search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alangulam student molested"

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவனை போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மாணவன் பிளஸ்-2 படித்து வந்தான். அதே பள்ளியில் ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    பள்ளிக்கூடத்துக்கு வரும் போதும், மாலை வேளைகளிலும் அந்த மாணவனும், மாணவியும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்தனர். இதில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. நேற்று முன்தினம் மாணவி-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது.

    10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு காலையில் தேர்வு முடிந்ததும், பிற்பகல் பள்ளிக்கூடம் முடிந்தது. அப்போது பிளஸ்-2 மாணவன் 10-ம் வகுப்பு மாணவியை தனது வீட்டுக்கு வா என்று அழைத்துசென்றான்.

    மாணவன் வீட்டில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டதால், வீட்டில் வேறு யாரும் இல்லை. இது காதலர்களுக்கு வசதியாகி விட்டது. தனிமையில் இருந்த காதலர்கள் கட்டிப்பிடித்து காமலீலைகளில் புகுந்தனர்.

    அந்த மாணவி, மாணவனின் வீட்டுக்கு செல்வதை மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்து உள்ளார். அவர்கள் நீண்ட நேரம் வெளியே வராததால், அவர் மாணவன் வீட்டில் வேறு யாரும் உள்ளனரா என்று அறிய கதவை தட்டினார்.

    அப்போது வீட்டில் இருந்து மாணவி அழுது கொண்டே வெளியே ஓடி வந்துள்ளார். மேலும் மாணவன் தன்னை வலுக்கட்டாயமாக சில்மி‌ஷம் செய்ததையும் கூறியுள்ளார்.

    இது குறித்து அந்த உறவினர், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். மாணவியின் பெற்றோர் கேரளாவில் வேலை செய்து வருவதால், மாணவியை பராமரித்து வந்த பெரியப்பா மற்றும் உறவினர்கள், மாணவியை அழைத்துக் கொண்டு ஆலங்குளம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

    மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து 12-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×