search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bee Farming"

    • கயத்தாறு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மலர் தலைமை தாங்கி முகாம் தொடங்கி வைத்தார்.
    • தேனீ வளர்ப்பின் நன்மைகள்,தேன் எடுக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செய்முறை மூலம் விளக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்தில் கயத்தாறு வட்டார தோட்டக்கலை மற்றும் மதுரம் இயற்கை தேன் பண்ணை இணைந்து விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

    கயத்தாறு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மலர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கயத்தாறு பகுதியில் இருந்து வந்திருந்த 50 விவசாயிகளுக்கு மதுரம் இயற்கை தேன் பண்ணை உரிமையாளர் ஆனந்த், தேனீ வளர்ப்பின் நன்மைகள், தேனீக்களின் முக்கியத்துவம், தேனீ வளர்ப்பு முறை, தேன் எடுக்கும் முறை குறித்து செய்முறை மூலம் விளக்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சரவணக்குமார், கருப்பசாமி, வனிதாமாரி, மற்றும் தோட்டக்கலை அலுவலர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.

    ×