search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress"

    • நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர்.
    • ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ் திரையுலகம் சார்பில் திரை உலகில் உள்ள அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் 100 என்கிற விழாவை இன்று மாலை நடத்துகிறது.

    கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் இந்த விழா தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.


    கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் திரை உலகில் அவரது பங்களிப்பு பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய தொகுப்பு விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவரது வசனங்கள் அதன் மூலமாக பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தொடர்பாகவும் கலைஞர் 100 விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகைகள் ரம்யா பாண்டி யன், இனியா, யாஷிகா ஆனந்த், தேஜஸ்ஸ்ரீ மற்றும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


    கலைஞர் 100 விழாவையொட்டி இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அவர்களும் இன்று மாலை நடை பெறும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் களை கட்டி உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் திரை உலகினர் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக திரள்வதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • நடிகை சமந்தா பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.


    சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகை சமந்தா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது, இவர் ' ட்ரலாலா மூவி பிக்சர்ஸ் ' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சமந்தா, "ட்ரலாலா பிக்சர்ஸ் புதிய தலைமுறை யோசனைகளைத் திரையிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அர்த்தமுள்ள, துல்லியமான மற்றும் உலகளாவிய கதைகளைச் சொல்ல இது ஒரு தளமாகும் " எனக் குறிப்பிட்டு உள்ளார்.


    மேலும், தான் சிறுவயதில் கேட்ட 'பிரவுன் கேர்ள் இன் தி ரிங் நவ்' என்ற ஆங்கிலப் பாடலில் உள்ள ட்ரலாலா என்ற வார்த்தையில் இருந்து தான் இந்தப் பெயர் வந்ததாக சமந்தா விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமந்தா, எம் டிவியின் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகை ஷீலா ராஜ்குமார் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் பல நாடகங்களில் நடித்துள்ளார்.


    ஷீலா, இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஆறாது சினம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், 'டூ லெட்', 'திரெளபதி', 'மண்டேலா', 'நூடுல்ஸ்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்தில் வெளியான 'கும்பளங்கி நைட்ஸ்' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷீலா ராஜ்குமார் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.


    தம்பி சோழன் - ஷீலா ராஜ்குமார்

    இந்நிலையில், ஷீலா ராஜ்குமார் தனது திருமண உறவியில் இருந்து வெளியேறியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், "திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்" என்று தனது கணவரின் கணக்கை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். எதனால் ஷீலா திருமண உறவில் இருந்து வெளியேறினார் என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.


    • சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர்.
    • திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர்.

    நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு எதிராக பலர் கண்டன குரல் எழுப்பினர்.

    இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.


    இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார்.

    இதனை தொடர்ந்து, திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரிஷா, "தவறு செய்பவன் மனிதன். அதை மன்னிப்பவன் தெய்வம்" என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.


    இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.

    இதையடுத்து போலீசாரின் கடிதத்திற்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார். அதில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

    சமூக அக்கறை கொண்ட பிரபல இயக்குனர் தன் ஒரு சில படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாராம். இவரின் படங்கள் பல விருதுகளையும் குவித்ததாம். இவ்வாறு திரையுலகில் புகழை தன் வசம் கொண்டுள்ள இயக்குனர் தன் படத்தில் நடிக்க வந்த நடிகையை வலுக்கட்டாயமாக படுக்கையறைக்கு அழைத்தாராம்.

    நடிகை மறுத்தும் வந்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாராம். இதனால் பயந்து போன நடிகை படப்பிடிப்புக்கு வந்த ஒரே வாரத்தில் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகை இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை என்றும் கூறிவிட்டாராம்.

    சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை ஒரு சில படங்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினாராம். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறாராம். இதனால் ரசிகர்கள் பலர் நடிகையிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அது சர்ச்சையாகியும் உள்ளதாம்.

    இப்படி பரபரப்பாக சுற்றும் நடிகை ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றாராம். அங்கு இயக்குனர் நடிகையை பார்த்ததும் படுக்கையறைக்கு அழைக்கவே பயந்து போன நடிகை விட்டா போதும் சாமி என்று அங்கிருந்து தலைத்தெறிக்க ஓடிவிட்டாராம். 

    பிரபல இயக்குனர் முன்னணி நடிகரின் படத்தை இயக்கி வந்தாராம். இந்த படத்தில் கவர்ச்சி நடிகை கதாநாயகியாக கமிட்டானாராம். படப்பிடிப்புக்கு நடுவே கதாநாயகிக்கு ரூட் விட்ட இயக்குனர் அவர் மீது ஆசை கொண்டாராம். ஆனால் அதை நேராக சொல்ல தைரியம் இல்லாமல் தன் செயல்களில் காட்டி வந்தாராம்.

    ஒரு நாள் இயக்குனரும், கதாநாயகியும் பட விழாவில் கலந்து கொண்டிருக்கும்போது அனைவருக்கும் முன்னாள் இயக்குனர், கதாநாயகிக்கு பசக் என்று முத்தம் கொடுத்துவிட்டாராம். இதனால் நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாராம்.

    தமிழ் திரையுலகின் இளம் நடிகை பட வாய்ப்பு தேடி அலைந்தாராம். அப்போது தயாரிப்பாளர் ஒருவரை அணுகிய நடிகைக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அந்த தயாரிப்பாளர் ஒரு நாள் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கண்டீசன் போட்டாராம். இதை கேட்ட நடிகை எதுனாலும் என் மேனேஜரிடம் கூறுங்கள் என்று தவிர்த்துவிட்டாராம். ஆனால், அந்த தயாரிப்பாளர் தொடர்ந்து நடிகையை தொல்லை செய்யவே நடிகை அந்த படத்தை வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

    பிரபல நடிகர் ஒருவர் என்னதான் தன்னை வெளியில் நல்லவராக காட்டிக் கொண்டாலும் தன்னுடன் படத்தில் நடிக்கும் நடிகைகளை தனக்கு இரையாக்க வேண்டும் என துடித்து வந்தாராம். அம்மா- மகள் என இருவரையும் அடைந்துவிட வேண்டும் என நினைத்து கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தாராம். அவரது ஆசைக்கு ஓகே சொல்லவில்லை என்றால் அவர்களை தயாரிப்பாளர்களிடம் சொல்லி படத்தில் இருந்து தூக்கிவிட்டு அடுத்த ஹீரோயினை கரெக்ட் செய்ய ஆரம்பித்துவிடுவாராம்.

    திரைத்துறையில் பிரபலமாக வேண்டுமே என்று நினைக்கும் நடிகைகள் என்ன செய்வது எல்லாம் விதி என்று தலையில் அடித்துக் கொண்டு நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருகிறார்களாம்.

    ஒரே பாட்டில் இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடித்த பிரபல நடிகைக்கு அதற்கு பிறகு தொடர்ந்து அந்தமாதிரி பாடல்களுக்கு நடனமாட வாய்ப்புகள் குவிந்ததாம். இதனை மறுத்து வந்த நடிகையிடம் இந்த மாதிரி பாடல்களுக்கு நடனமாடினால் தான் மக்கள் மத்தியில் கொஞ்சமாவது நம் முகம் மறையாமல் இருக்கும் என உறவினர்கள் அறிவுரை கூறவே நடிகையும் ஒப்புக்கொண்டு அந்த மாதிரியான பாடல்களுக்கு நடனமாடி வருகிறாராம்.

    ஒரே படத்தில் நடித்து பிரபலமான நடிகையை தங்கள் படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து வந்தார்களாம். ஆனால், நடிகையோ குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளமாட்டேன், புரொமோஷன்களில் கலந்து கொள்ளமாட்டேன் என பல கண்டீசன்கள் போட்டாராம்.

    படம் ஹிட்டாக வேண்டுமே என்ற ஆசையில் இயக்குனர்களும் ஓகே சொன்னார்களாம். இப்படி கொடிகட்டி பறந்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு யாருக்குதான் மார்கெட் இருந்தது என்று நினைத்த இயக்குனர்கள் இப்போது நடிகையை ஓரம் கட்டி வருகிறார்களாம்.

    நடிகை ஒருவர் குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்தாராம். நடிகை அழகில் மயங்கிய நடிகர்கள் பலர் நடிகைக்கு வலை விரித்தார்களாம். ஆனால், நடிகையோ யாரிடமும் சிக்காமல் தன் வேலையை மட்டும் பார்த்து வந்தாராம். இப்படி இருந்த நடிகை திடீரென தூர தேசத்தில் இருப்பவர் ஒருவரை காதலிக்கிறேன் என்றதும் வலை வீசிய நடிகர்களுக்கு எல்லாம் இதயம் நொறுங்கிவிட்டதாம்.

    தன் காதலனுடன் ஊர் ஊராக சுற்றுப்பயணம் சென்ற நடிகை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாராம். குழந்தை பிறந்ததும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தன் பழைய காதலனை விட்டு விட்டு புதிய காதலனை தேடிக்கொண்டாராம். இப்போது அந்த காதலனுடன் தேசம் தேசமாக சுற்றி வருகிறாராம்.

    ×