search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "a raja"

    • தமது டுவிட்டர் பதிவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துதே குறிக்கோள்.

    இந்து மதம் குறித்த திமுக எம்.பி.ஆ.ராசாவின் பேச்சை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  

    அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:

    மன்னிக்கவும், இது தமிழ்நாட்டின் அரசியல் பேச்சு நிலை. திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

    • 2ஜி அலைக்கற்றை வெறும் 30 'மெகா ஹெர்ட்ஸ்'தான் ஏலம் விடப்பட்டது.
    • 2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது.

    புதுடெல்லி :

    டெல்லியில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வனஉயிர் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கிடையே, புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் உள்ளிட்ட சரணாலய பகுதிகளில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் எந்தவித கட்டுமான பணிகளும், வளர்ச்சிப்பணிகளும் இருக்கக்கூடாது என ஏன் ஒரு சட்டத்தை வகுக்கக்கூடாது? என கேட்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதனால் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைமத்திய வனத்துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர் இதுகுறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதாக உறுதி தந்து இருக்கிறார்.

    5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது.

    2ஜி அலைக்கற்றை வெறும் 30 'மெகா ஹெர்ட்ஸ்'தான் (அதிர்வெண் அளவு) ஏலம் விடப்பட்டது. அதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் கொடுத்தபோது ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் அறிக்கை அளித்தார்.

    2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது. 2ஜி-யில் வெறும் குரல்தான் சென்றது. 3ஜி-யில் வீடியோ வந்தது. இப்போது 5ஜி-யில் எந்த ஒரு இணைய தேடுதலாக இருந்தாலும் ஒரு நொடியில் வந்துவிடும்.

    இந்த திறன் அடிப்படையில் பார்த்தால் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.6 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. அப்படியானால் திட்டமிடுதலில் மோசமா? நாலைந்து கம்பெனிகளோடு சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்ததா?. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

    2ஜி-க்கும், 5ஜி-க்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே எவ்வளவு பெரிய மோசடியை வினோத்ராய் செய்திருக்கிறார் என்பது தெரியும். அவர் யாருக்காக இதை செய்து இருக்கிறார்?. ஒரு ஆட்சி மாற்றத்துக்காக அவரது பின்னால் யார் யாரெல்லாம் இருந்தனர்? என்பதை விசாரிக்க வேண்டும்.

    இதற்கு அரசு முன்வரவில்லை என்றால், இந்த அரசு நிச்சயமாக மாறும். அப்படி மாறும்போது அடுத்து வருகிற அரசாங்கமாவது விசாரித்து நாட்டுக்கு உண்மையை சொல்ல வேண்டும். இது ஒரு மிகப்பெரிய மோசடி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார். #araja #dmkalliance
    பெரம்பலூர்:

    தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக  வாக்குப்பதிவு தடைப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு. 

    நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அரசியல் சாசன சட்டப்படி  உருவாக்கப்பட்ட தன்னாட்சி சுதந்திர அமைப்புகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், நீதித்துறை உள்ளிட்டவற்றை தனது சுய லாபத்துக்காக  எதிர்க்கட்சியினர் மீது ஏவி விடும் மோசமான அரசியல் தந்திரத்தை கையாள்கின்றனர்.

    இந்த அமைப்புகளின் செயல்பாடு பாரபட்சமானதாக உள்ளது. இந்த அரசாங்கத்திடம் அராஜகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும், மோடி அரசுக்கும் எதிராக பேரலை வீசுகிறது. அதனால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளே அமோக வெற்றி பெறும் என்றார். #araja #dmkalliance
    முதல்-அமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #dmk #raj #edappadipalanisamy
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று பேசினார். அப்போது அவர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் அணி துணை செயலாளர் துரைபெரியசாமி பெரம்பலூர் டவுன் போலீசில் இன்று புகார் மனு கொடுத்தார். அதில் முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசிய தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

    இதையடுத்து பெரம்பலூர் போலீசார் ஆ.ராசா மீது 503(பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்), 504(அவதூறாக பேசுதல்), 505 (அவதூறாக பேசி மனதை புண்படுத்துதல்), 506 (அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

    மேலும் இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஆ.ராசா பேசிய ஆடியோ, வீடியோ ஆதாரங்களை திரட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #dmk #raj #edappadipalanisamy
    மகாபாரத கண்ணனை விட கருணாநிதி ஆளுமை மிக்க தலைவர் என முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ARajaControversy #KarunanidhiBirhday
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்துகொண்டு பேசும்போது, மகாபாரத கதையைச் சொல்லி பகவான் கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமைமிக்கவர் என குறிப்பிட்டார். விழாவில் ஆ.ராசா பேசியதாவது:-

    மகாபாரத்தில் ஒரு நிகழ்வு எல்லோருக்கும் தெரியும். பஞ்சபாண்டவர்களில் வேதம் தெரிந்தவன், அதிகமாக கற்றவன் சகாதேவன்.  ஒருமுறை பஞ்சபாண்டவர்களுக்கு கண்ணன் ஒரு சோதனை வைத்தார். அப்போது, ‘எல்லோரும் என்னை வணங்குகிறீர்கள். நான் பல வடிவங்களாக விஸ்வருபம் எடுக்கும்போது, பல பிம்பங்களாக காட்சியளிக்கும்போது உங்கள் ஐவரில் யார் என் மூலத்திருவடிகளை பற்றியிருக்கிறீர்களோ அவர்தான் என் மீது உண்மையான பக்தி உள்ளவர்’ என்று போட்டி வைத்தார்.

    பஞ்சபாண்டவர்கள் தனித்தனியாக சென்று பிடித்துப் பார்த்தார்கள். கடைசியாக சகாதேவன் தான் கண்ணனின் மூலத்திருவடியை சிக்கென பற்றிக்கொண்டான் என்று மகாபாபரத்தில் உள்ளது.



    இப்போது கலைஞரின் திருவடியை, முழு பிம்பத்தை எல்லோரும் போட்டி போட்டு பிடித்துகொண்டிருக்கிறார்கள். யார் பிம்பத்தை யார் ஒரிஜினலை பிடித்தார் என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் கண்ணனை விட பிம்பம் அதிகமாக உள்ள ஒரு ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி என்பதால் மூலத்திருவடியை பிடிக்க முடியவில்லை.

    இவ்வாறு ராசா பேசினார். #ARajaControversy #KarunanidhiBirhday




    ×