search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aavani Festival"

    • தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தருளல், இரவு இந்திர வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.
    • 10-ம் நாள் திருவிழாவான 19-ந்தேதி காலை 7.20 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளல், அதைதொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் நவதிருப்பதி தலங்களில் 8-வது ஸ்தலமானதும், செவ்வாய் ஸ்தலமும் நிதியை இழந்த குபேரனுக்கு அவனிழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு, பின்னர் குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள்பாலித்த தலமாகும்.

    இங்கு வைத்தமாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் ஸ்ரீமதுரகவி ஆழ்வார் அவதரித்த ஸ்தலமும் ஆகும்.

    திருவிழா

    இக்கோவிலில் ஆவணி பெருந்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி 20-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தரு ளல், இரவு இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம் யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது

    கருடசேவை

    14-ந்தேதி (வியாழக்கிழமை) 5-ம் நாள் திருவிழா அன்று கருட சேவையை முன்னிட்டு வைத்தமாநிதி பெருமாள் கருடவாகனத்திலும், ஸ்ரீமது ரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 9-ம் திருவிழா நாளான 18-ந்தேதி (திங்கட்கிழமை) சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளல் நிகழ்ச்சியும், சுவாமி மதுரகவி ஆழ்வார் எதிர்கொண்டு அழைத்தல் மங்களாசனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    9-ம் திருவிழா நாளான 18-ந்தேதி அன்று மாலை 7 மணிக்கு தேர் கடாஷித்தல், பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவான 19-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 7.20 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளல், அதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்று இரவு 6 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    11-ம் திருவிழாவான (புதன்கிழமை) 20-ந்தேதி பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 6மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, இளநிலை பணியாளர் பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்க டாச்சாரி, கோவில் ஸ்தலத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • ஆவணித்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10-ம் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது.

    இந்த கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10-ம் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை நடைபெற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட த்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதி வழியாக வலம் வந்தது நிலையம் வந்தடைந்தது.

    விழாவில் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், பணியாளர்கள் ராஜ்மோகன், ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், பால்ராஜ், மாரிமுத்து, மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் காலை மற்றும் இரவில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவி லில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு அதிகாலை 4.30மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    சிறப்பு பூஜை

    தொடர்ந்து சிறப்பு யாகபூஜை, கும்பபூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் குட்டி ராஜன் வல்லவராயர் அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றிவைத்தார்.

    பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்பு கொடி மரம் தர்ப்பை புல், மலர்கள், பரிவட்டங்களால் அலங்கரிக்கப்பட்டு சோடச தீபாராதனை நடந்தது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நடராஜன் வல்லவராயர், சாம்ராஜ் முருகன், சிவக்குமார், மணி,செந்தூர் சதிஷ், ராஜேஷ், நாகராஜன், திருப்பணி கட்டளைதாரர் அய்யப்பன் அய்யர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருவிழா இன்று தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் காலை மற்றும் இரவில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். இரவு கோவிலில் பக்திச் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்

    ×