search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested"

    • சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது
    • கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தலையை கைப்பற்றியதுடன் உடலையும், கொலையாளியையும் தேடினர். தொடர்ந்து தலை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் குள்ளம்பட்டி பள்ளக்காட்டை சேர்ந்த பிரபல ரவுடியான திருமலை (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் உடலை அங்குள்ள நாட்டாமங்கலம் ஏரிக்கரையில் வீசியதாக தெரிவித்தார். அதன்படி அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    திருமலை கொடுத்த தகவலின்பேரில் அவரது பைக் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமலை கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது - பிரபல ரவுடியான திருமலை நேற்று முன்தினம் பைக்கில் வாழப்பாடி முத்தம்பட்டி சென்றார். அங்கு விவசாய தோட்ட பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்தம் பட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி ஜோதி 45 என்பவரை மிரட்டி ஒன்றரை பவுன் நகையை பறித்தார்.

    அங்கிருந்து நடுப்பட்டி வழியாக வந்த போது சாலையில் நடந்து வந்த குமார் மீது மோதுவது போல சென்று தகராறு செய்தார். பின்னர் இரு வரும் சமரசம் ஆகிய நிலையில் தன்னுடன் வந்தால் மது வாங்கி தருவதாக கூறி குமாரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு நீர்முள்ளிக் குட்டை சிவசக்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கினர்.

    பின்னர் இருவரும் அக்ரஹாரம் நாட்டாமங்கலம் ஏரிக்கரைக்கு வந்து மது அருந்தினர். அப்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த திருமலை, குமாரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து தலையை அறுத்து குள்ளம்பட்டி பிரிவு சாலையில் வீசி விட்டு சென்றதும், அங்குள்ள சி.சி.டி.சி. காமிரா பதிவால போலீசாரிடம் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்துஅவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டு உள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ைகதான பிரபல ரவுடி ஏற்கனவே 2 கொலைகள் செய்துள்ள நிலையில் தற்போது சிறிய பிரச்சினையில் ஒருவரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பீதி நிலவி வருகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடும்நிலை உள்ளது.

    • அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.
    • மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருந்தார்.

    சென்னை:

    சென்னை அமைந்தகரையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

    துபாயில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க போலீஸ் வியூகம் வகுத்திருந்தது. கடந்த 3 வருடமாக தேடப்பட்டு வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    • மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • கண்ணன் மற்றும் வெயிலுகந்தகோபால் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் தி.மு.க. கிளை செயலாளர் மாரீஸ்குமார். (வயது 30).

    இவர் கடந்த 27-ந் தேதி மோட்டார் சைக்களில் சென்றபோது ஓட்டப்பிடாரம் அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதில் காயம் அடைந்த மாரீஸ்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டது தொடர்பாக அவருக்கும், ஓட்டப்பிடாரம் தி.மு.க.சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரான கண்ணன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மணல்குண்டுவை சேர்ந்த வெயிலுகந்தகோபால் ஆகிய இருவரும் சேர்ந்து மாரீஸ் குமாரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கண்ணன் மற்றும் வெயிலுகந்தகோபால் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    • கம்ப்யூட்டர், சி.பி.யூ. கேமரா ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    • விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார், விடுதி மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி 100 அடி ரோட்டில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு காதல் ஜோடி அறை எடுத்து தங்கினர்.

    அப்போது அந்த விடுதி படுக்கை அறையில் எலெக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்சில் இன்டர்காம் பிளக் பாயின்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு காதல் ஜோடியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காதல் ஜோடியினர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் விடுதி அறையில் சோதனை செய்தபோது பல காதல் ஜோடிகள் தனிமையாக இருந்ததை வீடியோ எடுத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கம்ப்யூட்டர், சி.பி.யூ. கேமரா ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார் மற்றும் விடுதி மேலாளர் இருதய ராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விடுதி அறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்தது விடுதி ஊழியர்களான தேங்காய் திட்டு வசந்தம் நகரை சேர்ந்த ஆனந்து (25), அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியை சேர்ந்த ஆபிரகாம் (21), என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    இதையடுத்து விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார், விடுதி மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான ஆனந்து, ஆபிரகாம் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் கோவாவில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களை புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
    • ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 28 வயது இளம் பெண்ணின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த இளம் பெண் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை அப்பெண் அணுகியுள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கரராஜ், அப் பெண்ணிடம் இருந்து செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காதர் பாஷா, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் போலீசார் பெண்களுக்கு பாலியல்எதிரான வன்கொடுமை மற்றும் சாதியை பற்றி பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடியுள்ளார்.
    • புகார் பேரில் வடவள்ளி போலீஸார் ரேவதியை கைது செய்துள்ளனர்..

    கோவை, 

    கோவை வீரகேரளம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மலர்(48). இவர் சம்பவத்தன்று கோவை கடைவீதிக்கு வந்து பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக வீரகேரளம் செல்லும் பஸ்சில் சென்றார். வீட்டிற்கு சென்று தனது பையை எடுத்து பார்த்தார். அப்போது, தங்க செயின் மாயமாகி இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நகைைய திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய கடலூர் நெல்லி குப்பத்தை சேர்ந்த ரேவதி(28) என்பவரை கைது ெசய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.மேலும் அவரிடமிருந்து 4 பவுன் செயினை மீட்டனர்.

    • விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தியதால் வாக்குவாதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்லினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை. 

    கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் போக்குவரத்து காவலராக இருப்பவர் மதுசூதனன். இவர் நேற்று மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, அங்கு கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த இளநீர் கடை நடத்தி வரும் மார்லின்(35), என்பவர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வேகமாக வந்தார்.

    இதை பார்த்த போலீஸ்காரர் மதுசூதனன், மார்லின் வாகனத்தை நிறுத்தினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மார்லின், போக்குவரத்து போலீஸ்காரரை தாக்க முயன்றார்.

    இதுகுறித்து மதுசூதனன் கோவை ஆர்எஸ். புரம் போலீசில் புகார் செய்தார்.பு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்லினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கேரள பிரமுகர் தப்பியோட்டம்
    • சேட்டா விசாகப்பட்டினத்தில் இருந்து 50 கிலோ கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    முதலியார்பேட்டை அனிதாநகர் பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக 2 கார்கள் நீண்ட நேரம் நின்றுக் கொண்டிருந்தது. இதனால் அந்த காரை போலீசார் கண்காணித்தனர்.

    சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காரின் அருகில் சென்றனர். அப்போது காரில் இருந்தவர்கள் ஒரு பொட்டலத்தை அவர்களி டம் கொடுத்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். இதனால் காரில் இருந்த வர்கள் ஓடத் தொடங்கினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர். இதில் 7 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.

    இதனையடுத்து காரில் போலீசார் நடத்திய சோதனையில் 45 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.

    தொடர்ந்து பிடிபட்ட வர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த அசாருதீன் (வயது 25) ஷாருக்கான் (25) ராஜூவ்காந்தி (28) அப்துல்கலாம் (19), மனோஜ்குமார் (22), புதுவை நைனார்மண்டபம் துளுக்கானத்தம்மன் வீதியை சேர்ந்த செந்தில்குமார் ( 23) நைனார்மண்டபம் பாண்டியன் வீதியை சேர்ந்த அலெக்ஸ் என்ற அலெக் சாண்டர் (34) என்பது தெரிய வந்தது.

    தப்பியோடியவர் கேரளாவை சேர்ந்த சேட்டா என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து 2 கார், மோட்டார் சைக்கிள், 7 செல்போன் மற்றும் 45 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய கேரளாவை சேர்ந்த சேட்டா என்பவர் கஞ்சாவை மொத்தமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கி வந்து தமிழகம், புதுவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனது கூட்டாளிகளுடன் விற்று வந்துள்ளார்.

    சேட்டாவுடன் விழுப்புரம் அசாருதீனுக்கு பழக்கம் இருந்துள்ளது. இதனால் சேட்டா மூலம் அசாருதீன் கஞ்சாவை வாங்கி வந்து அதனை புதுவையை சேர்ந்த அலெக்ஸ், செந்தில்குமார் ஆகியோரிடம் கொடுத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

    இதனிடையே, சேட்டா விசாகப்பட்டினத்தில் இருந்து 50 கிலோ கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்துள்ளார். அதில் 5 கிலோ வை சென்னையில் கொடுத்துள்ளார். புதுவையில் உள்ள அலெக்ஸ் 2 கிலோ கஞ்சா கேட்டதால் காரில் கொடுக்க வந்துள்ளார்.

    அவருடன் காரில் விழுப்புரத்தை சேர்ந்த மற்றவர்களும் வந்துள்ளனர். இவர்கள் புதுவையில் கஞ்சாவை கொடுத்துவிட்டு, திண்டிவனம், கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு கொடுத்துவிட்டு, இறுதியில் திருவண்ணாமலை செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அதற்குள் போலீசில் சிக்கி கொண்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மொத்த வியாபாரியான சேட்டாவை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • சோழவரம் போலீசார் வழக்குபதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்தனர்.
    • கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்ட தொடங்கி உள்ளனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27). இவரை அதே பகுதி சோழபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி என்பவர் ஓரினசேர்கைக்கு அழைத்து சென்று அப்போது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்தார். அவரது உடலை கேசவ மூர்த்தி தனது வீட்டில் புதைத்தார். போலீசார் அசோக்ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு தோண்டும் போது மற்றொரு மனித தாடை எலும்பு கூடு சிக்கியது. இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷித்ராவத் தலைமையில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் முன்னிலையில் இன்று மாலை ஜேசிபி எந்திரம் மூலம் கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்ட தொடங்கி உள்ளனர். இதனால் இந்த கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    ராஜேஷ்வரி கொடுத்த புகாரின் பேரின் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    பீளமேடு,

    கோவை பீளமேடு கோபால் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(55). இவரது உறவினர் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு நஞ்சப்பா ரோட்டில் உள்ளது.

    நஞ்சப்பா ரோட்டில் உள்ள வீட்டை லாவண்யா என்பவர் மாதத்தில் 2 முறை சென்று சுத்தம் செய்வது வழக்கம். சம்பவத்தன்று லாவண்யா வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உடனே லாவண்யா ராஜேஷ்வரிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான வெண்கல பொருட்கள் மாயமாகி இருந்தது.

    இது குறித்து ராஜேஷ்வரி கொடுத்த புகாரின் பேரின் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட செங்கல்பட்டை சேர்ந்த புகழேந்தி(22), வால்பாறையை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(31), கேரளா மலப்புரத்தை சேர்ந்த பூக்கயா(47), கோவை தடாகம் ரோடு வெங்கிடாபுரத்தை சேர்ந்த முருகன்(63) ஆகிய 4 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்
    • போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோட்டூர் போலீசார் விசாரணை

    கோவை, 

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு தேவராயபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரி செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    அப்போது மாணவியை சந்தித்த சிறுவன் திருமணம் செய்வ தாக ஆசைவார்த்தை கூறி அவரை சென்றாம்பா ளையம் அம்மன் நகரில் உள்ள தோட்டத்துக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கல்லூரிக்கு சென்ற மகள் வீட்டிற்கு வராததால் மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை மீட்டு தரும்படி கோட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி சிறுவனுடன் சென்றாம்பா ளையத்தில் உள்ள தோட்ட த்தில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து கோட்டூர் போலீசார் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • மனைவியை அபகரித்து குடித்தனம் நடத்தியதால் ஆத்திரம்
    • 2 அரிவாள் மற்றும் கார் பறிமுதல்

    கோவை, 

    கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த வர் ஷெல்டன் (வயது 29). கூலித் தொழி லாளி. சந்தை பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). பெயிண்டர். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்ப ர்கள்.

    அடிதடி வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு அடிதடி வழக்கில் கார்த்திகேயன் ஜெயிலுக்கு சென்றார். அப்போது ஷெல்டனுக்கும் கார்த்திகேயனின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    பின்னர் ஷெல்டன் கார்த்திகேயனின் மனைவி மற்றும் 2 பெண் குழந்தை களுடன் சரவணம்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். தன்னு டைய மனைவியுடன் ஷெல்டன் குடும்பம் நடத்தி வருவதால் அவர் மீது கார்த்திகேயனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதன் கார ணமாக 2 பேரும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ஷெல்டன் அடிதடி வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு அவரது தம்பி நியூட்டனுடன் சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை கார்த்திகேயன் ஒரு காரில் நண்பர்களான விளாங்குறிச்சியை சேர்ந்த ஜெகன் (40), ஆவாரம்பா ளையத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி (32), கணபதியை சேர்ந்த பிரதாப் (29) ஆகியோருடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயு தங்களுடன் பின் தொ டர்ந்து சென்றார்.

    மோட்டார் சைக்கிள் புதுப்பாளையம் சீதாவனம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்தில் மோதி கீழே தள்ளினர். இதில் கீழே விழுந்த ஷெல்டனை வெட்டி கொலை செய்ய முயன்றார். அப்போது கும்பலிடம் இருந்து தப்பிய அவர் இதுகுறித்து தொ ண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், ஜெகன், சத்தியமூர்த்தி, பிரதாப் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் 2 அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×