search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "absconding"

    • 100 நாள் வேலை செய்து ெகாண்டி ருந்த இந்திராணியை சந்தித்து, எனது வீட்டிற்கு வந்து கடன் தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
    • வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி (வயது 72). அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கர் (26) இந்திராணியிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். சேலத்தில் குடும்பத்துடன் தங்கி தச்சு வேலை செய்து வந்த சிவசங்கர் கடந்த 19-ந் தேதி மாரங்கியூர் வந்தார். அப்போது 100 நாள் வேலை செய்து ெகாண்டி ருந்த இந்திராணியை சந்தித்து, எனது வீட்டிற்கு வந்து கடன் தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பணத்தை திரும்ப பெற சென்ற இந்திராணியை கொலை செய்து, அவரிடமிருந்த நகைகளை பறித்துகொண்டு வீட்டிலேயே புதைத்துவிட்டு சிவசங்கர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

    இது தொடர்பாக சிவசங்கரின் தாயார் குப்புவிடம் (45) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் எனது மகன் இந்திராணியை வீட்டிற்கு அழைத்து அவரை கொன்று நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே புதைத்து விட்டான். 3 பவுன் நகையை விற்று விட்டு இங்கிருந்த கடனை அடைத்து விட்டு, மீதமுள்ள நகையை எடுத்துக் கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்று விட்டான். அதன் பிறகு வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசார் குப்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து சிவசங்கரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த சிவசங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே நெடுமானூர் பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தினர். அப்போது அவர்கள், தாங்கள் வைத்திருந்த கஞ்சாவை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை பெற்ற கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
    • தனது சொந்த கிராமத்துக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே அவலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது (42 ). இவர் கடந்த 2008 -ம் ஆண்டு சென்னை கொலை குற்ற வழக்கில் ஈடுபட்டு பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் இருந்தவர் 18/5/2011 முதல் 22/5/2011 வரை 5 நாள் பரோலில் வந்து அதிலிருந்து 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவுபடி செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், விஸ்வநாதன் மற்றும் காவலர்கள் ஞானம்,மணி ஆகியோர்கள் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று வெங்கடேசன் தனது சொந்த கிராமத்துக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இவர் மீது அவலூ ர்பேட்டை போலீஸ் நிலையத்தில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் இருந்து பரோலில் வந்து மீண்டும் சிறைக்கு ஆஜராகாமல் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து தேடப்பட்ட குற்றவாளியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
    • போலீசார் விரைந்து சென்று இருவரை கைது செய்தனர்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை முன்பு கடந்த 18-ம் தேதி பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் பட்டதாரி வாலிபர் பிரேம் (31) என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் இறந்துபோன பிரேம் அண்ணன் முத்து (46) நடுக்காவேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சப்இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் பிரேம் கொலை வழக்கில் பள்ளியக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்த ராமசந்திரன் மகன் மணிகண்டன் (33), பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பவர்சிங் மகன் விஷ்வபிரசாத் (23), முருகையன் மகன் புல்லாண்டு (என்ற) பிரகாஷ் (34), பள்ளியக்ரஹாரம் பெரியத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சூர்யா (25) ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் திருவை யாறு அடுத்த தென்பெரம்பூர் வெண்ணாற்றங்கரையில் கொலை வழக்கில் தொட ர்புடைய குற்றவாளிகளான விஷ்வபிரசாத் (23), சூர்யா (25) ஆகிய இருவரும் பதுங்கி இருப்பதாக நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரம ணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த விஷ்வபிரசாத், சூர்யா ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர்.

    • அமரன், ஆறுமுகம், ரவி ஆகிய 3 பேர் சாராயம் விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஆறுமுகம் தப்பித்து ஓடி விட்டார். அமரன், ரவி ஆகிய 2 பேரை கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் அமரன், ஆறுமுகம், ரவி ஆகிய 3 பேர் சாராயம் விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஆய்வு செய்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அமரன் (வயது 29). ரவி (32), ஆறுமுகம் (42) ஆகியோரை பிடித்தனர். இதில் ஆறுமுகம் தப்பித்து ஓடி விட்டார். அமரன், ரவி ஆகிய 2 பேரை கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர். இவர்களிலிருந்து100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 11-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் தலைமறைவு.
    • இந்த நிலையில் தனிப்படை போலீசார் பென்னாகரத்தில் 2 பேரையும் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் தலைமறைவான பச்சபட்டியைச் சேர்ந்த திருப்பதி (வயது 37), செந்தில்குமார் (34) ஆகிய இருவரையும் கிச்சிபாளையம் போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வைத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வெளிநாட்டு மாப்பிள்ளை எனக்கூறி சில மாதங்கள் சுகம் அனுபவித்துவிட்டு விவாகரத்து செய்யும் கணவர்களை நாடு கடத்தி இந்தியாவில் வழக்கு தொடர தனிச்சட்டம் தேவை என பாதிக்கப்பட்ட பெண்கள் வலியுறுத்துகின்றனர். #Agonisedwomen #NRIhusbands
    புதுடெல்லி:

    எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய பிரபல நாவல்களில் ஒன்று ‘47 நாட்கள்’. பிரான்ஸ் நாட்டில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு தாம்பத்தியம் நடத்திவரும் கதாநாயகன், இந்தியாவுக்கு வந்து ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணான விஷாலியை திருமணம் செய்துகொண்டு பிரான்சுக்கு அழைத்து செல்கிறான்.

    இரண்டாவதாக கட்டிய மனைவியான இந்தியப்பெண்ணை தனது சகோதரியாக நடிக்குமாறு வலியுறுத்தும் அவன், அவள் கண்ணெதிரே தனது முதல் மனைவியுடன் கும்மாளம் அடிக்கிறான். சிகரெட்டால் சுட்டும், ஸ்டவ் அடுப்பில் வைத்து உள்ளங்கையை எரித்தும் விஷாலியை கடும் சித்திரவதைக்கும் உள்ளாக்குகிறான்.

    அவளை பைத்தியமாக மாற்றும் அளவுக்கு கொடுமைப்படுத்தும் அந்த வஞ்சகனிடம் இருந்து கதாநாயகி எப்படி தப்பிக்கிறார்? அவர் தனது தாய்நாடான இந்தியாவுக்கு திரும்பிவர முடிந்ததா, இல்லையா? என்பதுதான் ‘47 நாட்கள்’ நாவலின் கதைக்களம். திருமணமான 47 நாட்களில் கதாநாயகி சந்தித்த அனுபவங்களின் கோர்வைதான் கதையின் முழுப் பயணமும்.

    இந்த நாவலை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இதே பெயரில் திரைப்படமாக எடுத்திருந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்தப்படம் ‘வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம்’ என்னும் வறட்டு கவுரவத்தை சற்று அசைத்துப் பார்த்தது எனலாம்.



    இந்தப் படத்தின் கதாநாயகியாக ஜெயப்பிரதாவும், கொடுமைக்கார கணவனாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் தங்களது கதாபாத்திரங்களை கனக்கச்சிதமாக செய்திருந்தனர்.

    எனினும், எல்லோருக்கும் இதேபோல் ஆகி விடுமா? இப்படி எல்லாம் நடக்குமா? என்னும் இருதரப்பு வாதத்துக்கு இந்தப்படம் திரி கொளுத்திப் போட்டது.

    ஆனால், 40 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த விவாதத்தின் தீர்ப்பு 50-50 ஆக உள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்யப்படும் இதுபோன்ற திருமணங்களில் சரிபாதி அளவுக்கு திருப்திகரமாக அமையாமல், ஏதோ ஒரு வகையில் விரக்தியிலும், சோகத்திலும், தோல்வியிலும் முடிவதாகதான் கருத வேண்டியுள்ளது.

    இந்நிலையில், வெளிநாட்டு மாப்பிள்ளை எனக்கூறி திருமணம் செய்து அழைத்துச் சென்று தங்களிடம் சில மாதங்கள் சுகம் அனுபவித்துவிட்டு, வேறொருத்தியை திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தில் விவாகரத்து செய்யும் கணவர்களை நாடு கடத்தி இந்தியாவில் வழக்கு தொடர தனிச்சட்டம் தேவை என பாதிக்கப்பட்ட பல பெண்கள் பலமாக வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

    47 நாட்கள் படத்தின் கதைக்களம்கூட சற்று நீளமானது என்னும் அளவுக்கு சில பெண்களின் வாழ்க்கையில் தங்களது கணவர்களுடனான திருமண பந்தம் 40 நாட்களுக்குள் முடிந்துள்ளது.

    டெல்லியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பரமிந்தர் கவுர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஏராளமான பணத்தை வரதட்சணையாக தந்து பரமிந்தர் கவுரை அவரது பெற்றோர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆசை கனவுகளுடன் தொடங்கிய இல்லற வாழ்க்கை பரமிந்தர் கவுருக்கு ஆரம்பத்தில் தேனாக இனித்தது.

    இந்நிலையில், அவரது கணவர் திருமணமான நாற்பதாவது நாளில் மேல்படிப்புக்காக கனடா சென்றார். அதன் பின்னர், மாமனார்-மாமியாரின் வசைபாடல்களுக்கும், அடி, உதை,சித்ரவதைக்கும் இலக்கானார், பரமிந்தர் கவுர்.

    நாங்கள் உன்னை வைத்துக்கொண்டு சாப்பாடு போட வேண்டும் என்றால் உன் பெற்றோரிடம் இருந்து மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாயை வாங்கிவர வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் இருக்கக்கூடாது என்று விரட்டி விட்டனர்.

    நிற்க நிழலில்லாமல் தாய்வீட்டில் அவர் ஒதுங்கி இருந்த வேளையில் மாமனாரும் மாமியாரும் ரகசியமாக கனடாவுக்கு பறந்து விட்டனர். சில நாட்களில் பரமிந்தர் கவுரை அங்கிருந்தபடியே ஒருதலைபட்சமாக விவாகரத்து செய்த அவரது கணவர் சில மாதங்களுக்கு பின்னர் மற்றொரு திருமணம் செய்து கொண்டார்.

    இதேபோல், ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஷில்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கடந்த 2010-ம் ஆண்டில் அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு, பல்லாயிரம் எதிர்கால கனவுகளுடன் புதுக்குடித்தனம் நடத்துவதற்காக கணவருடன் கலிபோர்னியா நகருக்கு சென்றார்.

    ஆனால், அங்குபோய் சேர்ந்ததும் ஷில்பாவிடம் இருந்த பணத்தையும் சில முக்கியமான ஆவணங்களையும் பறித்துக்கொண்ட அவரது கணவர், ஒரு செக்ஸ் அடிமையைவிட மோசமான முறையில் தனது உடல் சுகத்துக்கு பயன்படுத்தி கொண்டார்.

    ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்பதுபோல் தனது ஆசையும், மோகமும் தீர்ந்த பின்னர் மூன்று மாதங்களுக்கு பிறகு வீட்டிலிருந்து விரட்டி விட்டார். எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடனும் 8 வயது பெண் குழந்தையுடனும் தற்போது டெல்லியில் பெற்றோர் வீட்டில் வாழ்ந்துவரும் ஷில்பா, முன்னர் தனது கணவர்மீது டெல்லி போலீசில் புகார் அளித்திருந்தார்.

    ஆனால், அவர் இதுவரை ஒருமுறைகூட இந்தியாவுக்கு வராததால் ஷில்பாவின் புகார் கிணற்றில் போட்ட கல்லாக காவல் நிலையத்தில் புதைந்து கிடக்கிறது. தன்னை கைவிட்ட கணவர் சமீபத்தில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட விபரத்தை சமூக வலைத்தளம் மூலம் அறிந்த ஷில்பாவை போல பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதுபோல் மனைவிக்கு துரோகம் செய்து இன்னொருத்திக்கு ஆசைப்பட்டு விவாகரத்து செய்யும் கணவர்கள்மீது இன்றுவரை பெண்களை கொடுமைப்படுத்தும் இ.பி.கோ.498A மற்றும் 406 (நம்பிக்கை துரோகம்) ஆகிய சட்டப்பிரிவின்கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிக்கவோ, வெளிநாடுகளில் இருந்தபடி விவாகரத்து செய்துவிட்டு, அங்கேயே பதுங்கியவாறு உல்லாசமாக வாழ்ந்துவரும் நபர்களை நாடுகடத்தி இந்தியாவுக்கு அழைத்துவந்து சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவோ தகுந்த சட்டங்கள் ஏதும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

    கற்பழிப்பு, கொலை செய்யும் முயற்சியுடன் மூர்க்கத்தனமாக தாக்குவது, மோசடி ஆகிய கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் இதைப்போன்ற கயவர்களை தண்டிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகளின்படி வழக்கு தொடர்ந்தால் அவர்களை சுலபமாகவும், விரைவாகவும் இந்தியாவுக்கு அழைத்துவந்து தண்டிக்க முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் விரும்புகின்றனர்.

    சில கடுமையான நிபந்தனைகளுடன் வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய மசோதா முன்வைக்கப்படும் என மத்திய அரசின் மகளிர் மட்டும் குழந்தைகள் நல அமைச்சகம் முன்னர் தெரிவித்திருந்தது.

    ஆனால், அப்படி எந்த மசோதாவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் புலம்புகின்றனர்.

    இவர்களின் குமுறல்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர், இப்படி பாதிக்கப்படும்பெண்களைப்பற்றி மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மனைவிகளை கைவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 33 பேரின் பாஸ்போர்ட்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் முடக்கி வைத்துள்ளது. 8 பேரை தேடப்படும் நபராக அறிவித்து நோட்டீஸ்கள் விட்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

    மேலும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொடர்பான திருமண சட்டத்திலும் சில மாற்றங்களை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமணமான ஒருவாரத்துக்குள் கட்டாயமாக அந்த திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்ய தவறினால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    ஆனால், பெண்ணுரிமைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து வேறுவிதமாக உள்ளது. பெண்கள் தொடர்பான விவகாரங்களை கையாளுவதில் மத்திய அரசு வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இஸ்லாமிய பெண்களை முத்தலாக் முறையில் திடீரென்று விவாகரத்து செய்வதை தடுக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியே தீருவோம் என்று முரண்டுபிடிக்கும் மத்திய அரசு, வெளிநாடுவாழ் கணவர்களால் விவாகரத்து செய்யப்படும் எங்களைப்போன்ற பெண்கள் விவாகரத்தில் எந்த அக்கறையும் காட்டாதது ஏன்? என அவர்கள் கொந்தளிக்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான் என இந்த அரசு கருத வேண்டும். அவர்களை அரசும் கைவிட்டு விடக்கூடாது.

    இதைப்போன்ற பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் இந்திய அரசும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் இணைந்து செயலாற்றி, குற்றம் செய்தவர்களை இங்கு அழைத்துவந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து நாடுகளுக்கும் பொருந்துமாறு பலமான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர்கள் தீவிரமாகவும் பலமாகவும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். #Agonisedwomen #NRIhusbands
    அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசியது தொடர்பாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். #Karnataka #JanardhanaReddy
    பெங்களூரு:

    அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தார்கள்.

    இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக்கும் பதிவானது. இந்த வழக்கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும், பா.ஜனதாவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியின் உதவியை பரீத் நாடியுள்ளார். அமலாக்கத்துறை வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுவிட்டு, தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நிதி நிறுவன அதிபர் பரீத் மீது அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க தனது உதவியாளர் அலிகான் மூலம் ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தன ரெட்டி பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.

    ஜனார்த்தன ரெட்டி, உதவியாளர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனார்த்தன ரெட்டியின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

    இவ்வாறு சுனில்குமார் கூறினார்.

    இதற்கிடையில், நிதி நிறுவன அதிபருடன், ஜனார்த்தன ரெட்டி பேசும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
    குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தலை மறைவு குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை கைது செய்ய போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தலை மறைவு குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தனிப்படைகள் அமைத்து இருந்தார். அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல தலைமறைவு குற்றவாளிகளை தனிப்படையினர் கண்காணித்து தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகின்றனர். 

    இந்த நிலையில் நேற்று பூதப்பாண்டி, திருவட்டார், மணவாளக்குறிச்சி, அருமனை ஆகிய பகுதிகளில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 5 பேரை கைது செய்தனர்.

    பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளி ஒருவரை கைது செய்தனர். திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வரும், அருமனை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2 தலைமறைவு குற்றவாளிகளையும், மண வாளக்குறிச்சி பகுதியில் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    தொடர்ந்து தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
    திருப்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி தலைமறைவாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பாப்பணன் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பகுதியில் குடியிருப்பவர்களிடம் வாரம் ரூ. 100 என்ற அடிப்படையில் தீபாவளி சீட்டு நடத்தினார்கள்.

    இதில் ஏராளமானோர் பணம் செலுத்தினார்கள். 52 வாரம் முடிந்து 6,200 ரூபாய் முதிர்வு தொகை தருவதாக கணவன்-மனைவி கூறி இருந்தனர்.

    ஆனால் சீட்டு முடிவடைந்து பணம் கொடுக்க வேண்டிய நிலையில் கணவன்-மனைவி தங்கள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். அவர்களில் 15 பேர் ரூ. 6 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் தெரிவித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதால் மோசடி தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தலைமறைவான கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய இங்கிலாந்து தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது. #Agustascandal
    துபாய்:

    இந்தியாவில் ஜனாதிபதி உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய இத்தாலியில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்கள் ரூ.3,721 கோடி என விலை நிர்ணயம் செய்திருந்தனர்.

    ஆனால் இதில் இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், ஊழல் நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி விசாரணை நடத்த உத்தரவிட்டார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். அதில் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் உள்ளிட்ட 3 வெளிநாட்டினர் இடைத்தரகர்களாக செயல்பட்டனர். இதில் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சுக்கு ரூ.350 கோடி லஞ்ச பணம் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்திய கடற்படை தளபதி எஸ்.பி. தியாகி, அவருடைய 3 சகோதரர்கள், பாதுகாப்பு படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஆகியோரும் ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் துபாயில் வசித்து வந்தார். சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் ஐக்கிய அரபு அரசு அவரை கைது செய்தது. பின்னர் ஒரு மாதத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சித்தது.

    இதற்காக ஐக்கிய அரசு எமிரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. இதை விசாரித்த 3 நீதிபதிகள், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டதாக நேற்று தகவல் வெளியானது.

    ஆனால் அப்படி எந்த உத்தரவும் கோர்ட்டு பிறப்பிக்கவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

    கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு அனுப்பலாமா? என்று ஐக்கிய அரபு அரசு கோர்ட்டில் விவரம் கேட்டிருந்தது. இது சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண்ட கோர்ட்டு தனது கருத்துக்களை குறிப்பிட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது.

    இந்த அறிக்கையில் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு அனுப்பலாம் என்ற கருத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது கோர்ட்டு தீர்ப்பு அல்ல, கருத்து தான் என்பதால் அவரை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவாக கருத முடியாது என்று கூறப்படுகிறது.

    இதனால் அவர் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு இப்போது சாத்தியம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. ஒரு வேளை ஐக்கிய அரபு கோர்ட்டு உத்தரவிட்டாலும் அதை மேல்முறையீடு செய்வதற்கும் அங்கு வாய்ப்பு உள்ளது. அந்த கோர்ட்டிலும் தீர்ப்பு வந்தால் மட்டுமே அவர் நாடு கடத்தப்படுவார் என்று சட்ட நிபுணர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது. மைக்கேல் ஜேம்ஸ் வழக்கில் அவரது வக்கீலாக அமல்அல் சுபி ஆஜராகி வருகிறார்.

    அவரிடம் இதுபற்றி கேட்டபோது, தற்போது கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

    அதே நேரத்தில் அவரை நாடு கடத்தும்படி ஐக்கிய அரபு கோர்ட்டு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார். #Agustascandal

    புதுவை அருகே ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கொலையில் தலைமறைவான கணவன்-மனைவி பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியானகுயிலாப் பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்ற ரிலையன்ஸ் பாபு (வயது42). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 21-ந் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபல தாதா மணிகண்டனின் எதிராளியான ராஜ்குமாருக்கு ஆதரவாக பாபு செயல்பட்டு வந்ததால் தாதா மணிகண்டனின் கூட்டாளிகள் பாபுவை கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் பாபுவுக்கும் அவரது உறவினரான ராமுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி தாதா மணிகண்டனின் கூட்டாளிகள் பாபுவை தீர்த்துகட்டி இருக்கலாம் என போலீசார் கருதினார்கள்.

    இதையடுத்து ராமுவை போலீசார் தேடியபோது அவர் மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து ராமு வெளிநாட்டுக்கு தப்பி செல்லாத வகையில் ராமு மற்றும் அவரது மனைவியின் பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

    ×