search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bigg Boss Tamil"

    நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகர் மகத்தின் காதல் முறிந்துள்ளது. #Mahat #BiggBossTamil
    பிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் அவருக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த பிறகும் மகத் மீது நம்பிக்கை வைத்திருந்த பிராச்சி இதை பார்த்து மனம் உடைந்தார்.

    பிக் பாஸ் வீட்டிற்கு கிளம்பிய அன்று மகத் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிராச்சி. பிராச்சியை பிரிந்து 3 மாதம் எப்படித்தான் இருக்கப் போகிறேனோ என்று காதல் பொங்க பேசியுள்ளார் மகத். அந்த வீடியோவில் இருந்த மகத் தற்போது இல்லை, மாறிவிட்டார் என்கிறார் பிராச்சி.



    நான் அவரை இன்னும் காதலிக்கிறேன். நான் இனியும் அவர் காதலி கிடையாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் பேசுவேன். அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டது. நான் வேதனையில் உள்ளேன். இதனால் என் வாழ்க்கை மாறிவிடாது. மகத் மும்தாஜிடம் கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார். அவரின் ஒரே ஒரு நலம் விரும்பியான ஜனனியையும் அவர் ஆதரிக்கவில்லை. அவரை பற்றி இனி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.
    பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மகத் எந்த தவறும் செய்யவில்லை என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார். #STR #Simbu #Mahat
    சிம்புவின் நெருங்கிய நண்பர் மகத். பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டுக்குள் இருக்கும் மகத்தின் செயல்கள் சர்ச்சையை உண்டாக்கி உள்ளன. வெளியில் ஒரு காதலி இருக்கும்போது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நெருங்கி பழகுவது பரபரப்பாகி உள்ளது.

    இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது ’அவர் வெளிப்படையாக தானே இருக்கார். அதுதான் எல்லோருக்கும் பிரச்சினையா இருக்கு. அவனுக்கு கேர்ள் பிரெண்ட் இருக்கு’னு எல்லோரும் சொல்லுகிறார்கள்.



    நமக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் இருந்து வேறு ஒரு பொண்ணை தொட்டால் நம் கேர்ள் பிரெண்ட் கோபத்தில் அறை விடுவார். அவரது கேர்ள் பிரெண்ட் அப்படியில்லை. அது ஏன் நமக்கு கஷ்டமாக இருக்குனு எனக்குப் புரியலை. பிடிக்காத ஒரு பொண்ணை அவன் கையைப் பிடிச்சு இழுத்தா, அதைத் தப்புன்னு சொல்லலாம். அவன் அப்படி எதுவுமே பண்ணலையே..?” என்று மகத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
    பிக்பாஸ் மூலம் புகழ் ஆரவ் தற்போது ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை தாதா இயக்குனர் இயக்க இருக்கிறார். #Arav
    கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகத் தேர்வானவர் ஆரவ். இவர் ‘ஓ காதல் கண்மணி’, ‘சைத்தான்’ ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ‘மீண்டும் வா அருகில் வா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், முதன்முதலாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆரவ். இவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.



    ‘தாதா 87’ படத்தில், சாருஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் படத்தில் ஜனகராஜ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
    விஸ்வரூபம்-2 படத்தின் பாடல்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் சுருதியுடன் இணைந்து வெளியிட்டார் கமல் ஹாசன். #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து `நானாகிய நதிமூலமே' என்ற சிங்கிள் டிராக் ஒன்றை படக்குழு நேற்றுமுன்தினம் (ஜூன் 29-ந்தேதி) வெளியிட்டது. 

    ஜிப்ரான் இசையில், வைரமுத்து வரிகளில், கமல் பாடிய அந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களுடன் பேசுவார்.

    இன்று அந்த நிகழ்ச்சி தொடங்கியது. கமல்ஹாசன் தனது மகள் சுருதியுடன் கலந்துகொண்டார். அப்போது எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக விஸ்வரூபம் 2 படத்தின் பாடல்களை வெளியிட்டார். தனது மகள் சுருதியுடன் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.  #Vishwaroopam2 #KamalHaasan
    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் மகத்தும், நடிகை யாஷிகா ஆனந்தும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #BiggBoss
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி நாளாக நாளாக சூடு பிடிக்கிறது. நிஜ கணவன் மனைவியான பாலாஜி - நித்யா இடையேயான சண்டை சுவாரஸ்யமாக மாறி வருகிறது. சண்டையோ சமாதானமோ இருவரும் ஓவராக செல்கிறார்கள்.

    அதுபோல், யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் படுத்திருந்த கட்டிலில் அவர்களுக்கு நடுவில் மகத் படுத்துக்கொண்டார். இதுவும் பலர் மத்தியில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.



    மகத்துக்கும் யாஷிகாவுக்குமான நெருக்கம் அதிகரித்து வருகிறது. இருவரும் காதலித்து விடுவார்களோ? காதலிக்கிறார்களா? என்றும் பார்வையாளர்கள் பலரும் பேசிவருகிறார்கள். பொன்னம்பலம் வீட்டில் நடப்பவற்றை பிக்பாசிடம் போட்டுக்கொடுக்கிறார் என்று அவர்மீது கடுப்பில் இருக்கிறார்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள். அவரை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிடுகிறார்கள்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, ஆரவை ஒருதலையாக காதலித்து வந்த ஓவியா, தற்போது, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #Oviya #Arav
    ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள்.

    இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார்.

    அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர்.



    இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

    இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் பேச்சு கிளம்பி உள்ளது.
    ×