search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auction"

    • நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
    • ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. அதன்படி நான்கு சக்கர வாகனங்கள்-5 மற்றும் இரு சக்கர வாகனங்கள்-2 என மொத்தம் 7 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.

    நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இந்த பொது ஏலம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 15-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெல்லை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வை யிட்டு கொள்ளலாம்.

    மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ரூ.2000 முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

    பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்கு உண்டான சரக்கு மற்றும் சேவை வரி ( இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கரவாகனத்திற்கு 18 சதவீதம்) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாக னத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.97 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.24.30 காசுக்கு விற்பனையானது

    மொடக்குறிச்சி,

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 8 ஆயிரத்து 489 எண்ணிக்கையிலான 3 ஆயிரத்து 869 கிலோ எடை யுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.24.30 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ25.65 காசுகள், சராசரி விலையாக 25.25 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.97 ஆயிரத்து 744-க்கு விற்பனையாகின.

    • திருப்பூா், கோவை மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.
    • ஏலத்தில் மொத்தமாக ரூ.14.07 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 694 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருப்பூா், கோவை மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.

    ஏலத்தில் ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.7,176 வரை, கொட்டுரகம் (மட்ட ரகம்) ரூ.2,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.14.07 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

    • எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.36 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • விவசாயிகள் 9 ஆயிரத்து 671 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்

    மொடக்குறிச்சி.

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9 ஆயிரத்து 671 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.45-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.09-க்கும், சராசரி விலையாக ரூ.24.17 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 340-க்கு விற்பனையாகின.

    • வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ஏலத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளைபொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.இதன்படி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 17 ஆயிரத்து 637 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனை தொடர்ந்து டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது.இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.24.60-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.65-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 60 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.82.15-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.70-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 4 ஆயிரத்து 748 தேங்காய்களும், 18 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது.இதில் தேங்காய் ஒரு கிலோவிற்கு 55 பைசாவும், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.6.20-ம் கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு 9 டன் அளவில் மொத்தம் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 117-க்கு வேளாண் விளை பொருள்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • ஏலம் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தெலங்கானா மாநிலம், ஐதராபாத்-பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அத்துடன் விநாயகருக்கு லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில், விநாயகர் விஜர்சனம் நடைபெறுவதற்கு முன்பு விநாயகருக்கு வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.

    அதன் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது. இதனை அதே பகுதியில் வசிக்கும் ஒட்டு மொத்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வாங்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.60.80 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    • வெப்பிலி விற்பனைக் கூடத்தில் ரூ.51 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 72 காசுக்கு விற்பனையானது

    சென்னிமலை,

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,460 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 72 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 23 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 2,176 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 51 ஆயிரத்து 375 ரூபாய்க்கு விற்பனையானது.

    • விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது.
    • சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

    ஏலத்தில் முதல் தர நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.7,850 முதல் ரூ.8,260 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.7,400 முதல் ரூ.7,650 வரையிலும், மூன்றாம் தரம் ரூ.6,820 முதல் ரூ.7,400 வரையிலும், பச்சை நிலக்கடலை ரூ.2,730 முதல் ரூ.3,930 வரையிலும் விற்பனையானது.

    ஏலத்தில் மொத்தமாக ரூ.15 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

    • பெருந்துறையில் ரூ.1.97 கோடிக்கு கொப்பரை ஏலம் போனது
    • அதிக பட்சமாக கிலோ ரூ.83.29-க்கும் விற்பனையானது.

    பெருந்துறை,

    பெருந்துறை வேளா ண்மை பொருள்கள் உற்ப த்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடை பெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதி களைச் சேர்ந்த விவசா யிகள் 5 ஆயிரத்து 212 மூட்டைகளில் 2 லட்சத்து 53 ஆயிரம் கிலோ கொப்ப ரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அதில் முதல் தரக் கொ ப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.75.69-க்கும், அதிக பட்சமாக ரூ.83.29-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொ ப்பரை குறைந்தபட்சமாக, ரூ.41-க்கும், அதிகபட்சமாக ரூ.78-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.1.97 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    • வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • சராசரி விலையாக கிலோ 21 ரூபாய் 85 காசுக்கு ஏலம் போனது.

    சென்னிமலை,

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,700 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 70 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 85 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 833 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 18 ஆயிரத்து 218 ரூபாய்க்கு விற்பனையானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது.

    விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்தனர்.

    அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்காக 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான பெண்களும் மதுக்கடை ஏலம் கேட்டு விண்ணப்பித்தனர்.

    விண்ணப்ப படிவம் மூலம் ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில மதுக்கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் விண்ணப்பம் செய்தவர்கள் கலந்து கொண்டனர் .

    இந்த ஏலத்தில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் 100 கடைகளை பெண்கள் ஏலம் எடுத்தனர். இது கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக நகரப் பகுதிகளில் உள்ள கடைகள் பெண்கள் வசம் வந்துள்ளது. சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.

    அதிகபட்சமாக சரூர்நகர் 14, ஐதராபாத் 13, கேதராபாத் 8, ஷம்ஷாபாத் 7 கடைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    முந்தைய காலங்கள் போல் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். நல்ல எண்ணிக்கையிலான பெண்கள் ஏலத்திலும் கலந்து கொண்டனர்.

    ஒரு சில கடைகள் பெண்கள் பெயரில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர் என கலால் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராடிவரும் நிலையில் 100 கடைகள் பெண்கள் வசமாகி இருப்பது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மொத்தம் 4 ஆயிரத்து 133 சாக்கு பைகளும் ஏலமிடப்பட உள்ளது.
    • ஒரு நபரிடம் இருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெறப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் நடுவூரில் உள்ள கால்நடை பண்ணையில் காலி தீவன பாலத்தின் சாக்கு பைகள் வருகிற 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை )காலை 11 மணிக்கு பொது ஏலமிடப்பட உள்ளது.

    இதில் நல்ல நிலையில் உள்ள 4022 சாக்கு பைகளும் குறைந்த நிலையில் உள்ள 111 சாக்கு பைகளும் என மொத்தம் 4 ஆயிரத்து 133 சாக்கு பைகளும் ஏலமிடப்பட உள்ளது.

    ஏலம் கால்நடை பண்ணையில் உள்ள துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

    ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தனித்தனியாக ஏலத்திற்கான முன் வைப்புத் தொகை ரூ 1000ம் துணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பண்ணை நடுவூர் என்ற பெயரில் வங்கி வரைவோலையாக ஒரத்தநாட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றத்தக்க வகையில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஒரு நபரிடம் இருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெறப்படும். வரைவோலையுடன் ஆதார் அட்டை ஜெராக்ஸ் பெறப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஏலத்தில் கலந்து கொள்வ தற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படும். வங்கி வரை ஓலைகள் அனைத்தும் 5-ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும்.

    ஏல முன்வைப்பு தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    ஏலம் எடுத்தவர்கள் முழு தொகையும் செலுத்த தவறும் பட்சத்தில் அவர் செலுத்திய முன்வைப்புத் தொகை முழுவதும் இழக்க நேரிடும். ஏலம் விடப்படும் சாக்கு பைகளை துணை இயக்குனர் அல்லது பண்ணை மேலாளர் அனுமதி பெற்று பார்வையிடலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீபக்ே ஜக்கப் தெரிவித்துள்ளார்.

    ×