என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "arrested. vehicles"
- மதுரை அருகே வாகனங்களை சூறையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தப்பி ஓடிய கீரைத்துறை வேலு என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை கீரைத்துறை, வேத பிள்ளை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி முனியாயி (வயது 53). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன் விரோதம் உள்ளது.
இந்த நிலையில் முனியாயி சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது அங்கு 4 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தது.
அப்போது அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த ஷேர்ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சூறையாடிவிட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக முனியாயி கீரைத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து வந்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் இருளப்பன் கோவில் தெரு, கண்ணன் மகன் ஜோதிமாரி (20), திருக்கண்ணன் மகன் திருமுருகன் (21), கீரைத்துறை வசந்தகுமார் (25) என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்டதாக மேற்கண்ட 3 பேரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய கீரைத்துறை வேலு என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்