என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "artificial intelligence"
- பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுவதாக பிரிட்டனின் தூதர் பார்பரா உட்லேண்ட் கூறியிருக்கிறார்.
- செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கும் அமைப்பை உருவாக்க ஓபன்ஏஐ ஆலோசனை வழங்கி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை, முதல் முறையாக ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்தை பிரிட்டன் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் வரக்கூடிய அனுகூலங்களை உணர்ந்திருந்தாலும், அவற்றை அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் போது அதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் கவலை கொள்ள வேண்டியுள்ளதால் இந்த கூட்டம் பிரிட்டனால் நடத்தப்படுகிறது.
"விஞ்ஞானிகளும், நிபுணர்களும், அணுசக்தியால் ஏற்படக்கூடிய போர் அபாயத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என அறிவித்து, இதனை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்" என்று ஐ.நா. தலைவர் கூறியிருக்கிறார்.
செப்டம்பரில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்க திட்டமிருப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.
"செயற்கை நுண்ணறிவு விளைவிக்கப்போகும் சாதக, பாதகங்களை குறித்து தீர்மானிக்க ஒரு பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது" என பிரிட்டனின் தூதர் பார்பரா உட்வார்ட் கூறியிருக்கிறார்.
ஓபன்ஏஐ (OpenAI) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறும்போது, "அமெரிக்க அல்லது உலகின் சில நாடுகளின் கூட்டு முயற்சியால் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கவும், தேவைப்பட்டால் அந்த உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ள ஒரு அமைப்பை உருவாக்கலாம்" என ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரிட்டன் பிரதம மந்திரி ரிஷி சுனக் கூறுகையில், "உலகளாவிய பலதரப்பு விவாதத்தை நாங்கள் நடத்த முடியும். இதற்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய உச்சிமாநாட்டை பிரிட்டன் நடத்தும்" என்று தெரிவித்தார்.
- பணியமர்த்தல் திறனை இது அதிகரிக்கும் என்று 65% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- ஆன்லைன் கணக்கெடுப்பில், 18 முதல் 64 வயதுக்குட்பட்ட 2,286 அமெரிக்கர்கள் பங்கேற்றனர்.
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவைபயன்படுத்தி, பல துறைகளில் பல வேலைகளை துரிதமாகவும், திறம்படவும் செய்வது வழக்கமாகி வருவதுடன், செயற்கை நுண்ணறிவு வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிக்கொண்டு வருகிறது.
கட்டுரைகளை எழுதுதல், மோசடியைக் கண்டறிதல், கற்பித்தல் மற்றும் மாசுபாட்டைக் கண்காணித்தல் ஆகியவை இதன் ஏராளமான பயன்பாடுகளில் அடங்கும்.
இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, வேலைக்கான நேர்காணல்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.
வேலை தேடுபவர்களுக்கான பிரபல இணைய தளமான, "ரெஸ்யூம் பில்டர்" நடத்திய கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய 43% நிறுவனங்கள், 2024ம் ஆண்டிற்குள் நேர்காணல்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.
கணக்கெடுப்பின் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களிலும், 15% நிறுவனங்கள் தங்களின் அனைத்து பணியமர்த்தல் முடிவுகளுக்கும் "தொடக்கத்தில் இருந்து இறுதி வரை" (start-to-finish) இனி செயற்கை நுண்ணறிவின் பயன்படுத்தலை நாடப்போவதாக கூறியுள்ளன. 32% நிறுவனங்கள் நேர்காணல்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு மூலமாக செய்யப்படும் நேர்காணல்களின் செயல்திறனை மதிப்பிடுமாறு கேட்டபோது, 65% பேர் பணியமர்த்தல் திறனை இது அதிகரிக்கும் என்றும், 14% பேர் பணியமர்த்தல் திறனைக் குறைக்கும் என்றும், மற்றும் 21% பேர் இது செயல்பாட்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் நம்புகின்றனர்.
ரெஸ்யூம் பில்டர் நடத்திய ஆன்லைன் கணக்கெடுப்பில், 18 முதல் 64 வயதுக்குட்பட்ட 2,286 அமெரிக்கர்கள் பங்கேற்றனர். வேலைக்கு ஆட்களை நியமிக்கும் மேலாளர்கள் அல்லது ஆட்களை தேர்வு செய்யும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.
வேலை தேடுபவர்களில் 46% பேர் இப்போது தங்கள் பயோடேட்டா மற்றும் முகப்பு கடிதங்களை (covering letter) எழுதுவதற்கு தற்போது மிகவும் பிரபலமாகவுள்ள சாட்ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை பயன்படுத்துகின்றனர் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், மிக அதிக சதவீதமாக (அதாவது 78% பேர்) வேலைக்கான விண்ணப்பங்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உடனே பதிலை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
- வாகனங்கள் குறித்த விபரங்கள் தரவு தளங்களில் சேமித்து வைக்கும்.
- இந்த தொழில் நுட்பத்தில் பரிவாகன் தளமும் இணைக்க ப்பட்டுள்ளதால் வாகனங்கள் குறித்த விபரங்களை விரைவாக பெற முடியும்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு பெண்கள் பெண் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணாபுரத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி சிக்னல்கள் இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்.பி. தொடங்கி வைத்தார்
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கி தானியங்கி சிக்னல்களை இயக்கி வைத்தார். அதன்படி தென்காசி- மதுரை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி மாணவிகள் செல்வதற்கு வசதியாக பாதசாரிகள் சிக்னல் மற்றும் கிருஷ்ணாபுரம் குறுகிய சாலை பகுதியில் இரு புறமும் சிக்னல்கள் இயக்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கூறியதாவது:-
இந்த சிக்னல்களில் தானியங்கி காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை படம் பிடித்து கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். அங்கு பணியில் இருக்கும் காவல்துறையினர் சிக்னலை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்கள், மூன்று பேருடன் செல்லும் வாகனங்களை சரி பார்த்து அபராதம் விதிப்பர்.
போக்குவரத்து விதிமீறல்
அது போல் காவல்துறை யினர் இல்லாமலேயே போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பதிவு செய்து அவர்களுக்கான அபராதத்தையும் குறுஞ்செய்தி யாக இத்தொழில்நுட்பம் அனுப்பி வைக்கும்.
ஐடிஎம்எஸ். தொழில் நுட்பத்துடன் செயல்படும் இந்த தானியங்கி காமிராக்கள் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் குறித்த விபரங்கள் தரவு தளங்களில் சேமித்து வைக்கும். இதன் மூலம் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வாகனங்கள், திருட்டு வாகனங்கள் குறித்து ஒப்பீடு செய்து அது குறித்த எச்சரிக்கை செய்தியை காவல்துறைக்கு இந்த தொழில்நுட்பம் அனுப்பி வைக்கும்.
இந்த தொழில் நுட்பம் போக்குவரத்து துறையின் பரிவாகன் தளமும் இணைக்க ப்பட்டுள்ளதால் வாகனங்கள் குறித்த விபரங்களை விரைவாக காவல்துறையினர் தெரிந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் காவல் உள்கோட்டத்தில் 2 இடங்களில் இது போன்ற செயற்கை நுண்ணறியுடன் கூடிய தானியங்கி காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் தானியங்கி காமிராக்கள் தேவைப்படும் இடங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, தென்காசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபு, சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, கிருஷ்ணன், தொழிலதிபர்கள் அமானுல்லா, செல்வம், ரவிச்சந்திரன், பகதூர்ஷா, தானியங்கி சிக்னல் டெக்னிக்கல் பிரிவு என்ஜினீ யர்கள் அஜீஸ், ஜீவிதா, ராமலிங்கம் சண்முகம் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்