search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bigg Boss"

    • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசனில் கடந்த வாரம் அசல் வெளியேறினார்.
    • தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 23-வது நாளை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் அசீம் ஜட்ஜ்மெட்டுக்கு உக்காரும் போது அவங்க வாதத்திற்கு பிரதிவாதம் நீங்க வலுவா வைக்கனும் என்று ஏ.டி.கே. விடம் கூறுகிறார். இதனால் கடுப்பான மகேஸ்வரி நீங்க என்ன ஜட்ஜ்னா இப்படி பண்ணுங்க அப்படி பண்ணுங்கனு சொல்லிக்கிட்டே இருக்கீங்க. நீங்க என்ன ஜட்ஜ்க்கு படிச்சிட்டு வந்திருக்கீங்களா? உங்க வேலைய சரியா செய்தா போதும். யாரையாது புடிச்சிக்க வேண்டியது ஒன்ன குறிப்பிட வேண்டியது அப்பறம் கத்த வேண்டியது வேற எதாவது தெரியுதா? உங்களுக்கு என்று கூறிக் கொண்டே வெளியே செல்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது.



    • பிக்பாஸ் 6-வது சீசன் 16 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
    • நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினை வெடித்துள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்துநிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதையடுத்து பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்த டாஸ்கில் பல விதமான சண்டைகள் உருவாகி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோவில் அசீமை தனலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கும் படி விக்ரமன் கூறுகிறார். அதற்கு அசீம் முடியாது என்று மறுக்கிறார். இறுதியில் அசீமிடம் அமுதவாணன், விக்ரமன், தனலட்சுமி மூன்று பேரும்சண்டையிடுகின்றனர். அப்போது தனலட்சுமி நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் என்று அசீமை குற்றம் சாட்டுகிறார். பின்னர்அமுதவாணன், அசீமிடம் உன்னை போன்று என்னால் கத்த முடியாது என்று கூறிவிட்டு செல்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. மொத்தத்தில் பொம்மை டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




    உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.
    தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

    இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

    ரம்யா கிருஷ்ணன்
    ரம்யா கிருஷ்ணன்

    இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார். 

    ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பொல்லாதவன், ஆடுகளம் படத்தில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சென்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. #Sendrayan
    தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ’ஆடுகளம்’, ‘மூடர் கூடம் என பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார்.

    இவர் கயல்விழி என்பவரை காதலித்து மணந்தார். இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ராயன் இருந்த போதுதான் கயல்விழி கர்ப்பமான செய்தி வெளியில் தெரிந்தது.

    சினேகாவின் ரசிகையான தனது மனைவியின் ஆசையை நிறை வேற்றும் விதமாக கர்ப்பமாக இருந்த கயல் விழியை சினேகாவின் வீட்டுக்கே அழைத்துச் சென்று சந்திக்க வைத்து ஆச்சர்யப்படுத்தினார்.



    தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சீமந்தம் நடந்து பெற்றோர் வீட்டுக்குச் சென்ற கயல்விழி, நேற்று மாலை 3.30 மணியளவில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா, ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு என்று கூறியிருக்கிறார். #AishwaryaDutta
    ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி:- ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, நிறைய படங்களில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. கதையைத் தேர்வு செய்வதில் ரொம்ப கவனமாக இருக்கிறேன். படத்துல ஹீரோவுக்கு மட்டுமல்ல, ஹீரோயின் ரோலுக்கும் முக்கியத்துவம் இருக்கணும். அதனால எனக்கு நடிக்க முக்கியத்துவம் இருக்கிற மாதிரியான கதையைத் தேர்வு செய்கிறேன். ஆரி கூட லவ் ஜானர்ல ஒரு படம் பண்றேன்.

    மகத்கூடவும் ஒரு படத்துல நடிக்கிறேன். இந்த ரெண்டுமே என்னுடைய கேரியர்ல முக்கியமான படங்களாக இருக்கும். என்னைப் பார்க்க வர்ற தமிழ் ரசிகர்கள், அவங்க வீட்டுப் பொண்ணா நெனைச்சு, என்கிட்ட பேசுறாங்க. பிக்பாஸ்ல என்கூட இருந்தவங்க எல்லார்கூடவும் தொடர்புல இருக்க முடியலை. ஆனா, எங்களுக்குனு ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. அதுல நிறைய அரட்டை அடிப்போம். தனிப்பட்ட முறையில யாஷிகா, மகத் கூட தொடர்ந்து பேசிட்டிருக்கேன். 

    யாஷிகா ஷூட்டிங்ல எவ்வளவு பிஸியா இருந்தாலும் என்மேல அக்கறை காட்டி விசாரிப்பாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற ஸ்க்ரிப்ட் அமைஞ்சா செமயா இருக்கும். தேசிய விருது வாங்கணும்ங்கிறதுதான் என் கனவு. அதனால நம்ம படங்களுக்கு நம்மதான் டப்பிங் பேசணும். எனக்குத் தமிழ் தெரியாதுங்கிறதால, என்னுடைய முந்தைய படங்களுக்கு நான் டப்பிங் பேசினது இல்லை. 
    இப்போ நான் நல்லா தமிழ் கத்துகிட்டேன். இனிமேல் என் படங்களுக்கு நானே டப்பிங் பேசலாம்னு முடிவு பண்ணிட்டேன். 



    என்னுடைய ஆல் டைம் பேவரைட் சிம்புதான். சினிமா வர்றதுக்கு முன்னாடியே எனக்கு சிம்புவைப் பிடிக்கும். ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. இது வரைக்கும் அவர்கிட்ட இதைச் சொன்னது இல்லை. அதே மாதிரி நடிகைகள்ல நயன்தாரா, அதிதி பாலன், ரெண்டு பேருடைய நடிப்பும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா, இந்த ரெண்டு பேருமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பாங்க. பெரிய இயக்குனர்கள் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு, அது சீக்கிரமே நிறைவேறும்’ என்றார்.
    பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டிலை வென்ற ஆரவ், ஓவியாவுடன் காதல் இருப்பதாக வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். #Arav #Oviya
    பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டது சர்ச்சையானது. 

    இதுபற்றி கேட்டபோது ‘ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்த படமும் கதையை மையப்படுத்தியதாகத் தான் இருக்கும். எனக்கு லவ்வர் பாய் இமேஜ் இருக்கிறது. அதனால் காதல் படங்கள் தான் நிறைய வருகின்றன. ஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்வு செய்கிறேன். 

    ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். நெருங்கிய நண்பர்கள் அனைவருமே வந்து வாழ்த்தினர். 



    ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே’ இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
    சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் - சுஜா வருணி திருமணத்தை நடிகர் கமல் ஹாசன் நடத்தி வைக்க இருக்கிறார். #Kamal #SujaVarunee
    கிடாரி, ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜா வருணி. இவர் கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சுஜா வருணிக்கும் சிவாஜியின் பேரன் சிவாஜிதேவ் என்ற சிவகுமாருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

    இந்த திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை சுஜா வருணி கமல்ஹாசனை சந்தித்து நேரில் வைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது ‘என் திருமணத்தை எனது தந்தை இடத்தில் இருந்து கமல் தான் நடத்திவைக்க உள்ளார்.

    என் தந்தை சமீபத்தில் மறைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதை பகிர்ந்துகொண்டு கமல் தான் என் திருமணத்தின்போது தந்தை இடத்தில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். என் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உள்ளார்’ என்றார்.
    பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் காதலிக்கும் அளவிற்கு சென்ற யாஷிகா, இன்னும் அவரை நினைத்து உருகி பேசியிருக்கிறார். #Yashika #Mahat
    இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் நெருக்கமானார். காதலிக்கும் அளவுக்கு போன இந்த நெருக்கம் பிக்பாஸ் முடிந்ததும் முடிந்துபோனது.

    மகத் தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைந்தார். இதுபற்றி இதுவரை பேசாத யாஷிகா இப்போது மனம் திறந்துள்ளார். ‘என்னதான் பக்குவமான பெண் என்றாலும்கூட ரிலே‌ஷன்சிப் என்று வரும் போது நான் ரொம்ப பலவீனமானவள்.

    மனசுக்குள் ஏராளமான அன்பு உள்ளவள். யாருக்காவது வாக்கு கொடுத்துவிட்டால் மீற மாட்டேன். இந்த உலகமே எனக்கு எதிராக நின்றாலும் கவலைப்பட மாட்டேன்.



    அன்பை வைத்து என்னை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள். அப்படி ஏமாந்த அனுபவங்கள் நிறைய இருக்கு. ‘உன் நட்பு வட்டத்தைச் சின்னதா வெச்சுக்கோ. யாரையும் சீக்கிரமா நம்பிடாதே’னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்வாங்க. என்னுடைய அந்த அன்புதான் அடுத்தவங்களுக்கான ஆயுதமா இருக்கு. வேற என்ன சொல்ல?’ என்று உருகியுள்ளார்.
    பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, தற்போது ஆண்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். #Oviya #BiggBoss
     நடிகை ஓவியா சினிமாவில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று வந்த பிறகே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

    தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார். ஓவியா நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் ரிலீசாக உள்ளது. 

    அதைத் தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் களவாணி 2 ரிலீசாக உள்ளது. அவ்வப்போது டுவிட்டரில் பல வி‌ஷயங்களைப் பகிரும் ஓவியா, பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, புக்கர் விருது மற்றும் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங்கின் வாசகத்தைப் பகிர்ந்துள்ளார்.

    பெண்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். பெண்களிடம் எதைக் கொடுத்தாலும் அதை சிறப்பாக மாற்றக் கூடியவர்கள்.

    அவளிடம் உயிரணுவைக் கொடுத்தால் அதை அவள் குழந்தையாகக் கொடுப்பாள். அவளுக்கு ஒரு வீடு கொடுத்தால் அவள் சிறந்த இல்லத்தைத் தருவாள். மளிகைப் பொருட்களை கொடுத்தால் உங்களுக்குச் சாப்பாடு தருவாள்.



    நீங்கள் புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள். அவளிடம் எதைக் கொடுத்தாலும் அதை பன்மடங்காக்கி திரும்பி தருவாள். அதனால் அவளுக்கு மோசமாக ஏதாவது செய்தால், அதனால் ஏற்படும் பன்மடங்கு விளைவுகளை சந்திக்கத் தயாராக இருங்கள்” என்பதை பகிர்ந்துள்ளார்.
    பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்திருக்கும் நடிகை ஜனனி, மாலைமலருக்கு அளித்த பேட்டியில் விஜய் பேசியது எனக்கு பொருந்தும் என்று கூறியிருக்கிறார். #Janani #Vijay
    அவன் இவன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி. இப்படத்தை அடுத்து ‘தெகிடி’, ‘பலூன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் 2 வீட்டிற்கு சென்று வந்திருக்கும் இவர் மாலைமலருக்கு அளித்த பேட்டி பின்வருமாறு,

    பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு உங்களின் முதல் ரியாக்‌ஷன்?

    பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, எப்போது வெளியில் சென்று பொது மக்களை பார்க்க போகிறோம் என்று ஏங்கினேன். வெளியில் வந்தவுடன் மக்களை பார்க்கும் போது நம்ப முடியாமல் இருந்தது. வெளியில் இருக்கும் போது நிறைய விஷயங்கள், உணவுகளை அலட்சியம் செய்திருக்கிறோம். ஆனால், அங்கு ஒரு கேக் இருந்தால் கூட அடித்துக் கொண்டு சாப்பிட்டிருக்கிறோம். ஒவ்வொன்றும் ஏங்கி ஏங்கிதான் கிடைத்திருக்கிறது. சாப்பாட்டின் அருமை பிக்பாஸ் வீட்டில்தான் தெரிந்தது.

    பாலா படத்தில் அறிமுகமான அனுபவம், பிக்பாஸ் வீட்டின் அனுபவம் இவற்றிற்கும் இடையேயான வேறுபாடு?

    பாலா படத்தில் நடித்தது எனக்கு சினிமாத்துறையில் பெரிய அறிமுகமாக இருந்தது. அதற்கு பாலா சார்தான் காரணம். அது நடிப்பு பற்றிய அனுபவம். பிக்பாஸ் வீட்டில், ஜனனி யாரு? எப்படி? என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது வேற அனுபவம்.

    சினிமாத்துறையில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்கள்?

    சினிமாவில் ஒவ்வொருத்தருக்கும், நேரம், என்று ஒன்று அமையும். அப்போது, அவர்களுடைய கடின உழைப்பு எல்லாம் தெரியும். அதற்கு பொறுமை தேவை. அதைத்தான் நான் கற்றுக் கொண்டேன்.

    தெகிடி 2 எப்போது?

    அப்போவே தெகிடி படத்தின் 2ம் பாகம் உருவாவது பற்றி பேச்சுகள் இருந்தது. அப்படி உருவானால், கண்டிப்பாக நடிப்பேன்.

    பலூன் படம் பற்றி?

    பலூன் படத்தில் பாவடை சட்டை போட்டு நடித்திருந்தேன். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது. 



    பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நீங்கள் மிஸ் செய்தது?

    என் குடும்பத்தை நான் மிகவும் மிஸ் செய்தேன். போனை தான் மிகவும் மிஸ் பண்ணுவேன் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நடக்க வில்லை.

    அரசியலுக்கு வருவீர்களா?
    எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். 

    உங்களுக்கு பிடித்த ஹீரோ?
    எனக்கு அஜித் சார் (தல) ரொம்ப பிடிக்கும்.

    யார் உங்களுக்கு பெஸ்ட்?
    முதல் படத்தில் என்னுடன் நடித்த ஆர்யா, விஷால்

    பிக்பாஸ் வீட்டில் உங்கள் விஷபாட்டில் என்று பேர் வைத்தார்கள்? நீங்கள் யாருக்கு வைப்பீர்கள்?
    நான் டேனிக்கு விஷபாட்டில் என்று பெயர் வைப்பேன்.

    காதல் அனுபவம் இருக்கா?
    நான் காதலித்திருக்கிறேன். ஆனால், இப்போ யாரும் இல்லை.

    சினிமாவில் தமிழ் பெண்ணுக்கு வாய்ப்புகள் குறைவு, அதை தக்க வைக்க எடை குறைப்பு, உணவு கட்டுப்பாடு முயற்சி செய்தீர்களா?

    பெரிய முயற்சி ஒன்றும் இல்லை. உணவு கட்டுப்பாடு இல்லை. கொழுப்பு சத்து அதிகம் உள்ள பொருட்களையும் சாப்பிடுவேன். ஆனால், எடை போட மாட்டேன். அது எனக்கு இறைவன் கொடுத்த வரம். 

    மீடூ பற்றி?

    எல்லாத்துறையிலும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது. ஆனால், அதைப்பற்றி நிறையபேர் தைரியமாக சொல்கிறார்கள். அது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இது சரியான நேரம். இப்போ பேச வில்லை என்றால், நிறைய விஷயங்கள் வெளியில் வராது.

    ஜனனிக்கு என்ன பிடிக்கும்?
    ராஜா சார் மியூசிக் கேட்டுக் கொண்டு, தனியாக காரில் நீண்ட தூரம் செல்ல பிடிக்கும்.

    சினிமாவை விட்டு போக நினைத்ததுண்டா?
    அப்படி நினைத்தது இல்லை. வீட்டில் தான் என்ஜினியரிங் படித்து விட்டு ஏன் சினிமாவில் என்று கேட்பார்கள். ஆனால், எனக்கு சினிமாவில்தான் ஆர்வம் அதிகம். வயதான பிறகும் சினிமாவில் ஏதாவது ஒன்று செய்து கொண்டிருப்பேன்.

    எப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்கள்?
    எனக்கு ஏற்ற கதையாக இருக்கவேண்டும். கிளாமர் எனக்கு செட்டாகுமானு தெரியவில்லை. வெயிட்டான ரோல். மக்கள் மனதில் நிற்கிறமாதிரியான ரோல். 



    இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கலாம் என்று நினைத்தது உண்டா?

    வரலாற்று கதைகளில் நடிக்க ஆசைப்பட்டதுண்டு. முந்தைய காலத்திற்கு நம்மால் செல்ல முடியாது. அதுமாதிரியான படங்களில் நடித்தாலாவது அந்த அனுபவத்தை பெற்றுக் கொள்ளலாம். ஜோதா அக்பர் போல் ராணி கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

    சர்கார் இசை வெளியீட்டில் விஜய் பேசியது பற்றி?
    உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்திறவன் கிட்ட கம்முனும் இருந்தால் வாழ்க்கை ஜம்முனுக்கு இருக்கும் என்று விஜய் பேசியது எனக்கு பொருந்தியது. நான் அப்படித்தான் இருப்பேன். 

    பிக்பாஸ்க்கு பிறகு?
    பிக்பாஸ்க்கு பிறகு எல்லாரும் என்னிடம் நன்றாக பேசுகிறார்கள். எங்க வீட்டு பெண் போல்தான் நாங்கள் பார்த்தோம் என்று கூறுகிறார்கள். நான் வெளியே வரும் போது நிறைய பேர் அழுதார்கள். அது எனக்கு வருத்தமாக இருந்தது. 

    ஒரே நேரத்தில் விஜய், அஜித் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்?
    இரண்டு பேரையும் பிடிக்கும். ஆனால், அஜித் படத்தில்தான் நடிப்பேன். விஜய் ரசிகர்கள் மன்னித்து விடுங்கள். 

    பிடித்த இயக்குனர்கள்?
    பாலா, மணிரத்னம்

    பிடித்த படம்?
    அலைபாயுதே

    ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
    கூடிய சீக்கிரம் நல்ல படங்களில் என்னை பார்ப்பீர்கள். தொடர்ந்து உங்கள் அன்பை கொடுங்கள். ரசிகர்கள் அனைவரையும் கண்டிப்பாக பார்ப்பேன். 
    பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான விஜயலட்சுமி அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். #BiggBoss #VijayaLakshmi
    வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன விஜயலட்சுமி. மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

    அதன்பின்னர் சில படங்களில் நடித்தபோதும் பெரிய அளவிலான வெற்றிகளை அப்படங்கள் பெறவில்லை. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனின் பாதியில் வந்து திடீர் போட்டியாளராக கலந்துகொண்டார்.

    பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக எந்தப் படத்தில் அவர் நடிப்பார் எனும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.



    அதில், இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் தான் நடிக்கவுள்ளதாகவும் வெங்கட் பிரபு தயாரிப்பில் அப்படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலமான யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது என்று கூறியிருக்கிறார். #Yashika
    இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இணையத்தில் யாஷிகா ஆர்மி தொடங்கும் அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்தார். அவர் சின்ன வேடத்தில் நடித்த நோட்டா படம் இன்று வெளியாகி இருக்கிறது.

    ஒரு பேட்டியில் இதுகுறித்து யாஷிகாவிடம் கேட்டபோது, ‘பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடனேயே நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால் நான் அவசரப்பட்டு எந்தவொரு படத்துலயும் கமிட்டாகக் கூடாதுனு பொறுமையா கதைகள் மட்டும் கேட்டுக்கிட்டு இருக்கேன். 

    விஜய் தேவரகொண்டா நடிக்கிற ‘நோட்டா’ படத்துல நான் பிக் பாசுக்கு முன்னாடியே கமிட்டாகி விட்டேன். இதுல என்னோட கதாபாத்திரம் அரை மணி நேரம் திரையில வந்துபோகுற மாதிரியான கதாபாத்திரம். ஆனால் நான் பிக் பாஸ்ல இருந்ததால் படப்பிடிப்புக்குப் போக முடியலை. 



    அதனால என்னோட கதாபாத்திரத்தை சின்ன வேடமா மாத்திட்டாங்க. அரசியல் மூலமா நம்ம நாட்டுக்கு என்ன தேவையோ, அதைச் செய்யணும், அது இல்லாம அதை பணம் சம்பாதிக்கிறதுக்கான ஒரு வியாபாரமா மாத்திட்டாங்க இப்போ இருக்கும் அரசியல்வாதிகள். இதையெல்லாம் எடுத்துச் சொல்ற மாதிரியான ஒரு கதாபாத்திரம்தான் என்னோடது” என்று கூறினார்.
    ×