search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ZIMvsIND"

    • 2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வேயில் இந்தியா டி20 தொடரில் விளையாடுகிறது.
    • ஐந்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் 3 போட்டிகள் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    இதனையடுத்து ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. ஐ.பி.எல். போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடுகிறது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது.

    2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வேயில் இந்தியா டி20 தொடரில் விளையாடுகிறது. ஐந்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போட்டிகள் ஜூலை 6, 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். 

    • ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது.
    • இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசினார்கள்.

    ஹராரே: 

    ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்நாட்டின் ஹராரே நகரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

    இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், ஸ்விங் மற்றும் வேகப் பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் இருந்தது என்றார். இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசியதை பார்க்க சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

    நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம், காயங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நான் களத்தில் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விளையாட்டிலிருந்து விலகி இருப்பது கடினம் என்றும்  அவர் கூறினார். நாங்கள் இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, நாங்கள் தொடர்ந்து விளையாட விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    • முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே- இந்தியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் ஷிகர் தவான் 88 ரன்களும், ஷூப்மான் கில் 82 ரன்களும் விளாச, இந்தியா 30.5 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 20ம் தேதி நடைபெறுகிறது.

    • வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
    • 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

    ஹராரே:

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிலைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை கைப்பற்றி, ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் ஜிம்பாப்வே அணி சற்று நிதானமாக ஆடியது. கேப்டன் ரெஜிஸ் 35 ரன்களும், பிராட் ஈவன்ஸ் 33 ரன்களும், ரிச்சர்டு 34 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் ஜிம்பாப்வே, 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    6 மாதத்திற்கு பிறகு பார்முக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

    • ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
    • 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கிறது.

    ஹராரே:

    லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது.

    இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை ( 18-ந்தேதி) நடக்கிறது.

    ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டி யிலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கிறது.

    கடைசியாக 2016-ம் ஆண்டு ஜிம்பாப்வே பயணத்தின் போது இந்திய அணி 3 ஒருநாள் போட்டி களிலும் வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    காயத்தில் இருந்து குணமடைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் ராகுலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் அவர்கள் கடைசியாக சர்வதேச போட்டியில் ஆடினார்கள்.

    இதனால் இருவரும் இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

    கேப்டன் ராகுலும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ரோகித் சர்மா , ரிஷப் பண்ட் , வீராட் கோலி, பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. சஞ்சு சாம்சன் , இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவாவர். வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்ததால் அவர் இடத்துக்கு ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்திய அணி சமீபத்திய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் , 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    ஜிம்பாப்வே அணி சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ரெஜிஸ் சகபவா தலைமையிலான ஜிம்பாப்வே அணி தனது முழு திறமையை வெளிப்படுத்த கடுமையாக போராடும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 64-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 63 ஆட்டத்தில் இந்தியா 51-ல், ஜிம்பாப்வே 10ல் வெற்றி பெற்று உள்ளன.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், அவேஷ்கான், ஷபாஸ் அகமது

    ஜிம்பாப்வே: ரெஜிஸ் சகபவா (கேப்டன்), சிக்கந்தர் ரசா, மில்டன் ஷிம்பா, தடிவான்ஷே, வெஸ்லி, ரியான் பர்ல், தனகா சிவங்கா, பிரட் இவான்ஸ், லுகே ஜாஸ்வே, இன்னோசன்ட் கய்யா, கைய்டினோ, கிளைவ் மடானே, ஜான் மகாரா, முன்யோங்கா, ரிச்சர்டு நகர்வா, விக்டர், டொனால்டு டிரிபினோ.

    ×