search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Account Observer"

    • திவாகர் சர்க்கரை ஆலை ஒன்றில் கணக்கு பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பெண்ணை வளம் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர் (வயது 26) இவர் திருக்கோவிலூரில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் கணக்கு பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் திவாகரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் எங்கு தேடியும் திவாகர் கிடைக்கவில்லை. இதுகுறித்து திவாகரின் தந்தை ஏழுமலை திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்த. புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து திவாகர் என்ன ஆனார்? எங்கு சென்றார்? யார் மூலமாக கடத்தப்பட்டாரா? என்பது குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×