search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ZIMvIND"

    • 2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வேயில் இந்தியா டி20 தொடரில் விளையாடுகிறது.
    • ஐந்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் 3 போட்டிகள் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    இதனையடுத்து ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. ஐ.பி.எல். போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடுகிறது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது.

    2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வேயில் இந்தியா டி20 தொடரில் விளையாடுகிறது. ஐந்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போட்டிகள் ஜூலை 6, 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். 

    • முதலில் ஆடிய இந்தியா 289 ரன்களை எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 276 ரன்களை எடுத்தது.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய ஷுப்மான் கில் சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் முதல் சதம் அடித்தார். அவர் 130 ரன்னில் வெளியேறினார். இஷான் கிஷன் அரை சதமடித்து 50 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் 40 ரன்னிலும், தவான் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. சீரான இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்கள் வீழ்ந்தது.

    ஆனாலும் சிக்கந்தர் ராசா தனி ஆளாகப் போராடினார். அவர் சதமடித்து அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு சிக்கந்தர் ராசா, எவான்ஸ் ஜோடி

    104 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    சிக்கந்தர் ராசா 115 ரன்னில் ஆட்டமிழந்தார். சீன் வில்லியம்ஸ் 45 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

    இந்தியா சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய இந்தியா 289 ரன்களை எடுத்துள்ளது.
    • ஷுப்மான் கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுல் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் அரை சதமடித்து 50 ரன்னில் அவுட்டானார்.

    நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் கில்லின் முதல் சதம் இதுவாகும்.

    அவர் 130 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

    ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.
    • ஷுப்மான் கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் 40 ரன்னும், தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 140 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் அரை சதமடித்து அவுட்டானார்.

    நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் கில்லின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்தில், இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.

    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

    இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிராஜ், பிரசித் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதில் தீபக் சாகர், ஆவேஷ் கான் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

    ஹராரே ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து அந்த அணியை நிலைகுலைய வைத்தனர். இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குகிறார்கள். அதேசமயம் கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் ஜிம்பாப்வே வீரர்கள் விளையாடுவார்கள். 

    • முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
    • இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வேகமாக சாய்த்தனர்.

    ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து அந்த அணியை நிலைகுலைய வைத்தனர்.

    இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் அகமது, வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வெல்லும் நோக்கத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    • ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடர்ந்து 14 வெற்றியை பதிவு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 161 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து ஆடிய இந்தியா 167 ரன் எடுத்து வென்றது.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ரியான் பர்ல் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ராகுல் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். இஷான் கிஷன் 6 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 25 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

    • ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 13 வெற்றியை பதிவு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 161 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட்கள் விழுந்தன.

    சீன் வில்லியம்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினார். அவர் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ரியான் பர்ல் பொறுப்புடன் ஆடி 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபக் சாஹருக்கு பதிலாக சர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணி வீரர்கள் விபரம்:-

    ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், கே.எல். ராகுல்(கே), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

    ஜிம்பாப்வே அணி வீரர்கள் விபரம்:-

    இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியுச்சி, தனகா சிவாங்கா.

    ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
    • காயம் காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார்.

    புதுடெல்லி:

    ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

    முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    இந்நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    பெங்காலை சேர்ந்த ஷாபாஸ் 18 முதல் தர போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 1041 ரன்கள் எடுத்துள்ளார். 57 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவர் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
    • காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை சுந்தர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 18-ம் தேதி (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது. நேற்று முன்தினம் ஹராரே சென்றடைந்த இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், இந்த தொடரில் அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக விலகி உள்ளார். மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது.

    2022 பிப்ரவரியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வெலிங்டன் மசகட்சா இடம்பெறவில்லை.
    • சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்று ஜிம்பாப்வே கைப்பற்றியதால் நம்பிக்கையுடன் உள்ளது.

    ஹராரே:

    இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வருகிற 18-ந்தேதி ஹராரேவில் நடக்கிறது.

    இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. துணை கேப்டன் லோகேஷ் ராகுல் காயம் மற்றும் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டதால் ஜிம்பாப்வே தொடரில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. கேப்டனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டு இருந்தார்.

    இதற்கிடையே லோகேஷ் ராகுல் குணமடைந்து முழு உடல் தகுதி பெற்றதால் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷிகர் தவான் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டன் கிரேக் எர்வின் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்கு பதில் கேப்டனாக ரெஜிஸ் சகாப்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணி வீரர்கள் விபரம் வருமாறு:-

    ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), சிக்கந்தர் ராசா, இன்னசென்ட் கையா, கைடானோ, வெஸ்சி மாதேவெரே, ரியான் பர்ல், தனகா ஷிவாண்டா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, கிளைவ் மாடண்டே, ஜான் மசோரா, முன்யோங்கா, ரிச்சர்ட் நகர்வா, ரிக்டர் நகராவா, நியுச்சி, மில்டன் ஷூம்பா, டிரிபாகோ.

    காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வெலிங்டன் மசகட்சா இடம்பெறவில்லை. சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்று ஜிம்பாப்வே கைப்பற்றியதால் நம்பிக்கையுடன் உள்ளது.

    ×