search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambedkar statue"

    • சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது.
    • பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மையப் பகுதியில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கர் நினைவு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் ரூ.268 கோடி செலவில், 206 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது.

    சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது.

    பீடம் உட்பட சிலையின் மொத்த உயரம் 206 அடி இருக்கும். வளாகத்தில் 2000 பேர் அமரும் வகையில் மாநாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் தாடே பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்தது.

    அம்பேத்கர் சிலையுடன் நினைவு இல்லம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.268 கோடி செலவிடப்படுகிறது. ஸ்மிருதி வனம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்தில் பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

    மேலும் குடிமராமத்து பணிகள், நினைவு இல்லத்தை அழகுபடுத்துதல், மைதானத்தை பிரதான சாலையுடன் இணைப்பது குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

    வருகிற 31-ந் தேதிக்குள் சிலையின் பாகங்கள் விஜயவாடாவுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க கண்காணிப்பு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.

    • அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் கவுரி சங்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மக்கள் தேசம் கட்சி சார்பில் திருநீலகண்ட ஊரணி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சங்கரன்கோவில்:

    அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் கவுரி சங்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஐயப்பன், தலைமை கழக பேச்சாளர் கணபதி, நிர்வாகிகள் வேலுச்சாமி, தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மக்கள் தேசம் கட்சி சார்பில் திருநீலகண்ட ஊரணி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட தலைவர் முருகன், மாவட்டத் துணை செயலாளர் சங்கர்ஷா, நகர செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் அந்தோணி செல்வம், ஸ்டீபன், சங்கர், ஜோதிடர் குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க சார்பில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
    • தி.மு.க. சார்பில், மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் அ.தி.மு.க சார்பில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் சிவபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் வேலுமணி, நகராட்சி கவுன்சிலர், செண்பகமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செல்வக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில், மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை அமை ப்பாளர் அமலி பிரகாஷ், இலக்கிய அணி செயலாளர் மணி, மாத்தையா உட்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமை யில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மாலை அணிவித்தார். இதில் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், பவுன் மாரியப்பன், முத்து ச்செல்வன், கொம்பையா, செண்பகராஜ், நாகராஜ், குழந்தைவேல் உட்பட பலர் கலந்து கொண்டு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் சார்பாக எஸ்.சி. அணி மாநில துணை தலைவர் மாரிமுத்து தலை மையில் மாலை அணி விக்கபப்ட்டது. இதில் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் நிறுவப்பட்டிருக்கும்.
    • சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர் கும்பகோணத்தில் காவி உடையுடன் கூடிய அம்பேத்கர் சுவரொட்டிகளை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    ஐகோர்ட்டில் வக்கீல்களும், ராஜா அண்ணாமலைபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு இந்து மக்கள் கட்சியினர் காவி சாயம் பூசி விடக்கூடாது என்பதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகள் முன்பு நேற்று இரவில் இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரியார், அம்பேத்கர் சிலைகளை பொறுத்தவரையில் தமிழகத்தில் முக்கிய சந்திப்புகளில் இந்த 2 சிலைகளும் நிறுவப்பட்டிருக்கும். கிராமப்புறங்கள் தொடங்கி நகர பகுதிகள் வரையில் உள்புற சாலைகளிலும் இந்த 2 தலைவர்களுக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சிவகங்கையில் அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நிர்வாகிகள் மருது, சகாயம், பாண்டி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

    சிவகங்கை

    சட்டமேதை அம்பேத்கரின் 68-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன், கவுன்சிலர்கள் அயூப்கான், ராமதாஸ், விஜயகுமார், கார்த்திகேயன், மதியழகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் அருள்ஸ்டீபன், கோபி, அவைத்தலைவர் பாண்டி, கவுன்சிலர்கள் கிருஷ்ணாகுமார், ராபர்ட், நிர்வாகிகள் மோகன், கே.பி.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா, கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், தங்கசாமி, மாவட்ட கவுன்சிலர் சாந்தாராணி, கணேசன் ஆரோக்கியசாமி, ரமேஷ் உட்பட்ட பலர்மாலை அணிவித்தனர்.

    கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நிர்வாகிகள் மருது, சகாயம், பாண்டி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, நகரபொது செயலாளர் பாலமுருகன், சதிஷ், பொருளாளர் கவுதம் உட்பட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இதேபோன்று விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர்.

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

    இதனை அறிந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, போலீசார் மாற்று உடையில் போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்கமாட்டேன், விபூதி, குங்குமம் பூசமாட்டேன் என சென்னை ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உறுதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில், நினைவு தினத்தையொட்டி சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர். இதனால் அம்பேத்கர் மணி மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாண–ரப்பேட்டை சாலையில் பல மாதங்களாக எரியாமல் இருந்த மின்விளக்குகளை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி உத்தரவின் பேரில் இளநிலை பொறியாளர் சுரேஷ் அனைத்து மின்விளக்குகளையும் புதியாக மாற்றியமைத்து எரிய வைத்துள்ளார்.
    • பிறகு மின்விளக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை சாலையில் பல மாதங்களாக எரியாமல் இருந்த மின்விளக்குகளை ெதாகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி உத்தரவின் பேரில் இளநிலை பொறியாளர் சுரேஷ் அனைத்து மின்விளக்குகளையும் புதியாக மாற்றியமைத்து எரிய வைத்துள்ளார்.

    அப்போது உப்பளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புதியதாக மின்விளக்கு அமைத்த போது அங்கு புதர் மண்டி கிடந்ததால் மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கல் இருந்து வந்தது.

    ஆகையால் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தலைமையில் தி.மு.க.வினர் புதுவை நகராட்சி ஊழியர்கள் மூலம் அம்பேத்கர் சிலையை சுற்றி இருந்த செடி, கொடி, மரம் உள்ளிட்ட புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பிறகு மின்விளக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பிறகு அங்குள்ள செயற்கை நீருற்றையும் சீரமைப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளநிலை பொறியாளர் துரைசண்முகம், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் அஷரப், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அம்பேத்கருக்கு ஈரோடு மாவட்டத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    அம்பேத்கருக்கு ஈரோடு மாவட்டத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் அரங்க முதல்வன் வரவேற்றார்.

    நிர்வாகிகள் அக்பர் அலி, வீர துரைசாமி, சதாசிவம், சரவணன், வெற்றிச்செல்வன், பெரிய கலையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத்தின் மண்டல அமைப்புச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பழனிச்சாமி, மனித நேய மக்கள் கட்சியின் சித்திக், தமிழ் நாட்டு மக்கள் இயக்க செல்வம் உள்பட பல்வேறு கட்சி சேர்ந்த பிரதிநிதிகள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். #tamilnews
    குன்றத்தூர் அருகே அனுமதியில்லாமல் வைத்த அம்பேத்கர் சிலையை அகற்றியது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள நூலகம் அருகே காலி இடத்தில் கடந்த 12-ந் தேதி மார்பளவு அம்பேத்கார் சிலை, அதே பகுதியை சேர்ந்த அம்பேத்கார் பொது நல சங்கம் சார்பில் வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து குன்றத்தூர் வருவாய் அதிகாரி இந்திராணி, அம்பேத்கார் சிலையை அகற்ற வேண்டும் என்று அம்பேத்கார் பொது நல மன்ற நிர்வாகிகளிடம் கூறி இருந்தார். ஆனால் அம்பேத்கார் சிலை அகற்றப்படவில்லை.

    இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரி இந்திராணி, பல்லாவரம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவுப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் அதிகாரிகள் திருமுடிவாக்கத்துக்கு வந்தனர்.

    அவர்கள் அம்பேத்கார் சிலையை அகற்றினர். பின்னர் பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்று விட்டனர். அம்பேத்கார் சிலை அகற்றப்பட்டது பற்றி அறிந்ததும் அம்பேத்கார் பொது நல மன்றத்தினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    உதவி கமி‌ஷனர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews
    ×