search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "area"

    • நம்பியூர் பகுதியில் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர்.
    • இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேணுகோபால், வெற்றிவேல்.

    வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேணு கோபால் தனது வீட்டை நேற்று முன்தினம் பூட்டி விட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.

    2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர். மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெத்தாம்பாளையம் பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி வரும் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெத்தாம்பாளையம், கொளத்தான் பாளையம், மூலக்கடை, செங்கோடன் பாளையம், பூச்சம்பதி, கே.ஜி.புதூர், திட்டுக்காடு, புலவர் பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், எம்.ஜி.பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஜோடி கரும்புத்தட்டை ரூ.40முதல் ரூ.50 வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நத்தம்:

    தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பழமொழி அதற்கேற்ப விவசாயிகளின் வாழ்விலும் ஒரு வழிபிறக்கும் நாளாக இன்றளவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி பொங்கல் வைக்கும்போது கரும்பு,மஞ்சள்,மாவிலை உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு எனும் கருப்பு கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஆவிச்சிபட்டி, சேர்வீடு, குட்டுர், காசம்பட்டி, வத்திபட்டி, அய்யனார்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் ஆங்காங்கே இந்த கரும்புகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த கரும்பு குறித்து விவசாயி சீரங்கம்பட்டி அழகர்சாமி (55)கூறியதாவது:-

    இந்த கருப்பு கரும்புக்கு வயது 10 மாதங்களாகும். கருப்புகரும்பு வேரோடு பறிக்கப்படுவதால் இந்த கரும்பை அறுவடை செய்து விட்டு மற்ற ஆலைகரும்பு போல் மறுதாம்பு விடமுடியாது. ஒரே மகசூல் மட்டுமே கிடைக்கும். இந்த கரும்பானது அதிக இனிப்புத்தன்மை வாய்ந்தது. ஆனால் வெல்லம் காய்ச்சுவதற்கு ஏற்றது அல்ல. தவிர ஒரு ஏக்கருக்கு அனைத்து செலவுகளையும் சேர்த்து அறுவடை செய்வது உள்பட ரூ.50ஆயிரம் வரை செலவாகும். வரவு சுமார் ரூ.90ஆயிரம் முதல் ரூ.1லட்சம் வரை கிடைக்கும்.

    பொதுவாக விவசாய பணி வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது கடும் தட்டுப்பாடாக இருக்கிறது. அத்துடன் இயற்கையாக பெய்யும் மழையும், கிணறுகளில் உள்ள நீர் மட்டமும் குறையாமல் இருந்தால் தான் கரும்பு விவசாயம் லாபத்தை ஈட்டமுடியும். அதிகமான வேலைகள் இந்த கரும்பில் தான் உண்டு.

    இதற்கெல்லாம் அரசு விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கினால் இந்த கரும்பை விவசாயிகள் விரும்பி பயிரிடுவார்கள். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால் ஒரு ஜோடி கரும்புத்தட்டை ரூ.40முதல் ரூ.50 வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் தினம் நெருங்கும் காலத்தில் இந்த கரும்புகள் அறுவடை செய்து மதுரை, திண்டுக்கல், மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×