search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aathoor"

    • குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வருவதாக கூறி ஸ்டோனா மாயமானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரித்து காணாமல் போனவர்களை தேடி வருகிறார்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் எடிசன் (வயது 58). இவரது மகள் ஸ்டோனா (26). இவரது கணவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை செய்து வருகிறார்.இதனால் தந்தை வீட்டிலேயே ஸ்டோனா வசித்து வருகிறார். இவர்களுக்கு 6, 5 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று காலை குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வருவதாக கூறி ஸ்டோனா மாயமானார். எனவே தனது மகளையும், 2 குழந்தைகளையும் கண்டுபிடித்து தருமாறு எடிசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவ் வழக்கை பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரித்து காணாமல் போனவர்களை தேடி வருகிறார்.

    ×