search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto driver arrested"

    • முன்னால் சென்ற ஆட்டோவை ஹாரன் அடித்தபடி முந்திச்செல்ல முயன்றதால் தகராறு ஏற்பட்டது
    • இதில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூர் நேதாஜிநகரை சேர்ந்தவர் பிச்சைபாண்டி(50). இவர் அரசு போக்குவரத்து கழக மதுரை கிளையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பழனியில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

    ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் அருகே முன்னால் சென்ற ஆட்டோவை ஹாரன் அடித்தபடி முந்திச்செல்ல முயன்றார்.

    அப்போது ஆட்டோவில் வந்தவர்களுக்கும், பிச்சைபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த கும்பல் பிச்சைபாண்டியை தாக்கி அரசு பஸ் கண்ணாடியையும் உடைத்தனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ஆட்டோ டிரைவர் மனோகரனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சதீஸ்குமார், மகுடீஸ்வரன், சக்திவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை அருகே மாணவியை ஆட்டோவில் கடத்த முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய மாணவி. எலவனாசூர்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் புத்தாடை வாங்குவதற்காக மாணவி ஒரு ஆட்டோவில் எலவனாசூர்கோட்டையில் உள்ள துணிக்கடைக்கு சென்றார். பின்னர் புத்தாடை வாங்கிவிட்டு அதே ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் மாணவியின் வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல் மாற்றுப்பாதையில் ஆட்டோ டிரைவர் சென்றதாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட்டார். ஆனால் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் மிரட்டி, அவரை கடத்தி சென்றதாக தெரிகிறது.

    இந்த நிலையில் எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த மாணவி ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாணவியை கடத்தி சென்றதாக புகைப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆட்டோ டிரைவர் மணிகண்டன்(வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மாணவி கீழே குதித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    கும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #delhiwomanmolestation #autodriverarrested

    கும்பகோணம்:

    டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 2-ந்தேதி வங்கி பணி பயிற்சிக்காக கும்பகோணத்துக்கு ரெயில் மூலம் வந்தார்.

    ஓட்டலுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினார். அந்த ஆட்டோ டிரைவர், இளம்பெண் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்லாமல் நகர் முழுவதும் சுற்றி வந்தார். சந்தேகம் அடைந்த இளம்பெண், ஆட்டோ டிரைவரிடம் கேட்டதற்கு வாக்குவாதம் செய்து செட்டிமண்டபம் பைபாஸ் ரோட்டில் நள்ளிரவில் இறக்கி விட்டு சென்று விட்டார்.

    நள்ளிரவில் தனியாக நடந்து வந்த இளம் பெண்ணை பார்த்ததும் அங்கு நின்ற 2 வாலிபர்களுக்கு சபலம் ஏற்பட்டது. இளம்பெண்ணிடம் நைசாக பேசி, மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறினர். இதை நம்பி இளம்பெண்ணும் அவர்களுடன் சென்றார்.

    2 வாலிபர்களும், இளம்பெண்ணை ஆள்நட மாட்டமில்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். தனது நண்பர்கள் 2 பேருக்கும் செல்போன் மூலம் பேசி அழைத்தனர். 4 வாலிபர்களும் அந்த இளம் பெண்ணை கற்பழித்தனர்.


    பிறகு 4 பேரும், ஆட்டோவில் இளம்பெண்ணை ஓட்டல் அருகே கொண்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வசந்த், தினேஷ், புருசோத்த மன், அன்பரசன் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது காலில் காயம் அடைந்த வசந்த், தினேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கற்பழிப்பு வழக்கில் கைதான 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.

    இந்த வழக்கில் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி இளம்பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் யார்? அவர் எதற்காக ஒரு மணி நேரம் ஆட்டோவில் வைத்து சுற்றினார் என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.

    ஆட்டோ டிரைவர் ஒரு வாரமாக தலைமறைவாக இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து கொண்டு இருந்தார். போலீசார், ஆட்டோ டிரைவரை பிடிக்க தீவிரம் காட்டினர்.


    ரெயில் நிலைய பகுதியில் காமராஜர் சாலை, புதிய பஸ் நிலைய பகுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

    கும்பகோணத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ டிரைவர் மட்டும் வித்தியாசமாக தனது ஆட்டோவின் முன் பக்கத்தில் இருந்த பம்பர், ஹாரன், மற்றும் கண்ணாடியை மாற்றி பழைய ஆட்டோவைப் போல் டிசைன் செய்து இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    அந்த ஆட்டோ யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். பக்கத்து ஊர்களிலும் சென்று ஆட்டோவை தேடினர்.

    அப்போது திருவிடைமருதூர் திருப்பணிபேட்டை யில் அந்த ஆட்டோ நின்று இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். அதன் டிரைவர் குருமூர்த்தி (வயது25) என்பவரை நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கும்பகோணம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் போலீசாரிடம் கூறுகையில், “சம்பவத்தன்று ரெயில் நிலையத்தில் சவாரியை இறக்கி விட்டு திரும்பியபோது இளம்பெண் ஆட்டோவை நிறுத்தி ஓட்டலில் விடுமாறு ஆங்கிலத்தில் கூறினார். நானும் அவர் சொன்னபடி ஆட்டோவில் ஏற்றிச் சென்றேன். வழியில் தகராறு ஏற்பட்டதால் நடுவழியில் இறக்கி விட்டதாக ஒப்புக் கொண்டார்.

    கண்காணிப்பு கேமிரா மூலம் ஆட்டோவை போலீசார் தேடுவதை அறிந்து தனது ஆட்டோவின் முன் பகுதியை மாற்றினேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இவருக்கு வாலிபர்களுடன் தொடர்பு உள்ளதா? தன்னை நம்பி ஆட்டோவில் ஏறிய பெண்ணை நடுரோட்டில் ஏன் இறக்கி விட்டார்? என்பது குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. #delhiwomanmolestation #autodriverarrested

    கன்னியாகுமரியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போக்குவரத்து பிரிவு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அன்பழகன். (வயது 55). இவர் நேற்று கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த ஜாண் (39) என்பவர் ஆட்டோவில் கடற்கரை சாலை வழியாக செல்ல முயன்றார். 

    இதனை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தடுத்து நிறுத்தி அந்த வழியாக செல்ல கூடாது என கூறினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஜாண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 

    இதுகுறித்து அன்பழகன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஆட்டோ டிரைவர் ஜாணை போலீசார் கைது செய்தனர். 
    நித்திரவிளை அருகே இளம்பெண்ணை தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நித்திரவிளை:

    நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஷார்மி (வயது 32).

    இவர் வெளியில் செல்லும்போது காஞ்சாம்புறம் தேனாம்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (36) என்பவரது ஆட்டோவை பயன்படுத்தி வந்தார். சமீபகாலமாக ராஜனின் ஆட்டோவில் செல்லாமல் வேறு ஒரு ஆட்டோவில் சென்றார்.

    இதனால் ராஜன், ஆத்திரத்தில் ஷார்மியுடன் தகராறில் ஈடுபட்டார். நேற்று ஷார்மி பாலாமடம் பகுதியில் சென்றபோது அவரை தடுத்து நிறுத்தி ராஜன் தாக்கினார். இதில் காயம் அடைந்த ஷார்மி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுபற்றி ஷார்மி நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர்.


    பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் நாகசாமி நகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது40). இவரும், இவரது மகளும் கடந்த 3-ந்தேதி அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சித்ராவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் சித்ராவிடம் நகையை பறித்தது சாக்கிலிப்பட்டியை சேர்ந்த செல்லக்கண்ணு மகன் திருப்பதிராஜா (வயது28), தனக்கன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி (30) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து 5 பவுன் நகையை மீட்டனர்.

    திருப்பதிராஜா காலையில் ஆட்டோ டிரைவராகவும், இரவில் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். செல்லப்பாண்டி மீது நகை பறிப்பு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×