search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bathing"

    • அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம்.
    • ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

    தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

    பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத்துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

    • குளிர்ந்த நீர் கலோரிகளை விரைவாக எரிக்கும் தன்மையும் கொண்டது.
    • நீச்சல் வீரர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயமும் குறைவு.

    ஆண்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும், நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாவதையும் தடுக்கும் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சர்க்கம்போலர் ஹெல்த் பத்திரிகையில் 104 ஆய்வுகளின் பகுப்பாய்வு இடம் பெற்றுள்ளது. அதில் குளிர்ந்த நீரில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    குளிர்ந்த நீர் பல்வேறு சுகாதார நன்மைகளை கொண்டிருப்பது அறிவியல் பூர்வமாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குளிர்ந்த நீரில் நீச்சல் அடிக்கும்போது நீரின் சுழற்சி வெளிப்பாடும், உடல் அசைவும் ஒருங்கே அமையப்பெறுகிறது. அந்த சமயத்தில் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள ரத்த நாளங்களை கட்டுப்படுத்துகிறது. சரும திசுக்களில் ரத்தம் ஆழமாக வேரூன்றி செல்வதால் ரத்த ஓட்டமும் மேம்படுகிறது.

    விளையாட்டு வீரர்கள் போட்டி அல்லது பயிற்சிக்கு பிறகு தசைகளில் வலியை எதிர்கொள்வார்கள். சோர்வும் எட்டிப்பார்க்கும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரில் நீராடுவது உடல் வலியை குறைக்கவும் உதவும். தசைகளை தளர்வடைய செய்து சோர்வையும் போக்கும். குளிர்ந்த நீர் கலோரிகளை விரைவாக எரிக்கும் தன்மையும் கொண்டது.

    நீச்சல் வீரர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயமும் குறைவு. குளிர் காலங்களில் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் வீரர்களின் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரித்திருப்பதும், நீச்சல் வீரர்கள் அல்லாதவர்களின் உடலில் இன்சுலின் செறிவுகள் குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதே வேளையில் பனிக்கட்டிகள் சூழ்ந்த கடும் குளிர் நீரில் நீராடுவது ஆபத்தானது. அதிக குளிர்ச்சி உடல் வெப்ப நிலையை குறைத்துவிடும். இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளை மோசமாக்கிவிடும்.

    உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வது இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலில் கொழுப்பின் அளவை குறைக்க சிரமப்படுபவர்கள் குளிர்ந்த நீரில் நீராட முயற்சிக்கலாம்.

    • அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
    • குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

    தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

    எத்தனை முறை குளிக்கலாம்?

    வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.

    அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?

    பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

    குளிக்கும் நேரத்தை குறையுங்கள்

    ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.

    சூடான நீரை தவிருங்கள்:

    அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:

    குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.

    உடலை உலர வையுங்கள்:

    குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

    • ஒவ்வொரு முறையும் குளிக்கும்போது லூபா பயன்படுத்துவது நல்லதல்ல.
    • சிலருடைய சரும வகைக்கு லூபா ஒத்துக்கொள்ளாது.

    லூபா எனப்படும் பஞ்சு போன்ற மென்மை தன்மை கொண்ட இழையை குளியலுக்கு பலரும் பயன்படுத்துகிறார்கள். உடலை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்துவதற்கு உதவும் இந்த பொருள் குளியல் அறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும். லூபா இல்லாமல் குளிக்க முடியாது என்ற அளவுக்கு அதனை பயன்படுத்துவதற்கு பலரும் பழகிவிட்டார்கள்.

    ஆனால் ஒவ்வொரு முறையும் குளிக்கும்போது லூபா பயன்படுத்துவது நல்லதல்ல என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. உடலில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை துடைத்து எடுப்பதற்கு லூபா பயன்படும் என்றாலும் பாக்டீரியா, பூஞ்சை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

    லூபாவின் இழை பகுதியில் பாக்டீரியாக்கள் படிந்துவிடும். ஒவ்வொருமுறையும் குளிக்கும்போது லூபாவை சரியாக உலர வைக்காவிட்டால் அதில் இருக்கும் ஈரப்பதத்தில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் எளிதாக வளர தொடங்கி விடும். பின்பு குளிக்கும்போது அவை உடலில் ஊடுருவி சரும பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    சிலருடைய சரும வகைக்கு லூபா ஒத்துக்கொள்ளாது. அதனை பயன்படுத்தும்போது சருமம் சிவத்தல், எரிச்சல் உணர்வு போன்ற பாதிப்புகளை உணர்ந்தால் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்த்துவிடுவதே சிறந்தது. இப்போது லூபாக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் இழைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

    அவற்றை பயன்படுத்தும்போது நாளடைவில் சருமத்திற்கு சேதம் ஏற்படலாம். குளியல் அறை என்பது ஈரப்பதமான பகுதி. குளித்து முடித்ததும் லூபாவை அங்கேயே வைத்திருந்தால் உலர்ந்து போகாமல் ஈரப்பதத்துடனே இருக்கும். மறுநாள் பயன்படுத்தும்போது உலர்வடைந்திருப்பது போல் தெரிந்தாலும் பாக்டீரியாக்களின் புகலிடமாக மாறிக்கொண்டிருக்கும்.

    லூபாவை பயன்படுத்தி முடித்ததும் வெயிலில் உலர்த்துவதுதான் சரியானது. தினமும் பயன்படுத்துவதும் நல்லதல்ல.

    கொடிவேரியில் தண்ணீர் அளவு இன்றும் குறைந்த போதிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி அணையின் முகப்பு பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    கோபி:

    பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    அணை தண்ணீர் சத்திய மங்கலத்தை தாண்டி கொடிவேரிக்கு வருகிறது. தற்போது வெள்ளப் பெருக்கு காரணமாக கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 3 நாட்களாக இந்த நிலை நீடித்தது. அணையே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இன்று தண்ணீரின் அளவு சிறிது குறைந்தது.

    எனினும் இன்றும் கொடிவேரியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. இதனால் குளிக்கும் ஆர்வத்தில் வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து செல்கிறார்கள். தண்ணீர் அதிகம் செல்வதால் யாரும் குளிக்க சென்று வெள்ளத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக கொடிவேரி அணையின் முகப்பு பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் அவர்களது பாதுகாப்பு பணி தொடர்கிறது.
    ஒகேனக்கல்லில் இன்று ஆடிபெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி இன்று முதல் தடையை நீக்கி பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களாக 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் கடந்த 25 நாட்களாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லில் நீர் வரத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு படிபடியாக குறைந்து 18 ஆயிரம் கனஅடிக்கும் குறைவாக வந்தது. நேற்று 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சற்று அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் இன்று ஆடிப்பெருக்கு விழா தொடங்க உள்ளது. இந்த விழா இன்று தொடங்கி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    ஆடிபெருக்கையொட்டி ஒகேனக்கல்லில் இன்று குளிக்க தடை விலக்கப்பட்டது. ஆனாலும் மெயினருவில் வெள்ளபெருக்கின்போது தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டதால், அருவியில் குளிக்க பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதால் மெயினருவில் மட்டும் குளிப்பதற்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஆடிப்பெருக்கை யொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்துள்ள புதுமண தம்பதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று அதிகளவில் ஏராளமானோர் குவிய தொடங்கினர். அவர்கள் குளிப்பதற்காக மெயினருவி செல்லும் பாதையின் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சுற்றிலும் தடுப்புகள் அமைத்து குளிக்க அனுமதித்தனர்.

    இதுபோன்று காவிரி ஆற்றங்கரையோரம் முறையான தடுப்புகள் அமைத்து சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்று இன்று முதல் பரிசல் இயக்கவும் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இன்று காலை மாற்றுவழி பாதையான கோத்திக்கல் பாறையில் சப்-கலெக்டர் சிவனஅருள் மற்றும் முன்னாள் மாவட்ட சேர்மன் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் பரிசலை இயங்கி தொடங்கி வைத்தனர்.

    ஒகேனக்கல்லில் இன்று ஆடிபெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி இன்று முதல் தடையை நீக்கி பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க காவிரி ஆற்றங்கரையோரம் மற்றும் குறைவாக நீர் செல்லும் பாதையில் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கயிறு, ரிங் மற்றும் லைப்ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    தற்போது நீர்வரத்து சற்று அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் குளிக்க தடைவிதிக்கப்படும். தொடர்ந்து நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்

    இதுபோல் பரிசல் இயக்க வழக்கமாக ஊட்டமலை, மாமரத்துகவுடு, கோத்திக்கல்பாறை ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இன்று கோத்திக்கல்பாறை என்ற இடத்தில் மட்டும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இயங்கும் மாமரத்துகடுவு பகுதியில் 4 ஆயிரம் கனஅடி அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே பரிசல் இயக்க அனுமதி வழங்கப்படும்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேலும் அதிகமானல் பரிசல் இயக்க மீண்டும் தடைவிதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 26 நாளாக ஒகேனக்கல்லில் வந்து குளிக்க முடியாத தவித்து வந்த சுற்றுலாபயணிகள் இன்று ஆடிப்பெருக்கு நாளில் மகிழ்ச்சியாக குளித்தும், பரிசலிலும் பயணித்தனர். #Hogenakkal #Cauvery



    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீக்கப்பட்டதால் பயணிகள் இன்று ஆனந்தமாக மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் காலை 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 17 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்வரத்து 10ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் இன்று காலை 11 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீக்கப்பட்டது. 

    மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் கட்டப்பட்டு இருந்த கயிறு அகற்றப்பட்டு கதவு திறக்கப்பட்டது. பயணிகள் ஆனந்தமாக சென்று மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் இன்று 3-வது நாளாக பரிசல் இயக்க தடை நீடிக்கிறது.

    ×