search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anjali"

    • அஞ்சலி தற்போது நடித்துள்ள வெப் தொடர் 'ஃபால்'.
    • இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.

    'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.


    ஃபால்

    இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபால்' வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் தொடரின் ரீமேக்காகும். இதில், எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    ஃபால்

    இந்த தொடருக்கு அஜேஷ் இசையமைக்க கிஷன் சி செழியன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இத்தொடரை இயக்குவது மட்டுமல்லாமல் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் இயக்குனர் சித்தார்த் ராமசாமி. இந்த தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    ஃபால்

    இந்நிலையில், இந்த தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்ததாக வெளியாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. 'ஃபால்' வெப் தொடர் வருகிற டிசம்பர் 9 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் ராம் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்தில் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.


    ஏழு கடல் ஏழு மலை

    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ஏழு கடல் ஏழு மலை போஸ்டர்

    அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படக்குழு நடிகை அஞ்சலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஞ்சலி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • குருபூஜை விழாவில் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
    • அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காளையார்கோவில்

    மாமன்னர் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நினைவிடத்தில் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.

    அஞ்சலி செலுத்த வருவோர் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கண்காணி க்கப்படுகின்றனர்.

    மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் டூவீலரில் செல்ல அனுமதி இல்லை. வாடகை வாகனத்தில் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானா மதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி.
    • தற்போது இயக்குனர் ராம் இயக்கி வரும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

    தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அஞ்சலி, சில வருடங்களுக்கு முன்பு உடல் எடை அதிகமானதால் அவருக்கு படங்கள் குறைந்தன. தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார். தற்போது இயக்குனர் ராம் இயக்கி வரும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

     

    இந்நிலையில் அஞ்சலி கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். சேலை அணிந்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருபவர் நிவின் பாலி.
    • இவர் தற்போது கற்றது தமிழ் படத்தின் இயக்குனர் ராம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

    2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

     

    இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் இதுவரை பெயரிடப்படாமல் இருந்து வருவதால் படத்தின் தலைப்பு மீது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

    இப்படத்திற்கு ஏழு கடல் ஏழு மலை என்ற பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி.
    • பட வாய்ப்புகளை பிடிக்க கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார்.

    தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி, சில வருடங்களுக்கு முன்பு உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார். ஆனாலும் எதிர்பார்த்த படங்கள் இல்லை.

    அஞ்சலி

    அஞ்சலி

     

    இந்நிலையில் அஞ்சலியின் சொத்து குறித்து தெலுங்கு இணைய தளங்களில் புதிய தகவல் பரவி வருகிறது. 15 ஆண்டுகளாக சினிமாவில் நீடிக்கும் அஞ்சலி நிறைய சொத்து சேர்த்து இருப்பார் என்றே பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து அவர் சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்தின் மதிப்பு வெறும் ரூ.10 கோடிதான் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அஞ்சலி

    அஞ்சலி

     

    ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வாங்கும் அஞ்சலியால் இத்தனை காலம் சினிமாவில் இருந்தும் இவ்வளவுதான் சம்பாதிக்க முடிந்ததா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே சொத்து பிரச்சினையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து அஞ்சலி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் சிவாஜி நினைவு நாளையொட்டி இன்று காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.
    • பூந்தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்ட கோர்ட்டு அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதே போல் மதுரா கோட்ஸ் பாலத்தின் கீழ் உள்ள சிவாஜி சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. புதூர் அரசு போக்குவரத்து கழக டிப்போ அருகில் உள்ள சத்தியமூர்த்தி பவன் வாசக சாலை முன்பு, சிவாஜி படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பூந்தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தமிழில் அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமாடைந்தவர் நடிகை அஞ்சலி.
    • சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறினார்.

    'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

    அஞ்சலி

    அஞ்சலி

    அஞ்சலி நடிப்பில் கடைசியாக வெளியான சைலன்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர்சி15 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் 'மச்சேர்லா நியோஜகவர்கம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த போஸ்டர் ஒன்றை சமூக வலைத்தளத்தில் அஞ்சலி பகிர்ந்துள்ளார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா அணிந்திருந்த கவர்ச்சி உடை போன்று அஞ்சலியின் கெட்டபும் அமைந்திருப்பதால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போஸ்டர் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. 


    ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    தமிழில் ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, இதையடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சமீப காலமாக தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

    அண்மையில் தெலுங்கில் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்ததாக மேலும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    அஞ்சலி

    மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘நயாட்டு’ என்கிற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க உள்ளார். கருணா குமார் இப்படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள பிரியதர்ஷி என்பவர் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளாராம்.
    அஞ்சலி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லிசா’ படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், தனது அடுத்த படத்தை அஞ்சலி கவனமாக தேர்வு செய்து நடிக்கிறாராம்.
    நடிகை அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லிசா’. பேய்க்கதையை மையமாக கொண்டு உருவாகி இருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பெரும்பாலான விமர்சனங்கள் நெகட்டிவாகவே கிடைத்தன. 

    இந்நிலையில் தனக்கு பேய்க்கதை ஒத்து வராது என நினைத்தாரோ என்னவோ, அதிரடியாக ரூட்டை மாற்றியிருக்கிறார் அஞ்சலி. அடுத்ததாக தன்னை மையப்படுத்தும் காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இவர் 2013-ல் மிர்ச்சி சிவா மற்றும் வசுந்தராவை வைத்து ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.



    இதுதவிர, அஞ்சலியின் நடிப்பில் நாடோடிகள் 2, சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படத்தின் புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாகி இருக்கும் நிலையில், படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.
    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் புரமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சார்பில் சத்யமூர்த்தி கைப்பற்றியிருக்கிறார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். லிங்கா, விவேக் பிரசன்னா, சூர்யா விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வன்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளனர். 

    படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கும் நிலையில், படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    நடிகர்கள் அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகி பாபு நடிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘லிசா’ படத்தின் விமர்சனம்.
    சிறுவயதிலேயே அப்பாவை இழந்த நாயகி அஞ்சலி விதவை தாயுடன் வளர்கிறாள். இளம் பெண்ணான அஞ்சலி தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார். 

    இதையடுத்து தாத்தா, பாட்டியை தேடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு செல்கிறார் அஞ்சலி. கூடவே தனது கல்லூரி ஜூனியர் சாம் ஜோன்சையும் அழைத்து செல்கிறார். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தனது தாத்தா, பாட்டி என நினைத்துக் கொள்கிறார் அஞ்சலி.



    அந்த வயதான தம்பதியின் நடவடிக்கைகள் அஞ்சலிக்கு சந்தேகத்தை வரவைக்கிறது. அந்த வீட்டில் ஒரு பேயும் இருக்கிறது. ஒரு நாள் அந்த பேய் அஞ்சலி முன் வந்து பயமுறுத்துகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாத அஞ்சலி, அந்த பேய் குறித்து அறிய நினைக்கிறார். மேலும் வயதான தம்பதியின் பின் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க பார்க்கிறார். இறுதியில் அந்த பேய் என்பதை அஞ்சலி கண்டுபிடித்தாரா? அஞ்சலியின் உண்மையான தாத்தா, பாட்டி என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அஞ்சலி தான் படத்தை தோளில் தாங்கியிருக்கிறார். அஞ்சலி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். அஞ்சலி ஒல்லியான அழகு தேவதையாக ஜொலிக்கிறார். சாம் ஜோன்ஸ் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பயப்படும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு சுற்று வரலாம்.



    வில்லனாக மார்கரந்த் தேஷ்பாண்டே பயமுறுத்தி இருக்கிறார். பாட்டியாக வருபவரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. யோகி பாபுவும், பிரம்மானந்தமும் சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள்.

    அறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத்தின் 3டி முயற்சிக்கு பெரிய பாராட்டு கொடுக்கலாம். முதல் பாதியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் கதை இரண்டாம் பாதியில் ஏமாற்றத்தை தருகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. 3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.



    எதிர்பாராத வேளையில் வரும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. ஆனால், முடியப்போகும் நேரத்தில் மேலும் பிளாஷ் பேக் வருவது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அழுத்தமான கதையும் சுவாரசியமான திரைக்கதையும் அமைத்து இருந்தால் குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் இன்னும் ஈர்த்து இருக்கலாம்.

    பிஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தரம். சந்தோஷ் தயாநிதி இசை ஓரளவிற்கு மிரட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘லிசா’ மிரட்டல் குறைவு.
    ×