search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Protest"

    • தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் பண்ணவயல் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ் (தெற்கு), சதீஷ்குமார் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா வரவேற்றார்.

    இதில் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் பேசினார். இதனைத்தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், பிரசார பிரிவு மாவட்ட துணை தலைவர் போர்வாழ் கோவிந்தராஜ், மருத்துவர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தர்மதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யம்பெருமாள் நன்றி கூறினார்.

    • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் மாவட்ட விவசாய அணி தலைவர் சக்திவேல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவினையும் அளித்தனர்.

    இதே போல பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் தங்கள் கைகளில் கரும்பு ஏந்தி வந்து ஊர்வலமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    திருச்சி:

    தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய அளவில் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசிக்குமார், மாநில விவசாய அணி துணைத் தலைவர் கோவிந்தராஜன், வரகனேரி பார்த்திபன், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், தண்டபாணி, கள்ளிக்குடி ராஜேந்திரன், சந்துரு, முத்தையனன், கும்பக்குறிச்சி பழனிச்சாமி, ஏ.ஆர்.பாட்சா மல்லி செல்வம், மிலிட்டரி நடராஜன், முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், பழனிக்குமார், நாகேந்திரன், பூண்டு பாலு மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கைகளில் கரும்பு மற்றும் தேங்காய்களை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

    • பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஊட்டி,

    பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரை கண்டித்து நீலகிரி மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க இளைஞரணி தலைவர் பிரேம் யோகன் தலைமை தாங்கினார். இதில் நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன், நகரத் தலைவர் திரு பிரவீன் ,நகர பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், நகரத் துணைத் தலைவர் அரிகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    • திட்டக்குடியில் நகராட்சியை கண்டித்து பா.ஜ.க வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • யாரேனும் இறந்தால் இறந்தவர் உடலை அந்த பகுதியில் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கோழியூர் 8- வது வார்டில் சாலையின் நடுவே மின்கம்பத்தை வைத்து சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லவும், மேலும் யாரேனும் இறந்தால் இறந்தவர் உடலை அந்த பகுதியில் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது. அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரியத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற 8-ம் தேதி கோழியூர் 8 வது வார்டில் உள்ள மின் கம்பத்தின் முன்பு அப்பகுதி மக்களோடு சேர்ந்து பாஜக நகரத் தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் அவ்விடத்தில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவுத்திருந்தனர்.

    இந்நிலையில் இது வரை நகராட்சி நிர்வாகமும் மின்வாரியத்துறை அதிகாரிகளோ யாரும் அழைத்துப் பேசாததால் 8வது வார்டில் ஒப்பாரிவைக்கும் போராட்டம் இன்று காலை நடைபெற்றது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திட்டக்குடி நகராட்சி தலைவர்வெண்ணிலா கோதண்டம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து இரண்டு நாட்களில் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைத்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் . இதில் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவை அண்ணாமலை விரும்பி சாப்பிட்டார்.
    • மலைவாழ் மக்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு அண்ணாமலை அங்கிருந்து மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பர்கூர் தாமரைகரை பகுதிக்கு சென்றார்.

    அப்போது மலைவாழ் மக்களில் உள்ள சோளகர், லிங்காயத்து, இந்து மலையாளி என்ற சமூக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்து மலையாளி என்ற சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மற்ற மாவட்டத்தில் கொடுப்பது போல சாதி சான்றிதழ் கொடுப்பது இல்லை என்று கூறி அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் அண்ணாமலையின் காலில் விழுந்தார்.

    பதிலுக்கு அவரது காலில் திரும்ப விழுந்த அண்ணாமலை கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்தவரை தனது தோளில் சாய்த்து ஆறுதல் கூறி, வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் போது உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

    இதனை தொடர்ந்து சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவு விரும்பி சாப்பிட்டார். பின்பு அங்கு உள்ள மலைவாழ் மக்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    • விலைவாசி உயர்வு மட்டுமே தி.மு.க. ஆட்சியில் சாதனையாக உள்ளது.
    • கோவை விவகாரத்தில தமிழக டி.ஜி.பி.யையும் பொய் பேச வைத்துள்ளது.

     அந்தியூர்: 

    தமிழகத்தில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் அருகில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி விட்டு,பால் விற்பனை விலையை 12 ரூபாய் என உயர்த்துவதுதான் திராவிட மாடல். குஜராத்தில் செயல்படும் அமுல் கூட்டுறவு நிறுவனம், தனது வருவாயில் 82 சதவீதத்தை அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்குகிறது.

    கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 32 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஒரு நாளுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. ஆனால், அமைச்சர் நாசர் நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பொய் சொல்கிறார். 


    தி.மு.க. ஆட்சியில் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. கட்டுமானப் பொருட்கள் தொடங்கி, சொத்துவரி, குடிநீர், மின்சார கட்டணம், ஆவின் பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தும், தமிழகத்தில் விலையை குறைக்கவில்லை. கடந்த 16 மாத கால தி.மு.க. ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது.

    கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் என பா.ஜ.க. சொன்னது. அதனை என்.ஐ.ஏ. உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக டி.ஜி.பி.யையும் பொய் பேச வைத்துள்ளது. எத்தனை நாளுக்குத்தான் இந்த ஏமாற்று வேலையை பார்த்துக் கொண்டு இருப்பது? வரும் மக்களவை தேர்தலின்போது, தமிழகம் இந்த மாயையில் இருந்து வெளியேறி, தேசியத்தின் பக்கம் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    • கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • அதன்படி 1100 மண்டலங்கள் உள்ளன. எனவே இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 15-ந்தேதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன் படி நாளை (15-ந்தேதி) அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த முறை போராட்டத்தில் அடிமட்ட மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி 1100 மண்டலங்கள் உள்ளன. எனவே இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    நாளை 1100 இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

    சென்னையில் 66 இடங்களில் நடைபெறுகிறது. அடையாறு டெலிபோன் எக்ஸ்சேன்ஞ் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனும், மடிப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் கரு.நாகராஜனும் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    • மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளருக்கு, மேயர் கடிதம் எழுதியதாக புகார்.
    • மாநகராட்சிக்குள் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மோதல்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, திருவனந்தபுரம் மாநகராட்சியில் பணி நியமனம் வழங்க மேயர் ஆர்யா ராஜேந்திரன் சிபாரிசு கோரியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நவம்பர் 1ஆம் தேதி கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அனவூர் நாகப்பனுக்கு மேயர் ஆர்யா ராஜேந்திரன் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது.

    திருவனந்தபுரம் மாநகராட்சியின் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 74 மருத்துவர்கள், 66 பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் 64 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் உள்பட 295 தற்காலிக பணியிடங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பெயரை சிபாரிசு செய்யும்படி அதில் மேயர் கோரியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கடிதம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் மாநகராட்சி முன்பு பாஜக மற்றும் இளைஞர்கள் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது. 


    மேயரின் கடிதம் தொடர்பாக, திருவனந்தபுரம் மாநகராட்சிக்குள் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிய நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில், தான் அந்த கடிதத்தை அனுப்பவில்லை, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் திருவனந்தபுரத்தில் நான் இல்லை, இந்த விவகாரம் பற்றி முறையான விசாரணை நடத்தப்படும் என்று மேயர் ஆர்யா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

    • அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    சென்னையில் போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    இதனை கண்டித்து கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் திருஞானசம்மந்தம் தலைமையில், பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் நகர பாஜக தலைவர் முத்துவேல், ஒன்றிய துணைத் தலைவர்கள் பரணி ஆனந்தன், அருளப்பன், நிர்வாகிகள் பன்னீர் பாலாஜி, மூர்த்தி, சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் பா.ஜ.க. நகர தலைவர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் ஆர்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் முத்துசாமி, துரைநா டார், மாவட்டச் செயலாளர் குருலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் நவநீதன், சித்தரவேலு, நகரத் துணை தலைவர் சதீஷ், மணிகண்டன், குணா, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கடலூர் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    • சோதனை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    கடலூர்:

    தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கார் திடீரென்று வெடித்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, கார் இரண்டாக உடைந்த சம்பவம் பெரும் அதிர்வலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வெடிகுண்டு எடுத்துச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதனை தொடர்ந்து 5 பேரை உ.பா. சட்டத்தில் கைது செய்து என்.ஐ.ஏ விசாரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார்.

    இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவு பேரில் தலைமை காவலர் பாரி தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தலைமை காவலர் இளங்கோவன் தலைமையில் மோப்பநாய் பீட் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடை முழுவதும் வெடிகுண்டு உள்ளதா? என்பதனை தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சந்தேகப்படும்படியான பொருட்கள் உள்ளதா? என்பதனையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இது மட்டுமின்றி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கடலூர் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சோதனை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • வரலாறு காணாத மின் உயர்வினை தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது.
    • மத்திய அரசின் மீது பழி போடுவதை விட்டுவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    கோவை:

    தமிழகத்தில் மின்சாரம் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. இதனை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பா ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று. ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமை தங்கினார்.

    இதில் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது: வரலாறு காணாத மின் உயர்வினை தமிழக அரசு உயர்த்தி இருக்கின்றது. இந்த மின்கட்டண உயர்வினால் தொழிற்சாலை செலவு அதிகரிக்க போகிறது.

    தற்ேபாதைய குடியரசு தலைவருக்கு நடந்த பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு முக்கியமான நிகழ்வு இருப்பதால் கோவை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. டெல்லியில் இருந்தாலும் அவர் எண்ணங்கள் தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இருக்கின்றது.

    எந்த விலை உயர்வு ஏற்பட்டாலும் அதற்கு பா.ஜ.க காரணம் என்கின்றனர். எனவே மத்திய அரசின் மீது பழி போடுவதை விட்டுவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

    ×