என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Asian Champions Trophy"
- முதல் பாதியில் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.
- இரண்டாவது பாதியில் இந்தியா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தது.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
முதல் போட்டியில் மலேசியா சீனாவை 5-1 என வீழ்த்தியது. கொரியா, பாகிஸ்தான் இடையிலான 2வது போட்டி சமனில் முடிந்தது.
இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.
ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 43வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில், 1-1 என போட்டி சமனில் முடிந்தது.
- முதல் பாதியில் இந்தியா 6-2 என முன்னிலை பெற்றது.
- இறுதியில், இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் தென்கொரிய அணி 2-1 என வெற்றி பெற்றது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் மலேசிய அணி 3-1 என்ற கோல்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி சீனாவுடன் மோதியது. போட்டியின் துவக்கம் முதலே
ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 6-2 என
முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது.
இறுதியில், இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
- இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
- லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
சென்னை:
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும்.
இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் சென்னைக்கு வரத் தொடங்கினர். அவர்களுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டு அணியை சார்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
44-வது நிமிடத்தில் சின்லென்சானா கோல் அடிக்க இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது. 55-வது நிமிடத்தில் இந்தியாவின் தில்ப்ரீத் சிங் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. 56-வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 3-2 என ஆனது.
கடைசி நான்கு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்தியா 3-2 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
அதன்படி நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. #AsianChampionsTrophy2018 #HockeyIndia #IndianHockey
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 11-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.
நேற்று ஜப்பானுடன் இந்தியா மோதியது. இதில் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. மன்தீப்சிங், ஹர்மன்பிரீத் சிங், லலித் உபத்யாவ் தலா 2 கோலும், குருஜந்த் சிங், கோஜத்சிங், அக்ஷய் தீப் தலா 1 கோல் அடித்தனர்.
அடுத்து இந்திய அணி நடப்பு சாம்பியனான மலேசியாவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. #AsianHockey #India #Japan
தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஜப்பான் மற்றும் சீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மலேசியாவிற்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்திய வீராங்கனைகள் குர்ஜித் கர்(17 வது நிமிடம்), வந்தனா கத்ரியா (33) மற்றும் லால்ரீம்சியாமி(40) தலா ஒரு கோல் அடித்தனர். கொடுக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய குர்ஜித் இந்தியாவிற்கு முதல் கோலை பெற்று தந்தார். சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் மலேசியாவின் பெனால்டி பாலை லாவகரமாக தடுத்தனர். இதனால் இந்தியா எளிதான தங்கள் வெற்றியை பெற்றது.
இது இந்தியாவிற்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றியாகும். இறுதி போட்டிக்கு தகுதி பெற்றாலும், 19-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி தென்கொரியா அணியுடன் மோதுகிறது. இறுதி போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. #AsiaHockey #AsianWCTc
இந்தியா இன்று தன்னை விட அதிக தரவரிசையில் உள்ள சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. வந்தனா கட்டாரியா 4-வது மற்றும் 11-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். குர்ஜித் கவுர் பெனால்டி கார்னரை பயன்படுத்தி கோல் அடித்தார். சீன வீராங்கனை வென் டான் 15-வது நிமிடத்தில் ஒரு கோல்அடித்தார். இதனால் இந்தியா தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.
உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியா, நாளை அடுத்த போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது. 19-ந்தேதி தென்கொரியாவை எதிர்கொள்கிறது.
இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 3-2 என ஜப்பானை வீழ்த்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்