என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Attempted murder"
- நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல கணவன் முயற்சித்தார்.
- ஆதிகேசவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்தார். பின்னர் மனைவி என்றுகூட பாராமல் சரோஜினியின் கழுத்தை அறுத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி யூனியன் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் ஆதிகேசவன். கூலி தொழிலாளி. அவரது மனைவி சரோஜினி (வயது 42). கடந்த சிலநாட்களாக ஆதிகேசவன் தனது மனைவியின் நடத்தையின் சந்தேகப்பட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இன்று காலையும் பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த ஆதிகேசவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்தார். பின்னர் மனைவி என்றுகூட பாராமல் சரோஜினியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் சரோஜினி அலறித்துடித்தவாறு கீழே விழுந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த ஆதிகேசவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய சரோஜினி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குபதிந்து ஆதிகேசவனை தேடி வருகிறார்கள்.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று இரவு அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர் போதுங்கனி (வயது 59) பணியில் இருந்தார்.
- நுண்ணறிவு பிரிவு காவலர் வேல்முருகன் மின்னல் வேகத்தில் தப்பியோட முயன்ற செல்வக்குமாரை, மடக்கி பிடித்தார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் நிலையத்திற்கு சிவப்பு நிற பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர அங்கு ஏராளமான ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டு சவாரி ஏற்றி செல்கின்றனர். அங்கு பயணிகளை ஏற்றும்போது ஆட்டோ மற்றும் பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரான சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த போதுங்கனி(வயது 59) சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு தச்சநல்லூர் மேல அக்ரகாரம் தெருவை சேர்ந்த செல்வக்குமார்(30) என்பவர் வந்தார். ஆட்டோ டிரைவரான செல்வக்குமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதுங்கனியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து போதுங்கனியை குத்த முயன்றார்.
அப்போது அந்த வழியாக இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்திப்பு நுண்ணறிவு பிரிவு காவலர் வேல்முருகன் விரைந்து வந்து செல்வக்குமாரை பிடிக்க முயன்றார்.இதனால் அங்கிருந்து செல்வக்குமார் தப்பி ஓடினார்.
ஆனால் காவலர் வேல்முருகன் அவரை விடாமல் துரத்தி சென்றார். த.மு. சாலையில் மின்னல் வேகத்தில் தப்பியோட முயன்ற செல்வக்குமாரை, வேல்முருகன் மடக்கி பிடித்து சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்றார்.
- பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்ட நடந்த முயற்சியில் வெட்டுக் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உத்தமபாளையம் :
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் சுரேஷ்குமார் (வயது 33). இவர் கம்பத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பி.டி.ஆர். சாலை வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரை பின்தொடர்ந்து ேமாட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவரை வழிமறித்து கீழேதள்ளி கத்தி மற்றும் அரிவாளால் தாக்கினர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவரவே அவர்கள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து உத்தம–பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் தப்பி ஓடியவர்கள் 2 பேரும் மதுரையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் சுரேஷ்குமாரை தீர்த்துக் கட்ட வந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி சுஜா (வயது 34).
இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் சுஜா அதே பகுதியை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் சுஜா நேற்று வேலைக்கு சென்று விட்டார். இவர்களது மகளான மகேஸ்வரி (10) என்பவர் அங்குள்ள ஒரு கடையில் பிஸ்கட் வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை கொடுக்காமல் வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக அந்தோணிராஜிடம் கடை வியாபாரி புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ் வீட்டிற்கு சென்று 3 குழந்தைகளிடம் அதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் ஆத்திரம் அடைந்த அவர் 3 குழந்தைகள் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீவைத்தார். இதில் மகனும், ஒரு மகளும் கூச்சலிட்டவாறு அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் மீது லேசாக தீப்பிடித்து. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்கள் மீது பற்றிய தீயை அணைத்தனர்.
பின்னர் கடையில் இருந்து வீடு திரும்பிய சுஜா மற்றும் பொதுமக்கள் வீட்டில் தீப்பிடித்த நிலையில் இருந்த மகேஸ்வரியின் உடலில் இருந்த தீயை அணைத்து படுகாயமடைந்த அவரை நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் தீக்காயம் காரணமாக ஜேசுஅந்தோணி ராஜூம் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
தர்மபுரி மாவட்டம் இருளப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 47).
கவரிங் வியபாரியான இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி காமதேனு (45) மற்றும் 2 குழந்தைகளுடன் சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார்.
இந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவும் 8 மணியளவில் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த திருமுருகன், மனைவி காமதேனுவை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் கால் உள்பட பல பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமுருகனை பிடித்த போலீசார் எதற்காக அவர் மனைவியை தள்ளி விட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததுடன் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர்கள் தினேஷ், மரியஅருண். இவர்கள் நேற்று மாலை மேலூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் லாரியை டிரைவர் மெதுவாக ஓட்டி வந்தார். உடனே போலீஸ்காரர்கள் லாரியின் முன் பகுதிக்கு சென்று விசாரிக்க முயன்றனர்.
இதையடுத்து திடீரென்று வேகத்தை அதிகரித்த டிரைவர், போலீஸ்காரர்கள் மீது லாரியை ஏற்றிக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ்காரர் தினேஷ் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிலைமானை சேர்ந்த பெரியசாமி (44) என்பவரை கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
ஈரோடு, தெற்கு பள்ளம், ஜீவாநகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த 3 வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவரது மனைவி மாதம்மாள் (வயது 42). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மாதம்மாள் அங்குள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதம்மாள் திடீரென மாயமானார். அவரது பிள்ளைகளும், உறவினர்களும் பல இடங்களில் தேடி பார்த்தனர்.
ஆனால் மாதம்மாளை காணவில்லை. எனவே அவர் மாயமானது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் மாதம்மாளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஜீவா நகர் அருகே முட்புதர் பகுதியில் ஒருவருடைய முனகல் சத்தம் கேட்டது.
இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் முனகல் சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பெண் ரத்த காயங்களுடன் கிடந்தார்.
இது பற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண் மாயமான மாதம்மாள் என்பது தெரியவந்தது. அவரது தலையில் யாரோ கல்லை தூக்கி போட்டு அவரை கொல்ல முயன்றுள்ளனர்.
போலீசார் மாதம்மாளை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாதம்மாள் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாதம்மாளின் தலையில் கல்லை போட்டு அவரை கொல்ல முயன்றவர் யார்? என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கினர்.
மாதம்மாள் படுகாயத்துடன் கிடந்த முட்புதர் பகுதியில் மது பாட்டில்கள் கிடந்தது. எனவே அந்த பகுதியில் இருந்து மது குடித்தவர்கள் தான் மாதம்மாளை கொல்ல முயன்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த இடத்துக்கு மாதம்மாள் சென்றது ஏன்? என்பதும் தெரியவில்லை. அது தொடர்பாகவும், மாதம்மாள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் வேலை பார்க்கும் தர்மபுரி பகுதியை சேர்ந்தவருக்கும், மாதம்மாளுக்கும் பழக்கம் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை போலீசார் தேடினர். ஆனால் அவரை காணவில்லை. வேலைக்கும் வரவில்லை. அவர் தலைமறைவாக உளளர். எனவே அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அந்த நபரை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். அவர் பிடிபட்டால் மாதம்மாளை கொல்ல முயன்றது யார்? என்பது பற்றிய மேல் விவரம் தெரியவரும்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து யாரேனும் வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்திச்செல்வதை தடுக்கும் வகையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் சோதனைச்சாவடியில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் வழிமறித்து சோதனை செய்தபோது அந்த வாலிபர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகனை தகாத வார்த்தையால் திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷ்முருகனை குத்த முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் ஒதுங்கிக்கொண்டார்.
உடனே மற்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் வானூர் தாலுகா நாவற்குளம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கணேஷ் என்கிற செங்குட்டுவன் (வயது 32) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கணேஷ் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை வானூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்