search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness"

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் போஷன் அபியான் திட்டத்தின் சார்பாக தாய்பால் வார விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் கீழ் போஷன் அபியான் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதாகும். குழந்தையின் முதல் 1000 நாட்கள் அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் இரண்டு வயது வரையிலான நாட்களே அந்த குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கிறது. முதல் 1000 நாட்களில் குழந்தையின் முக்கிய உணவு தாய்ப்பால்,குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அளிக்க வேண்டிய அவசியம் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பாலூட்டலை சாத்திய மாக்குவோம்,பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்ற தலைப்பின் கீழ் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்பாலின்முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் போஷன் அபியான் சார்பாக கண்காட்சி அரங்குகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இக்கண்காட்சியில் பாலூட்டும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவுகள்,தாய்மார்கள் பாலூட்டும் முறை பற்றிய விளக்கக்காட்சி, தாய்ப்பாலின் நன்மைகள்,தானிய கலசம், உணவு பிரமிடு, கீரை வகைகள், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி திட்டப்பணிகளால் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு, சத்துமாவினால் செய்யக்கூடிய உணவுகள், சத்துமாவு கேக், சத்துமாவு உள்ளடக்கிய பொருட்கள், இரும்புச்சத்து தேர், கால்சியம் வீடு, வளர்ச்சிப்படிகள்,காய்கறிகளால் செதுக்கப்பட்ட வடிவங்கள், முதல் 1000நாட்களின் முக்கியத்துவம் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

    இதனை அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் போஷன் அபியான் ஜன் அந்தோலன் கீழ் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான சமையல் போட்டி மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தலுக்கான போட்டி அனைத்து வட்டாரங்களிலும் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாரட்டுச்சான்றிதழ்கள் வழங்ப்பட்டது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தாய்ப்பாலூட்டலை சாத்தியமாக்குவோம், பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்ற தலைப்பில் அங்கன்வாடி பணியாளர்களது பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3-ம் ஆண்டு நிறைவு பெற்றது.
    • ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், சிந்தனையை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் வேண்டும்.

    உடுமலை:

    தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதன் பயன்கள் குறித்து விளக்கவும் மாவட்டம் தோறும் ஒரு பிரதிநிதியை மத்திய கல்வி அமைச்சர் அமைச்சகத்தின் உத்தரவின்படி சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட பிரதிநிதியாக சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மேகநாதன் நியமிக்க ப்பட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவர் உடுமலை கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:- தேசிய கல்விக் கொள்கை 21 ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப பரந்த நெகிழ்வான பல்துறை கல்வி வழங்குகிறது.

    இதனால் நமது நாட்டை ஒரு துடிப்பான அறிவு சார்ந்த சமூகமாகவும் உலகளாவிய அறிவு வல்லரசாகவும் மாற்ற முடியும். ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், சிந்தனையை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தேசிய கல்விக்கொள்கையில் உள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இதனை பின்பற்றி வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு வேலுமணி பங்கேற்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில் போதைப்பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே மது அருந்துதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும் அவர் நீங்கள் அனைவரும் போதைப்பொருட்கள் உபயோகம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும், என்றார்.

    • போலீசார் சார்பில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் வடக்கு மாதவி கிராம பொதுமக்களுக்கு போலீசார் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் உறுப்பினர் ஷீபா ஆகியோர் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    • 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதுடன் மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டது.

    உடுமலை :

    சாமானிய மனிதனையும் சக்தி வாய்ந்த நபராக மாற்றும் ஆற்றல் பெற்றது கல்வி. இதன் மூலமாக சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சரிசமமான நிலையும் உருவாகிறது.கல்வியில் மேன்மை அடைவதன் மூலம் குடும்பம், மாநிலம், நாடும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதுடன் தன்னிறைவையும் அடைய முடியும். இதனால் கல்வியின் முக்கியத்துவம் மகத்துவம் குறித்து எடுத்துக் கூறி அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.

    அந்த வகையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல் படியும் திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வித் துறையின் அறிவுரையின் படியும் தொடக்கப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பாக பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அப்போது அரசு பள்ளியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் தமிழ்வழிக் கல்வியின் மகத்துவம், முக்கியத்துவம் குறித்தும் தலைமை ஆசிரியை சாவித்திரி, ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் பெற்றோர்களுக்கு எடுத்து கூறினர். அதைத்தொடர்ந்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதுடன் மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி வயது குழந்தைகளை தவறாமல் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பை, பாக்குமட்டை தயாரிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது
    • மகளிர் கூட்டமைப்பினர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கம் திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமளாபுரம் பகுதி அளவிலான மகளிர் கூட்டமைப்பு மூலம் மகளி ர்சுய உதவிக்குழுவி னருக்கு சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பைகள், வயர்கூடைகள் ஆகியவற்றை உபயோக ப்படுத்த க்கோரியும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் சணல்பைகள், பனியன்துணி மேட்டுகள், மஞ்சப்பை, பாக்குமட்டை தயாரிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சாமளாபுரம் பகுதி அளவி லான மகளிர் கூட்டமைப்பி னர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு மகளிர் குழுவினருக்கு விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழ னிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் மைதிலிபிரபு, பூங்கொடி சண்முகம், பெரிய சாமி, ஒருங்கிணைப்பாளர் பாக்கியம்மாள் ,சாமளாபுரம் பகுதி அளவிலான கூட்டமைப்பின் செயலாளர் ரம்யா, சாமளாபுரம் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.
    • தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர்.

    திருப்பூர் :

    ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.அவர்கள் கூறும் போது, தவறான வீடியோக்கள் மூலம் அனைவரும் அச்சமடைந்ததாகவும் தற்போது அவை அனைத்தும் பொய்யானவை என தெரியவந்துள்ளது. எனவே பயமின்றி மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளோம். தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர்.

    மேலும் ெரயில்வே காவல்துறையினர், புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு இந்தி மொழியில் பேசி நீங்கள் பாதுகாப்பாக உள்ளனர். எந்த அச்சமும் தேவையில்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    • நம்மவர்கள் வதந்தி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம்.
    • குறைகள் ஏதேனும் இருந்தால் பகிரங்கமாக தெரியப்படுத்துங்கள் என போலீஸார் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் வடமாநிலத்தவர்களை தாக்குவதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அரசு குழுவினர் இரண்டு நாட்கள் ஆய்வு செய்து, களத்தின் உண்மை நிலையை அங்குள்ளவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வீடியோ பதிவெடுத்து சென்றனர். அதன் ஒருபகுதியாக தொழிலாளார்கள் பலரும், 'நாங்கள் தமிழகத்தில் அமைதியாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு யாராலும் பிரச்சினை இல்லை. குடும்பத்தினர், சமூகவலைதளங்களில் பரப்படுப்படும் வதந்திகளை நம்பவேண்டாம். எங்களுக்கு மிகவும் அமைதியான வாழ்க்கையை தமிழ்நாடு தந்துள்ளது. இங்கு யாராலும் எந்த பிரச்சினையும் இல்லை. நம்மவர்கள் வதந்தி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகரில் உள்ள ஏராளமான பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு தொடர் விழிப்புணர்வை மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

    அதன் ஒருபகுதியாக 2 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் குழுவுக்கு பின்னர், தற்போது மாநகர் எல்லைக்கு உட்பட்ட நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அப்போது அவர்களிடம் குறைகள் ஏதேனும் இருந்தால் பகிரங்கமாக தெரியப்படுத்துங்கள் என போலீஸார் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    அதேபோல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் கோ.சசாங் சாய் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட அருள்புரம் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அங்கு பணிபுரியும் 2000 வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக பரவிய வதந்தி தொடர்பாக நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதேபோல் 24 மணிநேரமும் அமைக்கப்பட்டுள்ள காவல்துறையின் உதவியை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தனி கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்களை தொழிலாள ர்களுக்கு வழங்கினார். இதனால் தொழிலா ளர்கள் நிம்மதி அடைந்திரு ப்பதாக தெரிவித்தனர். வடமாநிலத் தொழிலா ளர்களின் பாதுகாப்பு க்காக ஏற்படுத்தப்ப ட்டுள்ள தனிப்பிரிவு கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களான 94981-01320, 0421-2970017 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    • கீழப்பாவூர் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் ராஜன் தலைமையில் மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி றடைபெற்றது.
    • பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது பற்றியும் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தென்காசி:

    கீழப்பாவூர் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் ராஜன் தலைமையில் மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி கீழப்பாவூர் அக்ரஹாரம் 4-ம் தெரு மற்றும் சுரண்டை மெயின் ரோடு பகுதியில் விளம்பர சுவரொட்டி அகற்றுதல், துப்புரவு பணிகள் நடைபெற்றன. மேலும் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது பற்றியும்,, திறந்த வெளியில் மலம் கழித்தல் செயலை தடுத்தல் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கனகபொன்சேகா முருகன், விஜிராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், வீரன்,ராமகிருஷ்ணன், விநாயகபெருமாள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் மாடல் மேல்நிலைப்பள்ளியில் கணித அறிவுத்திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை லிட்டில் பிளவர் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    நெல்லை:

    டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் மாடல் மேல்நிலைப்பள்ளியில் கணித அறிவுத்திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மரியசூசை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்தியன் டெவலப்மென்ட் பவுண்டேஷன் பிராங்கலின் கலந்து கொண்டார்.

    இதில் நடமாடும் கணினி என்று அழைக்கப்படும் பசவராஜ் சங்கர் உம்ராணி கலந்து கொண்டு மாணவர்களின் கணித அறிவினை ஊக்குவிக்கும் வகையில் 9 இலக்க எண்களின் கூட்டல், கழித்தல், 5 மற்றும் 3 இலக்க எண்களின் கூட்டல், வகுத்தல் உள்ளிட்டவற்றை விளக்கி கூறினார். மேலும் மாணவர்களின் பிறந்ததேதியை வைத்து அவர்களின் பிறந்த கிழமையையும், 30 இலக்க எண்களின் வரிசை முறையை முன்வரிசையிலும், பின் வரிசையிலும் சில நொடிகளில் கூறினார்.

    அதேபோல் கடிகார உதவியின்றி நேரத்தை சரியாக கூறினார். அவரை பாராட்டி பள்ளி தாளாளர் மரியசூசை ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மேலும் இந்தியன் டெவலப்மென்ட் பவுண்டேஷன் நிறுவனத்திற்கு காசோலையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை லிட்டில் பிளவர் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


    • அவிநாசியில், விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் ஜெகதீசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    அவிநாசி

    சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து, அவிநாசியில், விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (சி.எஸ்.இ.டி.,), திருப்பூர் சைல்டுலைன் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியன இணைந்து, வளரிளம் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1800 425 1092 மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு வாகன பிரசார பயணம் அவிநாசியில் துவங்கியது.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் ஜெகதீசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    தொடர்ந்து பழங்கரை, புதுப்பாளையம், வேலாயுதம்பாளையம் சேவூர், கருவலூர், தெக்கலூர், பகுதிகளில் பிரசார பயணம் நடைபெறுகிறது.இதில் சி.எஸ்.இ.டி., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார், கருணாம்பிகை, நயினான், சின்னச்சாமி, சி.எஸ்.இ.டி., சைல்டுலைன் அமைப்பின் வைஷ்ணவி மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • உடுமலைப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து கிராம விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் விளக்கஉரை அளித்தார்.
    • இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 60 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் உடுமலை லட்சுமி ஜூவல்லர்ஸ்நகைக்கடை மாடியில் நடந்தது. இதில் உடுமலைப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து கிராம விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் விளக்கஉரை அளித்தார் .பின்பு மண் வளம் பாதுகாப்பு குறித்த குறும்படம் அனைவருக்கும் காட்டப்பட்டது.

    இதில் ஒவ்வொரு நொடியும் ஒரு ஏக்கர் நிலத்தின் மண் பாலைவனம் ஆகிறது. 62 சதவீதம் மண்வளம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 60 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது .இந்தியாவின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் பாலைவனமாக மாறி வருகிறது எனஅவர் தெரிவித்தார். மேலும் சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும் அதற்கான விழிப்புணர்வு பிரச்சார பயணத்திற்காகவும் உடுமலைப்பேட்டையில் இருந்து பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் மாபெரும் வாகன பேரணி வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது எனவும் இதற்கு அனைத்து பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு அளித்துள்ளது .மேலும் ஐநா.வின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும், சர்வதேச விஞ்ஞானிகள் உட்பட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர் .இதேபோல் தமது பகுதியிலும் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தரவேண்டும் எனஈஷா யோகா மையம் சார்பில் பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கேட்டுக்கொண்டனர். 

    ×