search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arpaattam"

    • பாரத் கவுரவ் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு அளிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    கோவை:

    கோவை ரெயில் நிலையம் நுழைவாயில் முன்பு விரைவு ரெயில்களை தனியாருக்கு அளிப்பதை கண்டித்து சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கறுப்பு தின ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லி நேபாள் ரெயிலை விற்றதை வாபஸ் பெற வேண்டும்.

    பாரத் கவுரவ் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு அளிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் யூனியனை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசிடமும் ரெயில்வே அமைச்சகத்திடமும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    ×