ணன் கோவை சென்றார். அப்போதும் அவரது ஆதரவாளர்களின் காரை கேரள போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தினர். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சபரிமலையில் நேற்று பொன்.ராதாகிருஷ்ணன் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்ற தகவல் பரவியதும் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் களியக்காவிளை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டம் காரணமாக கேரளாவில் இருந்து நாகர்கோவில் வரும் அரசு பஸ்கள் பாறசாலையில் நிறுத்தப்பட்டது. இது போல நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை அவமரியாதை செய்த கேரள போலீசாரையும், கேரள அரசையும் கண்டித்து குமரி மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத்தலைவர் முத்து கிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் கேரள அரசும், அங்குள்ள போலீசாரும் கடும் கெடுபிடி காட்டுகிறார்கள். அய்யப்பனை தரிசிக்கவும், சரண கோ‌ஷம் எழுப்பவும் கட்டுப்பாடு விதிக்கும் கேரள அரசையும், போலீசாரையும் கடுமையாக கண்டிக்கிறோம்.

    மேலும் இருமுடிகட்டி சபரிமலைச் சென்ற மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இது பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள அரசுக்கும், போலீசாருக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் நாளை பாரதிய ஜனதா கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தையும் மூடி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். பஸ்கள் மற்றும் வாகனங்களை இயக்க வேண்டாம். இதனால் ஏற்படும் அசவுகரியங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Sabarimala #BJP #PonRadhakrishnan
    திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #TipuJayanti #KarnatakaBJP #BJPProtest
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா திப்பு ஜெயந்தியாக நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களை திருப்திபடுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி திப்பு ஜெயந்தியை கொண்டாடுவதாக குற்றம்சாட்டுகிறது.


    இந்நிலையில் திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பாஜக தொண்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், திப்பு ஜெயந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர். #TipuJayanti #KarnatakaBJP #BJPProtest
    ×