என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Adolescent Sacrifice"
- கந்தம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி, நிர்மல்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா. நல்லூர் அருகே பீச்சப்பாளையம் அருந்ததியர் காலணியைச் சேர்ந்தவர் நல்ல முத்து (வயது 55). இவரது மகன் நிர்மல் குமார்(27).
இவர் நேற்று மாலை கந்தம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பொருட்களை வாங்கிக் கொண்டு பரமத்தி-திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். கந்தம்பா ளையத்தில் உள்ள மில் அருகே சென்று கொண்டிருந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி, நிர்மல்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த நிர்மல் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நிர்மல்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நல்லமுத்து நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குப்பம் பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணகுமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய சரவணக்கு மாரை தேடி வருகின்றனர்.
- ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ராஜ்குமார் வேலை செய்து வருகிறார்.
- சித்தா காலேஜ் அருகே சென்று கொண்டி ருந்தபோது சாலையில் இருந்த மண்ணில் சிக்கி 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி கார் காடு பகுதி சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஈரோட்டில் உள்ள ஒரு தனி யார் நிறுவனத்தில் ராஜ்கு மார் வேலை செய்து வரு கிறார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8.30 மணி அளவில் ராஜ்குமார் ஒரு மோட்டார் சைக்கிளில் இளம்பிள்ளை அருகே உள்ள எருமாத்தனூர் பகுதியைச் சேர்ந்த வெங்க டாசல மகன் தமிழ்ச்செல்வன் (23),பெரு மாம்பட்டி ஏரிக்காடு பகுதி சேர்ந்த பரமசிவம் மகன் வைத்தீஸ்வரன்(18) ஆகி யோருடன் சித்தர் கோயில் மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
தனியார் சித்தா காலேஜ் அருகே சென்று கொண்டி ருந்தபோது சாலையில் இருந்த மண்ணில் சிக்கி 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ்கு மார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் தமிழ்ச்செல்வன் மற்றும் வைத்தீஸ்வரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து புகாரின் பேரில் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்தார்.
- கந்தம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது விஜயராகவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் அரிசி பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் விஜயராகவன் (வயது 29). டிரைவரான இவர், நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்தார்.
கந்தம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது விஜயராகவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த விஜயராகவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொண்டலாம்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மஸ்தான் (42 ) என்பவரும் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்றார்.
- மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது நாமக்கல்லில் இருந்த வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர்கள் மீது மோதியது.
சேலம்:
சேலம் அன்னதா னப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யூசுப்கான். இவரது மகன் அப்துல் கான் என்ற நிசார் (வயது 35). இவரும் இவரது நண்பர் லைன் மேடு பகுதியை சேர்ந்த மஸ்தான் (42 ) என்பவரும் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை நிசார் ஒட்டினார். பின்னால் மஸ்தான் அமர்ந்து இருந்தார்.
பின்னர் அவர்கள் வீடு திரும்பினார். அப்போது சன்னியாசிகுண்டு அருகே மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது நாமக்கல்லில் இருந்த வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அப்துல் கான் என்ற நிசார் இன்று காலை பரிதாபமாக இருந்தார். மஸ்தானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- பைக்குடன் தூக்கி வீசப்பட்டு பிரபு பலத்த காயமடைந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அணிச்சம்பாளையத்தை சேர்ந்த வர் நடராஜன். இவரது மகன் பிரபு (வயது 36). இவர் நேற்று பரமத்திவேலூர் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அணிச்சம் பாளையம் பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, மதுரையில் இருந்து பெங்களூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று பிரபுவின் மோட்டார் பைக் மீது மோதியது.
இதில் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு பிரபு பலத்த காயமடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், பிரபுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பரமத்தி வேலூர் போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாம்பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.
- அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டும் வயிற்று வலி தீரவில்லை.
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம எருமப்பட்டி அருகே உள்ள சிங்களம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் மகாமுனி (வயது 44). மாம்பழ வியாபாரி. இவரின் சொந்த ஊர் கரூர் மாவட்டம் குளித்தலை மணத்தட்டை ஆகும். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரின் இளைய மகன் சந்தோஷ் (18) தந்தையுடன் மாம்பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சந்தோஷ் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டும் வயிற்று வலி தீரவில்லை. இந்த நிலையில் சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவரது தந்தை மகாமுனி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சந்தோஷ் வீட்டில் இருந்த மாமரத்திற்கு அடிக்கும் மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சந்தோஷை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்