search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness Rally"

    • 15-வது ஆடவர் உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் ஜனவரி 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகின்றது.
    • சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    15-வது ஆடவர் உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் ஜனவரி 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகின்றது.

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் 4 பிரிவுகளாக கலந்து கொள்கின்றன. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 13-ந் தேதி ஸ்பெயினுடனும், 2-வது ஆட்டத்தில் 15-ந் தேதி இங்கிலாந்துடனும், கடைசி லீக் ஆட்டத்தில் 19-ந் தேதி வேல்ஸ் அணியுடனும் மோதுகிறது.

    இந்தியாவில் நடைபெறும் 15-வது ஆடவர் உலக கோப்பை ஆக்கி போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் ஆக்கி உலக கோப்பையின் மாதிரி மற்றும் இந்திய தேசிய கொடியுடன் கே.ஆர்.கல்வி குழுமங்களின் ஆக்கி வீரர்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆக்கி வீரர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கிளப் வீரர்கள் மற்றும் உலக கோப்பை இந்திய ஆக்கி வீரர்களுடன் பயிற்சி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த ஏழு ஆக்கி வீரர்கள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கே.வெங்கடேஷ், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பேரணியின் முடிவில் உலக கோப்பை இந்திய ஆக்கி வீரர்களுடன் பயிற்சி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த 7 ஆக்கி வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.மதிவண்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கிளப் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • நெல்லை சித்தா கல்லூரி சார்பில் சித்தா விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி இன்று நடைபெற்றது.
    • சித்த மருத்துவ விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    சித்தமருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் அகத்தியர் பிறந்த நடசத்திரமான மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திரத்தில் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 6-வது தேசிய சித்தா தினம் நாளை கொண்டாப்படுகிறது.

    விழிப்புணர்வு பேரணி

    இதை முன்னிட்டு நெல்லை சித்தா கல்லூரி சார்பில் சித்தா விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி இன்று நடைபெற்றது. சித்தமருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா மரியா தலைமை தாங்கினார். போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீனிவாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணரவு ஓட்டமானது பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வ.உ.சி. மைதானம், எல்.ஐ.சி அலுவலகம், லூர்து நாதர் சிலைவழியாக சென்று சித்த மருத்துவக் கல்லூரியில் முடிவடைந்தது.

    துண்டுபிரசுரம்

    தொடர்ந்து மனித சங்கிலி பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் நடந்தது. சித்த மருத்துவ விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழிநெடுகிலும் உள்ள பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    சித்தர்கள் சொன்ன சித்த மருத்துவக் கோட்பாடு, தத்துவங்கள் மற்றும் போதை பொருள் ஒழிப்பு வாசகங்கள் அச்சிட்ட தகவல் பலகைகளை மாணவ- மாணவிகள் கையிலேந்தி சென்றனர்.

    பாளை சித்த மருத்துவக் கல்லூரியின் உறைவிட மருத்துவர் ராமசாமி, மருத்துவர்கள் வனிதா, பூமாதேவி, ருக்மணி, நடராஜன் , ராஜாசங்கர் சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் அப்துல்காதர் ஜெயலானி, ராஜராஜேஸ்வரி, ராஜகுமாரி, மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

    • மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது
    • நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி வரவேற்று பேசினார்

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக நெல்லை மாவட்டத்தில் மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) வெங்கடேஷ் மணி வரவேற்று பேசினார். நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறி யாளர் குருசாமி தலைமை தாங்கினார்.

    நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் சங்கர் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வகுமார், செயற்பொறியாளர்கள், கற்பகவிநாயக சுந்தரம், ஜான் பிரிட்டோ, உதவி செயற் பொறியாளர்கள் முத்துசாமி , சின்னசாமி, சைலஜா, கலா ராஜகோபால், தங்க முருகன், ராஜசேகர், குத்தாலிங்கம், உதவி மின்பொறியாளர்கள், சரவணன், அருணன், சரவணகுமார், முருகன், சரவணன், ஜெனட் மல்லிகா, ஜெயஸ்ரீ எழில், மேகலா, திரேசா பாக்கியவதி, ஆன்சிங்ரூபலா, மனோகரன், அபிராமி நாதன், வெங்கடேஷ் மற்றும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது
    • பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர்.

    நெல்லை:

    பெண்களை அதிகமாக பாதிக்ககூடிய புற்றுநோய் களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது.

    பிங்க் மாதம்

    எனவே உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதம் என்று அறிவிக்கப்பட்டு அதன் அறிகுறிகள் முதல் மீண்டு வருவது வரை கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு வழிமுறைகளை வலியுறுத்தி வருவதே இம்மாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இதனையொட்டி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வழிகாட்டு தலின்படி, புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

    கலந்துரையாடல்

    பேரணியை மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், புற்றுநோய் குறித்த முழக்கங்களை முழங்கியும் சென்றனர். தொடர்ந்து புற்றுநோயை வென்றவர்களின் சாதனை கூட்டத்தை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரை யாடலும் நடைபெற்றது.

    புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றி, மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    மார்பக புற்று நோயிலிருந்து விடுபட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகள் கொரோனா காலம் தொட்டு இன்றுவரை தாங்கள் பயணித்து வந்த உணர்வு பூர்வமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டது கேட்போரை கண் கலங்க செய்தது.

    தொடர்ந்து, அவர்கள் கூறுகையில், இங்கு எங்களுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் மருத்துவமனைகளில் இலவசமாக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சைகளும் பெற்று வருகிறோம். அனைவரின் சார்பிலும் மருத்துவமனை நிர்வாகத்தி ற்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நமது அரசாங்கத்திற்கும் நன்றி கூறுவது மிகவும் பெருமையாக கருதுகிறோம் என்றனர்.

    நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கிய கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. முன்னதாக செவிலியர்கள் கலந்து கொண்ட மார்பக புற்றுநோய் குறித்த பட்டி மன்றம் நடந்தது.

    தொடர்ந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கவிதை, ஓவிய போட்டி மற்றும் விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டன.‌

    நிகழ்ச்சியில் கதிரியக்க துறைத் தலைவர் தெய்வநாயகம், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் பியூலா, தலைமை செவிலி யர் கண்காணிப்பாளர் திருமால் தாய், செவிலியர் போதகர் ஆயிரத்தம்மாள் மற்றும் பல்வேறு மருத்துவத் துறையை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பிங்க் கலர் பலூன்களை பறக்கவிட்டனர். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபா நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

    • விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவப்பு நாடா குழு சார்பாக உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
    • கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் போதைப்பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு கோஷமிட்டு சென்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி.எம்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவப்பு நாடா குழு சார்பாக உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.கல்லூரியின் இயக்குநர் கோபால் முன்னிலை வகித்தார். குளத்தூர் போலீஸ் இன்ஸ்ெபக்டர் விஜயலட்சுமி பேரணியை தொடங்கி வைத்தார்.

    கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் போதைப்பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு கோஷமிட்டு சென்றனர். கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி கெங்குமணி மேற்பாா்வையில் மாணவர்களும் பேராசிரியர்களும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழிப்புணர்வு பேரணியானது குளத்தூர் காவல் நிலையம் முன்பு தொடங்கி பேருந்து நிலையம் வரையில் சென்று முடிவடைந்தது.

    பேரணிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்பழகன், சிவப்பு நாடா குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோா் செய்திருந்தார்கள்.

    • குட்டை திடலில் துவங்கிய பேரணிக்கு கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார்.
    • பிரதமரின் வழிகாட்டுதல் படி வீடு வீடாக தேசிய கொடி ஏற்றும் வகையில் விழிப்புணர்வு நடைபெற்றுள்ளது

    உடுமலை :

    திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. மற்றும் வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா விழிப்புணர்வு பேரணி உடுமலையில் நடந்தது.

    குட்டை திடலில் துவங்கிய பேரணிக்கு கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பாஜ.க.வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் தலைவரும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், சண்முகப்பிரியா, மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பார்வையாளர் மலர்க்கொடி, ஜோதீஸ்வரி, கந்தசாமி, தென்னிந்திய கிரிக்கெட் சங்க செயலாளர் ராகுல், ராஜா, முத்துசாமி, மாவட்ட செயலாளர் வடுகநாதன், கண்ணாயிரம் ,சமூக ஆர்வலர் குரு பிரசாத் ,சித்த மருத்துவர் கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காயத்ரி ரகுராம் கூறுகையில், பிரதமரின் வழிகாட்டுதல் படி உடுமலையில் வீடு வீடாக தேசிய கொடி ஏற்றும் வகையில் பா.ஜ.க. சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை போற்றும் வகையில் தீபாவளி, பொங்கல் கொண்டாடுவது போல் சுதந்திர தினத்தையும் கொண்டாட வேண்டும். சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார். 

    • கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
    • போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

    ஊட்டி:

    ஊட்டியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், காவல் துறை சாா்பில் ஊட்டி அரசு பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் வணிக சங்கங்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான துண்டுப் பிரசுரங்களை அமைச்சா் வழங்கினாா்.

    மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் ஆகியோா் முன்னிலையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

    நிகழ்ச்சியில் அமைச்சா் கா.ராமசந்திரன் பேசியதாவது:-

    போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் மனதில் நிலைநிறுத்திக் கொள்வதோடு, உறவினா்கள், நண்பா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    அதனை தொடா்ந்து, போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான கலைநிகழ்ச்சிகளை பாா்வையிட்டாா்.பின்னா் ஊட்டி அசெம்பிளி திரையரங்கில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு குறும்படத்தினை கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, சேரிங்கிராஸ் பகுதியில் போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணியை தொடக்கிவைத்தாா்

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, குன்னூா் சப்- கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ், ஊட்டி நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் .

    பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் திருப்பூர் மாநகரை தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    பள்ளி மாணவிகளுக்கு மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்கும் வகையில் குப்பை பாக்சை செல்வராஜ் எம்.எல்.ஏ., தினேஷ்குமார் அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    • மங்கலம் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு கழிவறை பயன்படுத்த வேண்டும் போன்ற சுகாதார திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • மங்கலத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் ஆர்.பி.நகரில் முடிவடைந்தது.

    மங்கலம் :

    மங்கலம் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு கழிவறை பயன்படுத்த வேண்டும் ,தனி நபர் உறிஞ்சுகுழி பயன்படுத்த வேண்டும் , வீட்டிற்கு வடிகால் அமைக்க வேண்டும் , மரங்கள் நடவேண்டும், குப்பை தொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற முழு சுகாதார திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மங்கலத்தில் நடைபெற்றது.

    இந்த ஊர்வலமானது மங்கலத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் ஆர்.பி.நகரில் முடிவடைந்தது. இதில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, மங்கலம் ஊராட்சி மன்றதுணைத் தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியன்ட்மணி, மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ்,மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ரபிதீன், நட்ராஜன், முகமது இத்ரிஸ், ரேவதி முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த அபுதாஹிர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் கட்சியை சேர்ந்த நிஷாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×