search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annual Festival"

    • நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி-நாடார் மேல்நிலைப்பள்ளியில் 104-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டி நடந்தது.
    • முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாவிருத்தி சங்கம் உறவின் முறைக்குபாத்தியப்பட்ட நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி 104-வது ஆண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.

    53-வது வார்டு உறுப்பினர் அருண்குமார், உதவி பொறியாளர் ராம்சுப்பு ஆகியோர் தொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். பள்ளி செயலாளர் குணசேகரன், உறவின் முறை தலைவர் கணபதி ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

    பேரணி காமராஜர் விளையாட்டு திடலில் தொடங்கி மதுரை கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நடந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியாள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் (சட்டம், ஒழுங்கு) ஜெகநாதன் தேசிய கொடியை ஏற்றினார்.வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். பள்ளி கொடியை பள்ளி செயலாளர் குணசேகரன் ஏற்றினார். சந்திரசேகரன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

    வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டும், பாரம்பரிய ஒயிலாட்டத்துடன் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார்.

    உறவின் முறை தலைவர் கணபதி, பொருளாளர் ராஜன், செயலாளர் மயில்ராஜன், துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணை செயலாளர் அருஞ்சுனை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமையுரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் வாழ்த்தி பேசினார்.

    நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் காந்திபாய் சுவாடியடியாள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் நாகநாதன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.

    • காரைக்குடி வித்யாகிரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யாகிரி பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் க நடைபெற்றது. விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை மற்றும் என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் ரஜ்னீஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னர். பின்னர் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் முதல்நாள் நடைபெற்ற கே.ஜி. மழலையர் பள்ளி மாணவர்க ளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் காட்வின் சந்தீப், டாக்டர் குமரேசன், டாக்டர் கிரிதர்முத்து மற்றும் பொறி யாளர் கலைமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கே.ஜி. மழலையர் பள்ளி மாண வர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    பின்னர் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஆசிரியை ஜோசபின் நன்றி கூறினார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசின் திருக்கல்யாண மண்டபத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.
    • கோமள மடத்தின் ஸ்ரீ தேசிகந்திரா சுவாமிகளும், தேனாடு சீமை பார் பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வூர் தூனேரி ஹட்டியில் செல்வவிநாயகர் திருக்கோவில் அருகில் அரசின் திருக்கல்யாண மண்டபத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் ஊர் பொதுச் செயலர் விசுவநாதன் வரவேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக கோமள மடத்தின் ஸ்ரீ தேசிகந்திரா சுவாமிகளும், தேனாடு சீமை பார் பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்தர் சமுதாயத்தின் முன்னேற்ற சங்கத்தின் தலைவர், செயலர் மற்றும் பொருளாளர் குயின் சோலை, இட்டக்கல், அவ்வூர், ஹட்டியின் ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
    • தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலிஉள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடு துறை மறைவட்ட அதிபர் பேரருட் தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார் கொடி பவனியை வழிநடத்தினார்.

    வேளாங்கண்ணி திருத்தல பேராலய அதிபர் பேரருட் இருதயராஜ் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்புதிருப்பலி நடை பெற்றது. அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற முதல் நாள் திருவிழா திருப்பலியை புனித மரியாயின் மாசற்ற இருதய சபை கன்னியர்கள், புனித பவுல் தொடக்கப்பள்ளி, புனித பவுல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியினர், பங்கு மக்களோடு இணைந்து சிறப்பித்தனர்.

    இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

    இதில் அருட்தந்தை யர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், மரியாயின் சேனையினர், அன்பிய குழுவினர், பாடகற் குழுவினர், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலிஉள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகி ன்றன.

    வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது.

    டிசம்பர் 3ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவு ள்ளது.

    விழாவிற்கான ஏற்பா டுகளை மயிலாடுதுறை மறை வட்ட அதிபர் பங்குத்தந்தை பேரருட் தார்சிஸ் அடிகளார் தலைமையில் விழாக்கு ழுவினர் மற்றும்பங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு தீர்த்த கலசங்களை கொண்டு வந்தனர்.
    • பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடைபெற்றது

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் ஒன்றியம் , பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில்,பட்டத்தரசியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளது. இக்கோவிலின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று காலை நடுவேலம்பாளையம் பொதுமக்கள் நடுவேலம்பாளையம் பகுதியில் உள்ள ஓம்சக்தி கோவிலில் இருந்து மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு தீர்த்த கலசங்களை கொண்டு வந்தனர்.பின்னர் மாரியம்மன், பட்டத்தரசியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மாரியம்மன், பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்,அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .இதில் நடுவேலம்பாளையம் ,லட்சுமிநகர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் கோவில் முதலாம் ஆண்டு விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் தமிழ் இலக்கிய மன்ற 47-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
    • சுகிசிவம் நடுவராக பங்கேற்று வாழ்க்கை என்பது சுகமா? சுமையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் தமிழ் இலக்கிய மன்ற 47-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இலக்கிய மன்ற தலைவர் செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவிற்கு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் துரைராஜ் தலைமை தாங்கினார்.

    சிவசுப்பிரமணியன், திருமலைச்சாமி, ராமரத்தினசாமி, கணபதி, மதியழகன்,கிருஷ்ணசாமி, சௌந்தரபாண்டியன், கதிரேசன், சுரேஷ், தங்கேஸ்வரன், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கசேட் வரவேற்றார்.ராமச்சந்திரபாண்டியன் ஆண்டறிக்கையினை வாசித்தார். செந்தில்செல்வன் தொகுப்புரை ஆற்றினார். பால்துரை, பொன்.அறிவழகன், அருள்செல்வன், திரைப்பட இயக்குனர் பாரதிகண்ணன், சுப்பிரமணியன், பொன்.கணேசன், ராமசாமி, தங்கசாமி உள்ளிட்டோர் பேசினர்.

    சுகிசிவம் நடுவராக பங்கேற்று வாழ்க்கை என்பது சுகமா? சுமையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. சுகமே என்ற அணியில் விஜயசுந்தரி, கவிதா ஜவகர், லெட்சுமண பெருமாள் ஆகியோரும், சுமையே என்ற அணியில் மலர்விழி, பர்வீன் சுல்தானா, மோகனசுந்தரம் ஆகியோரும் பேசினர். முடிவில் சின்னமணி நன்றி கூறினார்.

    • பாளையம் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மாதா உருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் கிராமத்தில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 119-வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை ஆலய வளாகத்தில் கொடி கம்பத்தில் பாளையம் புனித சூசையப்பர் ஆலய பங்குதந்தை ஜெயராஜ் ஆரோக்கிய மாதா உருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அன்னை வழிகாட்டும் விண்மீன் என்ற தலைப்பில் மறையுரை சிந்தனை நடந்தது. பெருவிழா கொடியேற்றத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் இரவு சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் ஆடம்பர சப்பர பவனி வருகிற 7-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. ஆண்டு பெருவிழா திருப்பலி 8-ந்தேதி காலை 8 மணிக்கு நடைபெற்று பெருவிழா நிறைவு பெறுகிறது."

    • 43ம் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந் தேதி துவங்குகிறது.
    • ஆகஸ்டு 3-ந்தேதி திருக்கல்யாணமும், அன்னதானமும் நடைபெறுகிறது.

    உடுமலை :

    உடுமலை யு.எஸ்.எஸ்., காலனியில் புகழ்பெற்ற ஓம்சக்தி ஸ்ரீ புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 43ம் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந்தேதி துவங்குகிறது.

    அன்று கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வருதல் நடக்கிறது. ஆகஸ்டு 3-ந்தேதி காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. வரும் 4ந் தேதி மறுபூஜை, மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை யு.எஸ்.எஸ்., காலனி பொதுமக்கள், நண்பர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. தூத்துக்குடி பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் பீட்டர் தேவதாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் 13-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவினை போப் கவுன்சில் சேர்மன் ஜான் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். சாயர்புரம் சேகர தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் ஆசி வழங்கினார்.

    கல்லூரி தாளாளர் டி.எஸ்.கே.ராஜரத்தினம் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் அருள்மொழி செல்வி கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. தூத்துக்குடி பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் பீட்டர் தேவதாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்களுக்கு பொருளியல் கற்கும் பொழுது நல்ல வேலை வாய்ப்பினை பெறுவதற்கு அதிக திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான கருத்துக்களை கூறினார்.

    சிறப்பு விருந்தினராக ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெபிதா பங்கேற்று மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மற்றொரு சிறப்பு விருந்தினரான இந்தியன் டென்டல் அசோசியேஷன் தலைவர் டாக்டர் அருண்குமார் மாணவர்கள் விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலையும் செய்து வெற்றியடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    விழாவில் ஜானகி ராஜரத்தினம், பிரியா பிரகாஷ்ராஜ் குமார், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் சாயர்புரம் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் தேவசகாயம், தங்கபாண்டி, சுமித்ரா, ஆலயமணி, அருண் ஆகிய திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜெயக்குமார், சீசன் தியாகராஜன், எமர்சன், இருதயராஜ், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி நிறுவனர் டாக்டர் பிரகாஷ்ராஜ் குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் டாக்டர் அருள்மொழி செல்வி தலைமையில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவ- மாணவிகளும் செய்திருந்தனர்.

    • போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 13-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.

    போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு தொழில் அதிபர் விஜெஸ்குமார், அப்புவிளை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாசன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.

    கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கல்லூரி தமிழ்துறை தலைவர் தணிகை செல்வி நன்றி கூறினார்.

    ×