search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike accident"

    • வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36) கூலி தொழிலாளி. இவர் தனது பைக்கில் அதே பகுதியை சேர்ந்த சரண் (27) என்பவரை ஏற்றிக்கொண்டு ஆம்பூருக்கு சென்றார்.

    பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது சின்ன கொமெஸ்வரம் வீர கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து ஓசூர் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் வெங்கடேசன் மற்றும் சரண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார், விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 32). இவர் ஆயுதப் படை பிரிவில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    வேலூர் காகிதப்பட்டறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் 42 இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு ஜெயபால் வேலூரில் இருந்து சத்துவாச்சாரி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சதீஷ் காகிதப்பட்டறையில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    காகிதப்பட்டறை ரோட்டில் வந்தபோது எதிர்பாராத விதமாக சதீஷ் பைக்கும், ஜெயபால் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் ஜெயபால் படுகாயமும், சதீஷ் லேசான காயமடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயபாலை மீட்டு பூட்டுதாக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    லேசான காயமடைந்த சதீஷ் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, கிளித்தான் பட்டறை அருகே உள்ள வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 17).

    இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் கிளித்தான் பட்டறை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    காட்பாடி எல்.ஜி.புதூரை சேர்ந்த கதிரவன் (19). என்பவர் பைக்கில் வேகமாக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கதிரவன் ஓட்டி வந்த பைக் தனுஷ் மீது மோதியது.

    இதில் தனுஷ் மற்றும் கதிரவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தனுஷ் பரிதாபமாக இறந்தார்.

    சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கதிரவனும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைக் மோதியதில் பள்ளி மாணவனும் வாலிபரும் இறந்த சம்பவம் காட்பாடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜல்லிகற்களில் சிக்கி தவறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 35). இவர் சென்னை மடிப்பாக்கத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    நேற்று காலை சென்னை செல்வதற்காக அருள்தாஸ் பைக்கில் சென்றார். அனந்தலை தனியார் கல் குவாரி அருகே வந்த போது சாலையில் கிடந்த ஜல்லிகற்களில் பைக் சிக்கியது. இதில் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். அருள்தாஸ் பலத்த காயமடைந்தார்.

    இதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் அருள் தாசை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அருள்தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் கட்டிட வேலைக்கு கார்த்திக் சென்றார். வேலை முடிந்து மாலை பைக்கில் வீடு திரும்பினார்.

    அப்போது ஆத்தூர்குப்பம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விரமாக பைக் மோதியது. இதில் கார்த்திக் பலத்த காயம் அடைந்தார்.

    அங்கிருந்து பொது மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்ட றம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் படுகாயம்

    ஜோலார்பேட்டை:

    சென்னை அருகே கேளம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மகன் தீபக் (வயது 21). இவர் ஏலகிரி மலையில் நடைபெறும் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு வந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது பைக்கில் சென்னை நோக்கி புறப்பட்டார் அப்போது ஏலகிரி மலை 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதி வலது கால் முறிவு ஏற்பட்டது.

    உடனடியாக அங்கிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது சம்பந்தமாக தீபக் கொடுத்த புகாரின் பேரில் ஏலகிரி மலை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மயில்வாகனம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பின்னால் வந்த பைக் மோதியது
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ஜெய மாதா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சக்தி வேல் (வயது 15). அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது உறவினர் மகள் யோகேஸ் வரி (15). இவர்களது நண்பர்கள் நிசாந்த் (14), அஸ்வினி (14).

    இவர்கள் நான்கு பேரும் சம்பவத்தன்று பார்சம்பேட்டை கடைத்தெரு வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தனர். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர் மீதும் மோதி படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அங்கிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப் பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மகனுடன் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த பொன்னை அருகே உள்ள பரமசாத்து கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மனைவி ராதா (வயது 40).

    ராதா நேற்று மதியம் தனது மகனுடன் பைக்கில் பரமசாத்து கிராமத்தி லிருந்து ராணிப்பேட்டை நோக்கி சென்றனர்.

    குமணந்தாங்கல் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ராதாவின் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராதாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் ராதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அடுத்த தச்சம்பாடி, கிராமத்தை சேர்ந்தவர் சுதாகரன், (வயது 47) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2மகன்கள், 1 மகள், உள்ளனர்.

    சுதாகரன், நேற்று இரவு சேத்துப்பட்டு, புறவழி சாலை வழியாக தச்சம்பாடி, நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது புறவழி சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாகரன், பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர், சிஎம்சி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுதாகரன், வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    வேலூர் முள்ளிப்பாளையம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளமதி மகன் கோகுல்நாத் (வயது 17).

    வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுதாகர் (18). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஆற்காடு அருகே கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்துள்ளனர்.

    பின்னர் வேலை முடிந்து மாலை 3 மணியளவில் ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலம் சாலை வழியாக வேலூர் நோக்கிச் சென்றனர். பைக்கை கோகுல்நாத் ஓட்டியுள்ளார். ஆற்காடு- கண்ணமங்கலம் சாலையில் திமிரி அடுத்த கரடிமலை வளைவில் சென்றபோது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சுதாகர் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், முதன்மை காவலர் சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சுதாகரை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோகுல்நாத்தின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டனர்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஆற்காடு:

    வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் நாத் (வயது 18). இவர் ஆற்காடு அருகே உள்ள தாஜ் புரா பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். இவரது நண்பர் வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுதாகர்.

    இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆற்காட்டில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    ஆற்காடு அருகே உள்ள கரடிமலை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையின் ஓரம் இருந்தமைல் கல் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டு 'வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதினார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 31), பூ மாலை கட்டும் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று ஆடையூரில் இருந்து இனாம்காரியந்தல்செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால்வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×