என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ayya Vaikunder Avatar Padhi"
- ஆடி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் ஆடி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
9-ம் திருவிழாவான நேற்று மாலையில் அய்யா வைகுண்டர் ஆஞ்சநேயர் வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.
10-ம் திருவிழாவான இன்று காலையில் உகப்படிப்பு, பணிவிடை, பால் அன்னதர்மம் மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் அய்யா வைகுண்டர் இந்திர வாகனத்தில் எழுந்தருளி பதியைச்சுற்றி பவனி வருகிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழாவான நாளை பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். நள்ளிரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பவனியும் நடக்கிறது.
நேற்று நடைபெற்ற ஆஞ்சநேயர் வாகன பவனியில் அய்யாவழி அகிலத் திருக் குடும்ப மக்கள் செயலாளர் பொன்னுதுரை, துணைத் தலைவர் அய்யாபழம், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வின் நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், உறுப்பினர்கள், அழகேசன், கண்ணன், வினோத், குணா, மற்றும் கார்த்திகேயன் குடும்பத்தினர் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்