search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avinashi Temple"

    • தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.
    • 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் கோபுரங்கள் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும் முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி உயிருடன் மீட்டெடுத்த வரலாற்று சிறப்புமிக்கதாகவும் பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. அவினாசியப்பருக்கு ஏழுநிலை கோபுரமும், கருணாம்பிகை அம்மனுக்கு ஐந்து நிலை கோபுரமும் கலைநயத்துடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். இக்கோவிலுக்குசாமிதரிசனம் செய்வதற்காக தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும், கர்நாடகா கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.

    இவ்வாறு பல சிறப்பு பெற்ற இக்கோவிலில். கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் கோபுரங்கள் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்து அறநிலையத்துறையினருக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தி கும்பாபிஷேக ஏற்பாடுகள் விரைந்து செய்வதென முடிவு செய்தனர். ஆனால் பல மாதங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான எந்த வேலையும் நடைபெறாதது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆகாசராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேரத்திகடன் செலுத்துவதற்காக ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அவினாசி அருகே உள்ள ராயம்பாளையம் மற்றும் கருணை பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து பக்தர்கள் அழகிய மண்குதிரைகளை சுமந்துவந்து இக்கோவிலில் வைத்து வழிபடுவார்கள். மேலும் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுக்கு இங்கு முடி எடுத்து காதுகுத்தி, கிடாய் வெட்டி விஷேசம் செய்வது ஆண்டாண்டுகாலமாய் நடந்துவருகிறது. பழமை வாய்ந்த இக்கோவில் பல பகுதிகளில் பழுதடைந்தும்சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இக்கோவில் திருப்பணிகள் செய்து இதற்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில், கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பிஅனுமதி கேட்கப்பட்டு அதற்கு அரசிடம் இருந்து அனுமதியும் கிடைத்துள்ளது. இருப்பினும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பராமரிப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு செலவினம் அதிகம் தேவைப்படுவதால் உபயதாரர்களுக்காக எதிர்பார்ப்பில் உள்ளது. அதற்கு உண்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடியவிரைவில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    • கோவில் உள்பிரகாரத் பூக்களால் புஸ்பாஞ்சலி பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசியில் வாசி அவினாசி என்ற சிறப்புவாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு சார்பாக அவினாசிலிங்கேசுவரர் கோவில் சிவாச்சாரியார் ஆரூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கங்கை நீர் எடுத்து வந்து 108 வலம்புரி சங்குபூஜை நடந்தது.

    முன்னதாக கோவில் உள்பிரகார கொடிகம்பம் முதல் சுவாமி சன்னதி வரை செவ்வந்தி கம்பங்கி, மருகு, மரிக்கொழுந்து, தாமரை மல்லி, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூக்களால் புஸ்பாஞ்சலி பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, வழிபாடுகள் நடந்தது. இதில் அவினாசி திருப்பூர், பூண்டி, சேவூர்,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ராஜராஜ சோழனின்,1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.
    • 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    அவிநாசி :

    அவிநாசி கோவிலில் தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின், 1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.

    அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில், தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பழநி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் பங்கேற்று தேவாரம், திருமுறை விண்ணப்பம் செய்தனர்.

    முன்னதாக கோவில் உள்பிரகாரத்தில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அவிநாசி கோவிலை சேர்ந்த ஆரூர சுப்ரமண்ய சிவாச்சார்யார், நானிலம் போற்றும் நால்வரின் பெருமைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    சிவக்குமார் சிவாச்சார்யார் தலைமையில், பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தலைமையில் , கோவில் ஓதுவாமூர்த்தி சிவசங்கர் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், உபயதாரர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
    • ரூ. 1.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்ய பாலாலய ஹோம பூஜைகள் நடைபெற்றது.

    அவிநாசி:

    அவிநாசி கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதற்கு அச்சாரமாக, அரசமரத்து விநாயகருக்கு முதலில் திருப்பணி செய்ய இந்து அறநிலையத்துறையினர் முடிவெடுத்தனர். இதனால் ரூ. 1.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்ய பாலாலய ஹோம பூஜைகள் நடைபெற்றது.

    சிவக்குமார சிவம், தியாகராஜ சிவம் உட்பட கோவில் சிவாச்சாரியார்கள் வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம் உட்பட பூஜை செய்து, பாலாலயம் செய்து வைத்தனர். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், உபயதாரர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

    • ஆண்டுதோறும் சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெறும்.
    • சிறப்பு ஹோமம், சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த அற்புதம் நடந்த கோவில் என்ற பல சிறப்பு பெற்றதாக விளங்குகிறது கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் குருபூஜை விழா நடந்தது. முன்னதாக சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதையடுத்துசாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ×