search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp leader subramanian swamy"

    தேசிய ஜனநாயக கூட்டணி, தனது வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். #SubramanianSwamy
    மும்பை:
     
    மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    பொருளாதார வளர்ச்சிகள் வாக்குகளை கொண்டுவரப் போவது கிடையாது. இந்தியா ஒளிருகிறது என்ற கோஷத்துடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னுடைய அரசுக்கு பிரசாரம் மேற்கொண்டார், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 
    இதற்கிடையே, மீண்டும் பா.ஜ.க தன்னுடைய நம்பிக்கை (இந்துத்துவா) மற்றும் ஊழலற்ற அரசு என வாக்குறுதி அளித்தது. இதனால் 2014-ல் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்துத்துவா மட்டுமே பா.ஜ.க.வுக்கு உதவும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அதற்கான வேலைகளை பா.ஜ.க. தொடங்கி வருகிறது. அதன் பணிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். இப்போது இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை, அதுகுறித்து பேச நான் நிதி மந்திரி கிடையாது என தெரிவித்துள்ளார். #SubramanianSwamy
    திருப்பதி ஏழுமலையான் கோவில் விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்ய உள்ளேன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். #SubramanianSwamy #TirupatiTemple
    புதுடெல்லி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தலைமை குருக்கள் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ரமண தீட்சிதர், திருப்பதி கோவிலில் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், ராஜ பரம்பரையினர் சுவாமிக்கு வழங்கிய 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணவில்லை. சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஆகம விதிகளை திருப்பதி தேவஸ்தானம் மீறுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, திருப்பதி தேவஸ்தான விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப் போவதாக பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்ய உள்ளேன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் யமுனாவை சுத்தப்படுத்தும் திட்டம் ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் தயாராக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் பொதுநல மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார். #SubramanianSwamy #TirupatiTemple
    ×