search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actress roja"

    • செல்வா வித்தியாசமானவர். அவர் பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். கடவுள் மறுப்பாளர் கிடையாது. அண்ணா சொன்னது போல் ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று அடிக்கடி பேசுவார்.
    • அரசியலில் இரு வேறு துருவங்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இவர்களில் யாரைத்தான் கூப்பிடுவது என்ற பிரச்சினை மிகப் பெரிய விவாதமாக எங்கள் குடும்பத்திற்குள் எழுந்தது.

    காதலுக்காக மிக நீண்ட காலம் உறுதியாக இருந்தது நானும், என் கணவர் செல்வா மட்டுமாகத்தான் இருக்கும். 12 ஆண்டுகள் என்பது எவ்வளவு நீண்ட காலம். இளம் வயதில் காதலித்து கல்யாணத்திற்காக இத்தனை ஆண்டு காலம் காத்திருப்பது ஆச்சரியமானது தான். ஆனால் நாங்கள் எங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். எனவே ஆண்டுகள் நகர்ந்தது நாட்களாகத்தான் எங்களுக்கு தெரிந்தது. ஆனாலும் எத்தனை ஆண்டுகள் இப்படியே இருப்பது. சீக்கிரம் நாமும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் அவ்வப்போது வந்தாலும் அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தான் எங்கள் இரு வீட்டு பெற்றோரும் எங்களை திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள்.

    என் அம்மாவும், செல்வாவின் அம்மாவும் மிகவும் நெருங்கிவிட்டார்கள். அதேபோல் என் அண்ணன்களும், அவரது உறவினர்களும் நெருங்கிய நட்புடன் இருந்தார்கள். அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு நாங்கள் செல்வது, எங்கள் வீட்டுக்கு அவர்கள் வருவது என்று எங்கள் குடும்ப உறவும் பிரிக்க முடியாத உறவுகளாகி போனது. நான் படப்பிடிப்புக்கு செல்லும் போது எனக்கு துணையாக என் அம்மா வரமுடியவில்லை என்றால் செல்வாவின் அம்மா தான் வருவார். அதே போல் அவரது சகோதரிகளும் வருவது உண்டு.

    இப்படியே எங்களை பார்த்துக் கொண்டு இருந்த இரு குடும்பத்தினரும் இவர்களுக்கு சீக்கிரமே ஒரு கால்கட்டை போட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதனால் தான் அடிக்கடி கல்யாணப் பேச்சை எடுத்தார்கள். எங்களுக்கு மட்டும் ஆசை இல்லாமலா இருந்தது? நேரம் கைகூடவில்லையே?

    இந்த சூழ்நிலையில் எனது 100-வது படம் பொட்டு அம்மன் ஹிட் படமாக அமைந்தது. பொதுவாக திரையுலகில் ஹீரோ 100 படங்கள் நடித்துவிட்டால் அதை பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். ஆனால் ஹீரோயின் நடித்து இருந்தால் பிரபலமாக பேசப்படாது. ஆனால் செல்வாவுக்கு ஒரு ஆசை நான் 100-வது படம் நடித்து முடித்ததை மிகப்பெரிய வெற்றி விழாவாக கொண்டாடுவதற்கு முடிவு செய்தார். மிகவும் சிரமப்பட்டு அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். விழாவுக்கு இயக்குனர் சிகரம் பாரதிராஜா தலைமை தாங்கினார். விழா தொடங்கி பிரமாண்டமாக சென்று கொண்டு இருந்தது.

    பாரதிராஜா பேசத்தொடங்கியதும் எங்களை பற்றியும், எங்களுக்குள் மலர்ந்து மணம் வீசிக்கொண்டு இருந்த காதலை பற்றியும் மிகவும் பெருமையாக பேசினார். பேசியதோடு மட்டும் அவர் நிறுத்தவில்லை. எத்தனை காலம் தான் நீங்கள் இப்படியே இருப்பீர்கள் என்று கேட்டபடி எங்கள் இருவரையும் மேடையில் நிற்க வைத்து ஒரு மஞ்சள் துணியால் இருவரது கைகளையும் கட்டி விட்டு திருமண பந்தத்திற்கு நான் முடிச்சு போட்டு சேர்த்து வைத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

    அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சீக்கிரம் திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று இரு குடும்பத்தினரும் மும்முரமாக இறங்கினார்கள்.

    செல்வா வித்தியாசமானவர். அவர் பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். கடவுள் மறுப்பாளர் கிடையாது. அண்ணா சொன்னது போல் ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று அடிக்கடி பேசுவார். நமக்கும் மேலாக ஒரு சக்தி இருக்கிறது. அது கடவுள் சக்தியாக இருக்கலாம். அதற்கு ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பெயரை சொல்லி வழிபடுகிறோம். எனவே அந்த சாமியை கும்பிட வேண்டும். இந்த சாமி கும்பிட வேண்டும், அந்த கோவிலுக்கு போக வேண்டும், இந்த கோவிலுக்கு போக வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு பிடிக்காது. வீட்டில் சாமி கும்பிடுவதோடு சரி. ஆனால் நான் நேர்மாறாக இருந்தேன். எனக்கு கடவுள் நம்பிக்கை மிக அதிகம். எல்லா கோவில்களுக்கும் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவேன். எப்போதும் விரதங்கள் விசேஷங்கள் என்று வந்தால் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு சென்று வழிபடுவேன். இதனால் நானும் என்னைப்போல் அவரையும் எல்லா இடத்திற்கும் அழைத்து செல்ல தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது அவரும் என்னைப்போலவே மாறிவிட்டார்.

    எங்கள் குடும்பங்களில் கல்யாண பேச்சு எழுந்ததும் நாங்களும் இத்தனை ஆண்டுகள் காதல் பறவைகளாக சுற்றியது போதும். இனி கணவன், மனைவியாக வாழத்தொடங்குவோம் என்று முடிவெடுத்தோம். நாங்களும் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டதால் இரண்டு குடும்பங்களிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.

    திருமணத்தை எங்கே வைத்து நடத்துவது என்று கேள்வி வந்தது. எனக்கு திருப்பதி பெருமாள் என்றால் உயிர். எனவே திருப்பதியில் வைத்து தான்திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றேன். எனது ஆசைக்கு எல்லோரும் ஒத்துக்கொண்டா ர்கள். இதையடுத்து திருமணம் நடத்துவதற்காக திருச்சானூரில் மண்டபம் பார்த்தோம். அதில் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். மண்டபத்தின் பெயரும் ஆர்.கே. மண்டபம். திருப்பதியில் திருமணத்தை முடித்து விட்டு சென்னையில் வரவேற்பு விழா நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

    திருமணத்திற்கு நாள் குறித்தாயிற்று. யார் தலைமையில் திருமணத்தை நடத்துவது. சென்னையில் யார் தலைமையில் வரவேற்பு விழா நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது நான் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்ததால் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்க சம்மதித்தார்.

    அடுத்து ஒரு முக்கியமான கேள்வி வந்தது. சென்னையில் வரவேற்பை யார் தலைமையில் நடத்துவது என்பது தான் அது. செல்வா, கருணாநிதி தலைமையில் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆனால் எனக்கோ ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். அவரை நேரில் சந்தித்தது கிடையாது. ஆனாலும் அவரது ஆளுமை, தைரியம், துணிச்சல் எல்லாவற்றையும் பார்த்து வியந்து போய் இருந்தேன். எனவே எப்படியாவது ஜெயலலிதா தலைமையில் வரவேற்பு விழாவை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    அரசியலில் இரு வேறு துருவங்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இவர்களில் யாரைத்தான் கூப்பிடுவது என்ற பிரச்சினை மிகப் பெரிய விவாதமாக எங்கள் குடும்பத்திற்குள் எழுந்தது. அதனாலேயே திருமணம் செய்வதற்கான நாட்களும் தள்ளி போனது. கடைசியில் யாரைத் தான் அழைத்தோம், யார் தலைமையில் வரவேற்பு விழா நடந்தது என்பது பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்...

    (தொடரும்)

    ttk200@gmail.com

    • மாநிலம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மலிவு விலை வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    • நிந்திரா மண்டலத்தில் 26 பேருக்கு புதிதாக கட்டப்பட்ட ஜெகன்னா காலனி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    நகரி:

    ஆந்திராவில் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒய்எஸ்ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேச அரசு மாநிலம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மலிவு விலை வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வீடுகள் கட்டும் பணி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நகரி தொகுதியின் நிந்திரா மண்டலத்தில் உள்ள ஆரூரு எஸ்டி காலனியில் கட்டப்பட்ட ஜெகன்னா காலனி வீடுகளை அமைச்சர் ஆர்.கே.ரோஜா திறந்து வைத்தார். அவருடன் சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    நிந்திரா மண்டலத்தில் உள்ள அரூர் பஞ்சாயத்து எஸ்டி காலனியை சேர்ந்த 26 பேருக்கு ரூ.46.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஜெகன்னா காலனி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.கே.ரோஜா பேசுகையில், 'மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது தன் பொறுப்பு என உணர்ந்த நமது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இன்று பெண்களின் கனவை நிறைவேற்றி வருகிறார். பெண் குழந்தைகளுக்கு கல்வி, வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்துகிறார். வீடுகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெறும் இடமெல்லாம் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது' என்றார்.

    ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் லஞ்சம் கொடுக்காமல் வீடுகள் கிடைப்பது மட்டுமின்றி, தங்கள் பகுதிகளின் வளர்ச்சியிலும், மக்கள் பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் ரோஜா குறிப்பிட்டார். 

    என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் நான் போட்டியாக நினைப்பது சந்திரபாபுநாயுடு மற்றும் அவரது மகன் லோகே‌‌ஷ் ஆகியோரை தான் என நடிகை ரோஜா கூறியுள்ளார். #Roja #ChandrababuNaidu
    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் வந்து அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பின்னர் நிருபர்களிடம் நடிகை ரோஜா கூறுகையில், ‘என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் நான் போட்டியாக நினைப்பது சந்திரபாபுநாயுடு மற்றும் அவரது மகன் லோகே‌‌ஷ் ஆகியோரை தான்.



    10 ஆண்டுகள் சந்திரபாபுநாயுடுவை ஒரு சகோதரனாக நினைத்து தெலுங்குதேசம் கட்சிக்காக உழைத்தேன். அவர் 2 முறை நகரி, சந்திரகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். ஆனால் தனது கட்சிக்காரர்களை கொண்டே அவர் என்னை தோற்கடித்தார். செய்யாத குற்றத்துக்காக என்னை சட்டமன்றத்தில் இருந்து ஒரு வருடம் இடைநீக்கம் செய்தார்கள். ஜெகன்மோகன் ரெட்டியை முதல்-மந்திரியாக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்’ என்று தெரிவித்தார். #Roja #ChandrababuNaidu
    ஆந்திர சட்டசபை தேர்தலில் ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார். #ParliamentElection #Roja
    அமராவதி:

    பாராளுமன்ற தேர்தலுடன், 175 இடங்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    அடுத்த மாதம் 11-ந் தேதி நடக்க உள்ள இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளார்.

    அதே நேரத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் போராடி வருகிறார்.

    இந்தநிலையில் 175 இடங்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டம் இடுபுலபயாவில் நேற்று வெளியிட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், “வேட்பாளர் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 41 இடங்களும், சிறுபான்மையினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து சமூகத்தினருக்கும் ‘சீட்’ வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகள், பொதுமக்கள் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது” என கூறினார்.



    வேட்பாளர் பட்டியலின்படி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி கடப்பாவில் உள்ள புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு போட்டியிடுகிறார்.

    முதல்-மந்திரி என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக குப்பம் தொகுதியில் கே.சந்திரமவுலி என்பவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

    நடப்பு சட்டசபையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவின் மருமகன் தக்குபட்டி வெங்கடேஸ்வரராவ், புர்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு (தெலுங்குதேசம்) எதிராக இந்துப்பூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கே. இக்பால் அகமது போட்டியிடுகிறார்.

    தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவிய தலைவர்கள் சிலருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 2 பேருக்கு மட்டும் இப்போதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 23 தொகுதிகளுக்கும் புதுமுகங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லூர் தொகுதி எம்.பி. மேகபதி ராஜமோகன் ரெட்டி, ஓங்கோல் தொகுதி எம்.பி. ஒய்.வி. சுப்பா ரெட்டி ஆகிய இருவருக்கும் மீண்டும் களம் காண வாய்ப்பு தரப்படவில்லை. #ParliamentElection #Roja

    ×