search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beer"

    • கோடை வெயில் தாகத்தால் ஜில் பீர் விற்பனை சூடு பிடித்தது.
    • வெயிலின் தாக்கத்தால் ஹாட் மதுபானம் குடித்தவர்கள் கூட பீருக்கு மாறினார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருந்தது. குறிப்பாக கூலிங் பீர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

    குறிப்பிட்ட பீர் வகைகள் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோடை வெயில் தாகத்தால் ஜில் பீர் விற்பனை சூடு பிடித்தது. வெயிலின் தாக்கத்தால் ஹாட் மதுபானம் குடித்தவர்கள் கூட பீருக்கு மாறினார்கள்.

    இதனால் ஏப்ரல் மாதத்தில் 20 சதவீதமும், மே மாதத்தில் 25 சதவீதமும், ஜூன் மாதத்தில் 40 சதவீதமும் பீர் விற்பனை அதிகரித்தது.

    இந்த நிலையில் தற்போது ஜில் பீர் விற்பனை குறையத் தொடங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஜில் பீர் விற்பனை சரிந்தது.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த மாதம் பீர் விற்பனை 45 சதவீதம் வரை அதிகரித்தது. அதனால் தட்டுப்பாடு இல்லாமல் மதுபானங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் 'கூலிங்' பீர் விற்பனை குறைந்தது.

    சென்னையில் மட்டும் 20 சதவீதமும், தமிழகம் முழுவதும் 30 சதவீதமும் ஜில் பீர் விற்பனை சரிந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாக இயக்குனர் பால சுப்பிரமணியத்திற்கு வந்த புகாரின் பேரில் அதிரடி சோதனை ஒரு வாரமாக நடக்கிறது.

    90 நாட்களுக்கு மேலான உயர் வகை சரக்குகள் கடையில் இருப்பு வைக்க கூடாது, எந்த பிராண்ட் மது அதிகளவு விற்கப்படுகிறதோ அதனை ஒரு வாரம் விற்பனை அளவில் இருப்பு வைக்க வேண்டும்.

    நடுத்தர, குறைந்த ரக மதுபானங்கள் அதிகமாக விற்பனை ஆவதால் அதனை 'இல்லை' என்று சொல்லாமல் இருப்பு வைக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை, வெளிநபர்கள் வேலைபார்த்தல், சட்ட விரோத பார் செயல்படுதல் போன்றவற்றை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சென்னையில் மட்டும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரம் தெரிவிக்கின்றது.

    • கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது.
    • மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக சிறப்பு பீர் தயாரிக்கப்படுகிறது

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து பீர் தயாரிக்கப்பட்டு, 'நியூப்ரூ' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்ட் நியூவாட்டர் (NEWater) எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர்.

    சிங்கப்பூரில் தேசிய நீர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர் மதுபான நிறுவனமான ப்ரூவர்க்ஸ் இந்த சிறப்பு பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்டதா? என்ற சலசலப்பு இருந்தாலும், சிங்கப்பூர் முழுவதும் இந்த சிறப்பு பீர் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. இந்த பீர் மிகவும் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பீருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட, அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இது மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.

    நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கத் தொடங்கியதால், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. முதலில் கழிவு நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, புற ஊதாக் கதிர்களால் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் அது குடிநீராக மாறுவதற்கு முன்பு பல்வேறு சுத்திகரிப்பு நிலைகளில் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே பயன்பாட்டிற்கு வருகிறது.

    டாஸ்மாக் கடைகளில் கூளிங் பீர் கிடைக்க டாஸ்மாக் நிர்வாகம் 2 ஆயிரம் குளிர் சாதன பெட்டிகளை கொள்முதல் செய்து அதை மதுக்கடைகளுக்கு வழங்கி வருகிறது. #TNTasmac
    சென்னை:

    தமிழ்நாட்டில் ‘அக்னி நட்சத்திரம்’ வெயில் தொடங்குவதற்கு முன்பே வேலூர், திருத்தணி, மதுரை, சேலம் உள்பட பல மாவட்டங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.

    சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாத குடிமகன்கள் ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு சென்று ‘பீர்’ குடிப்பது அதிகமாகி உள்ளது.

    அப்போது ‘பீர்’ கூலிங்காக இல்லாவிட்டால் கடைக்காரர்களுடன் வாக்கு வாதம் செய்கின்றனர். பல கடைகளில் குளிர் சாதன பெட்டி பழுதாகி கிடப்பதால் ‘கூலிங் பீர்’ கொடுக்க முடிவதில்லை.

    இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மழை காலத்தை விட வெயில் காலத்தில் தான் பீர் விற்பனை அதிகரிக்கும்.

    எனவே, பழைய குளிர் சாதன பெட்டிகளை மாற்றி விட்டு புதிய குளிர்சாதன பெட்டிகளை தந்தால்தான் பீர் விற்பனை அதிகரிக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று நிர்வாகத்தின் தரப்பில் பழுதாகி செயல்படாத குளிர்சாதன பெட்டிகள் எத்தனை கடைகளில் உள்ளது என கணக்கெடுக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கடைகளுக்கு புதிய குளிர்சாதன பெட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் 2 ஆயிரம் குளிர் சாதன பெட்டிகளை கொள்முதல் செய்தது. அதை மதுக்கடைகளுக்கு இப்போது வழங்கி வருகின்றனர்.

    இதனால் சென்னையில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் ‘கூலிங் பீர்’ தட்டுப்பாடின்றி கிடைப்பதாக குடிமகன்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். #TNTasmac
    சென்னையில் தற்போது கோடை காலமாக இருப்பதால் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ‘கூலிங் பீர்’ விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் ரே‌ஷன் கடைகளை விட மதுக்கடைகளில்தான் அதிக கூட்டம் காணப்படுகிறது. கிராமப்புற சினிமா தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க முண்டியடிப்பது போல் காலை மாலை நேரங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுவதை காண முடிகிறது. அந்த அளவுக்கு மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

    தமிழ்நாட்டில் மொத்தம் 5,236 மதுக்கடைகள் உள்ளன. நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்தக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அங்குள்ள கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு விற்பனை தங்கு தடையின்றி நடந்து வருகிறது.

    டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, விற்பனை நம்பர்-1 இடத்திலும் பீர் விற்பனை 2-வது இடத்திலும் உள்ளது.

    தினமும் ரூ.85 கோடி முதல் 90 கோடிவரை பிராந்தி விற்பனை நடைபெறுகிறது. பீர் விற்பனை ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை உள்ளது.

    தற்போது கோடை காலமாக இருப்பதால் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ‘கூலிங் பீர்’ விற்பனை சென்னையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    வழக்கத்தைவிட ரூ.10 கோடிக்கு பீர் விற்பனை அதிகமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தட்டுப்பாடு இல்லாமல் பிராந்தி- பீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் 12 மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுவகைகள் வரவழைக்கப்பட்டு ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு அனுப்பி வருவதாகவும் தெரிவித்தனர்.

    கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ‘கூலிங் பீர்’ கேட்பதாகவும் ‘கூலிங்’ இல்லாவிட்டால் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்வதாகவும் ஆதங்கத்துடன் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
    அமெரிக்காவில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டியில் வென்றவர் மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசளிக்கப்பட்டது. #wifecarryingcontest
    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மைனே என்ற இடத்தில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி நடத்தப்பட்டது. 834 அடி தூரம் மனைவியை தூக்கி சுமந்து முதலில் வரும் கணவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று இப்போட்டி நடந்தது. அதில் 30 ஜோடி கணவன்-மனைவி பங்கேற்றனர். அதில் ஜெசிவால்-கிறிஸ்டின் ஆர் செனால்ட் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    வெற்றிபெற்ற இந்த ஜோடிக்கு பரிசாக ‘பீர்’ வழங்கப்பட்டது. அதுவும் ஜெசிவாலின் மனைவி கிறிஸ்டின் ஆர்செனால்ட் டின் எடைக்கு நிகரான ‘பீர்’ பரிசளிக்கப்பட்டது. மேலும் ஆர்செனால்டின் எடையை போன்று 5 மடங்கு தொகை பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த போட்டியில் ஜெசிவால்-கிறிஸ்டின் ஆர்செனால்ட் தம்பதி 2-வது முறையாக வெற்றிபெற்றுள்ளனர். பின்லாந்தில் நடைபெற உள்ள உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். #wifecarryingcontest
    அமெரிக்காவில் குரோயிஸ் நகருக்கு சென்ற உள்நாட்டு விமானத்தில் பயணி ஒருவர் பீர் கேட்டு தர மறுத்த ஆத்திரத்தில் பிளேடால் உடலை கிழித்து கொண்ட சம்பவம் மற்ற பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்நாட்டு பயணிகள் விமானம் செயின்ட் குரோயிஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    அதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி பணிப்பெண்ணிடம் குடிக்க ‘பீர்’ கேட்டார். அவரும் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் மற்றொரு ‘பீர்’ கேட்டார்.

    போதை அதிகமானதால் தர அவர் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கூச்சலிட்டார். பின்னர் பாத்ரூம் சென்ற அவர் வெளியே வராமல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். ஆனால் அவர் தனது அருகில் அமர்ந்து இருந்தவரின் மடியில் உட்கார்ந்து கொண்டு தகராறு செய்தார்.

    அவரை விமான ஊழியர்களும், சக பயணிகளும் கட்டுப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில் அவர் பிளேடால் தனது உடலை கிழித்து கொண்டார். இதனால் ரத்தம் கொட்டியது.

    இதற்கிடையே விமானம் செயின்ட் குரோயிஸ் நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குள் வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    ×