search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artificial color"

    • தீபாவளி பண்டத்தில் செயற்கை வண்ணம் சேர்க்கக்கூடாது
    • பண்டங்களை வாங்கும் போது ஏதாவது குறைபாடு இருந்தால் பாதிக்கப்பட்டோர் 9444042322 அலைபேசி என்னில் தொடர்பு கொண்டு புகார் தரலாம்.

    மதுரை

    மதுரை மாநகரில் தீபாவளி பலகாரம் செய்யும் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வர்த்தக தொழிற்சங்க அரங்கில் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தீபாவளி பண்டம் செய்யும் வியாபாரிகள் ஆர்.சி. மற்றும் லைெசன்சு ஆகியவற்றை கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். உணவு பொருளை பார்சல் செய்வோர் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட லேபிள்களை பயன்படுத்த வேண்டும். அதில் உணவு தயாரிப்பு தேதி, காலாவதியான நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருப்பது அவசியம்.

    உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி 'கலரிங்' சேர்க்கக் கூடாது. இது நுகர்வோரிடம் கேன்சர் மற்றும் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் இன்று முதல் தினந்தோறும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட உள்ளன. உணவு தயாரிப்பு கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    தீபாவளி பலகார விற்பனை கடைகளில் பயன்படுத்தும் எண்ணையை ரோட்டோர கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்த கூடாது.

    இதனால் புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உண்டு. தீபாவளி பண்டங்களை வாங்கும் போது ஏதாவது குறைபாடு இருந்தால் பாதிக்கப்பட்டோர் 9444042322 அலைபேசி என்னில் தொடர்பு கொண்டு புகார் தரலாம். வாட்ஸ் அப் மூலம் தகவலை பகிரலாம். நாங்கள் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தி நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ள நிலையில் காய்களாக கொண்டுவரப்படும் தக்காளிக்கு செயற்கை நிறமேற்றி விற்பனை செய்யப்படுகிறது.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு சென்று ஆய்வு செய்யும்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் தரத்தையும் ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள் உள்பட பெரும்பாலான மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் தக்காளி குறைந்த விலையில் கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்து சாலையில் கொட்டிச்செல்லும் அவலம் நடந்து வருகிறது.

    தற்போது ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டாலும் இதனை விளைவித்து விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளுக்கு முதலீடு கூட கிடைப்பதில்லை. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ள நிலையில் காய்களாக கொண்டுவரப்படும் தக்காளிக்கு செயற்கை நிறமேற்றி விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளிகளை நல்ல சிவப்பு நிறத்தில் உள்ள பழங்கள், புதிதாக பறித்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது என நினைத்து பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் காய்களாக இருந்தாலும் அதற்கு செயற்கை நிறமூட்டினால் நல்ல சிவப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. ஆனால் மறுநாளே அந்த பழத்தில் சிறுசிறு துளைகள் விழுந்து நோய்வாய்ப்பட்டதுபோல மாறி விடுகிறது.

    இதுபோன்ற பழங்களை சமையலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு சென்று ஆய்வு செய்யும்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் தரத்தையும் ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×