search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby girl"

    ஆரணி அருகே பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீசபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆரணி:

    ஆரணி அடுத்த களம்பூர் அரசு ஆரம்ப தொடக்க பள்ளி அருகே இன்று அதிகாலை பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் தேடிபார்த்தனர்.

    அப்போது பள்ளி அருகே உள்ள குப்பை தொட்டியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடி அறுபட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது.

    இதை பார்த்த அதிர்ச்சியடைந்த பொது மக்கள் கிராம நிர்வாக அலுவலர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் குழந்தையை மீட்டு களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்டது.

    குழந்தைக்கு எடை குறைபாடு இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு, 881 விகிதம் தான் உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த மாதம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டரில் கருக்கலைப்பு அதிகம் நடப்பது கண்டுபிடிக்கபட்டு 3 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தியாவில் தங்கம் விலை எப்போதெல்லாம் உயர்கிறதோ அப்போதெல்லாம் பெண் சிசுக்களின் கொலை அதிகரிப்பதாக மும்பையைச் சேர்ந்த ஆய்வு அமைப்பின் புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. #India #BabyGirls #GoldRate
    மும்பை:

    மும்பையைச் சேர்ந்த ஆய்வு அமைப்பு ஒன்று, இந்தியாவில் பெண் சிசு கொலையையும், தங்கத்தின் விலை மாறுபாட்டையும் ஒப்பிட்டு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், 1972-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்தியாவில் 1 லட்சம் பிறப்புக்களை ஒப்பீட்டுக்கு எடுத்தது.

    அதன்படி, தங்கம் விலை அதிகரிக்கும் காலத்தில் ஒரு மாதத்துக்கு உட்பட்ட வயதுள்ள பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்தது தெரியவந்துள்ளது. அதே சமயம் தங்கம் விலை அதிகரித்த காலத்தில், ஆண் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



    1980-ம் ஆண்டுகளுக்கு பின், ஸ்கேன் வசதியால் கருவிலேயே பல பெண் குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பிறந்தால், திருமணத்தின்போது வரதட்சணையாக தங்கம் கொடுக்கும் பழக்கம் இதற்கு ஒரு முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. #India #BabyGirls #GoldRate
    கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை 6 மாத பெண் குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. வழக்கம் போல மருத்துவமனை இன்று காலை பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. அப்போது சுமார் 10.30 மணியளவில் அங்குள்ள ஸ்கேனிங் அறையின் அருகே ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு சந்தேகம் அடைந்த பரிசோதனை அறையில் உள்ள செவிலியர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு பிறந்து 6 மாதமே ஆன பெண் குழந்தை துணியால் சுற்றி கிடத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் செவிலியர்கள் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டனர். குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்ததால் செவிலியர் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். பின்னர் குழந்தை அழுகையை நிறுத்தியது. இதைதொடர்ந்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். அவர்கள் குழந்தை நலமாக இருப்பதாக கூறினர்.

    இதையடுத்து போலீசார் குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து 6 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு சென்ற தாய் யார்? அல்லது குழந்தை கடத்தி கொண்டு வரப்பட்டதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×